தண்டவாளத்தில் விரிசல்! பெரும் விபத்தில் இருந்து தப்பியது வைகை எக்ஸ்பிரஸ்!!
மணப்பாறை: ரயில்வே தண்டவாளத்தில் விரிசல் இருப்பது குறித்து
முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டுவிட்டதால் பெரும் விபத்தில் இருந்து வைகை
எக்ஸ்பிரஸ் ரயில் இன்று தப்பியது.
மதுரையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் காலை 6.45 மணிக்கு
புறப்பட்டு திருச்சி வழியாக சென்னை செல்கிறது. இன்று காலை மதுரையில்
இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.
மணப்பாறையை ரயில் நெருங்கி வந்த போது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு
இருந்ததை பராமரிப்பு ஊழியர்கள் கண்டுபிடித்தனர். அவர்கள் இதுபற்றி உயர்
அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்
உடனே வைகை எக்ஸ் பிரஸ் டிரைவருக்கு தகவல் தெரிவித்து ரயிலை நிறுத்துமாறு கூறினர்.
ஆனால் வைகை எக்ஸ்பிரஸோ தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்ட இடத்தின் அருகே
வந்து விட்டது. இதையடுத்து டிரைவர் உடனே பிரேக் போட்டு ரயிலை நிறுத்தினார்.
தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்ட பகுதியில் ஏறியபடி நின்றது.
தண்டவாள விரிசல் குறித்து ஊழியர்கள் சரியான நேரத்தில் தெரிவித்து
ரயில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 30 நிமிட நேர
தாமதத்துக்குப் பின் ரயில் புறப்பட்டுச் சென்றது.
No comments:
Post a Comment