Thursday, October 31, 2013

Do you Want to Change Your Facebook theme? - www.tnfinds.com - Best Site in the World

Do you want to change the theme of your Facebook Profile

Facebook Theme Creator allows you to create themes for decorating your Facebook profile. Please note that this tool is an extension for Chrome. If you're tired of the blue and white theme imposed by Facebook, this tool will allow you to do slightly more interesting things with your profile and quickly create brand new themes.

read more : http://www.tnfinds.com/comhack.html
 


More News Click Here................... 

Wednesday, October 30, 2013

இலங்கை சிறையில் இருந்த 19 புதுக்கோட்டை மீனவர்கள் விடுவிப்பு - www.tnfinds.com - Best Site in the World

இலங்கை சிறையில் இருந்த 19 புதுக்கோட்டை மீனவர்கள் விடுவிப்பு

கொழும்பு: இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 19 பேர் விடுதலை செய்யப் பட்டுள்ளனர். இம்மாதம் 14- ஆம் தேதி, மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றத்திற்காக அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டனர். இலங்கை சிறையில் இருந்த 19 புதுக்கோட்டை மீனவர்கள் விடுவிப்பு இந்நிலையில், கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 19 பேரும் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இலங்கை சிறையில் இருந்த 19 புதுக்கோட்டை மீனவர்கள் விடுவிப்பு - www.tnfinds.com - Best Site in the World

இலங்கை சிறையில் இருந்த 19 புதுக்கோட்டை மீனவர்கள் விடுவிப்பு

எல்லை தாண்டி மீன்பிடிப்பு: தூத்துக்குடி அருகே 24 இலங்கை மீனவர்கள் கைது - www.tnfinds.com - Best Site in the World

எல்லை தாண்டி மீன்பிடிப்பு: தூத்துக்குடி அருகே 24 இலங்கை மீனவர்கள் கைது

தூத்துக்குடி: எல்லை தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 24 பேர் தூத்துக்குடி அருகே கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி கடற்பரப்பில் தென்பகுதியில் 18 கடல் மைல் தொலைவில் 4 படகுகளில் 24 இலங்கை மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இதுபற்றிய தகவல் கடலோர காவல்படைக்குத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடந்து 24 இலங்கை மீனவர்களையும் கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

சட்டசபையில் இருந்து தேமுதிக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு - www.tnfinds.com - Best Site in the World

சட்டசபையில் இருந்து தேமுதிக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு


தமிழக சட்டசபையில் இருந்தால் தேமுதிக எம்.எல்.ஏக்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். இன்று தமிழக சட்டசபையில் விவாதம் நடைபெற்ற போது தங்களுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் அதிமுக உறுப்பினர்கள் தங்களை கிண்டல் செய்வதாகவும் தேமுதிக எம்.எல்.ஏக்கள் புகார் கூறினர். 
 
 
அத்துடன் அதிமுக எம்.எல்.ஏக்களின் செயல்பாட்டைக் கண்டித்து தேமுதிக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 
 
 
 ஏற்கெனவே திமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து 3 நாட்கள் வெளியேற்றப்பட்டதால் நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். 
 
 
இந்நிலையில் இன்று தேமுதிக எம்.எல்.ஏக்களும் சபையைவிட்டு வெளியேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர பஸ் விபத்து: எரிந்த தாயின் மடியில் கருகிய நிலையில் கிடந்த குழந்தை - www.tnfinds.com - Best Site in the World

ஆந்திர பஸ் விபத்து: எரிந்த தாயின் மடியில் கருகிய நிலையில் கிடந்த குழந்தை


பெங்களூரில் இருந்து ஹைதராபாத் சென்ற சொகுசு பேருந்து தீப்பிடித்ததில் 45 பேர் உடல் கருகி பலியாகினர். அந்த பேருந்தில் எரிந்து கிடந்த தாயின் மடியில் கருகிய நிலையில் கிடந்த குழந்தையை பார்த்து மீட்பு பணியினர் நொந்துவிட்டனர். பெங்களூரில் இருந்து தனியாருக்கு சொந்தமான சொகுசு பேருந்து ஒன்று நேற்று இரவு 10 மணிக்கு ஹைதராபாத் கிளம்பியது. பேருந்து இன்று காலை 5.10 மணிக்கு ஆந்திர மாநிலம் மஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள பெங்களூர்-ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது தடுப்பு சுவர் மீது மோதியது. இதில் பேருந்தின் டீசல் டேங்க் தீப்பிடித்து எரிந்தது. ஆந்திர பஸ் விபத்து: எரிந்த தாயின் மடியில் கருகிய நிலையில் கிடந்த குழந்தை இதில் பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த 45 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். இதற்கிடையே பேருந்தின் டிரைவர், கிளீனர் மற்றும் 4 பயணிகள் பேருந்தில் இருந்து வெளியேறி உயிர் தப்பிவிட்டனர். பலியானவர்களில் 5 பேர் பெங்களூரில் உள்ள ஐபிம், கூகுள் உள்ளிட்ட ஐடி நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள். அவர்கள் தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாட ஹைதராபாத்துக்கு சென்றனர். இந்நிலையில் பேருந்தில் இருந்து 45 உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்து கிடந்த உடல்களை பார்த்து மனம் நொந்தனர். அதிலும் எரிந்த நிலையில் இருந்த தாயின் மடியில் கருகிய குழந்தை கிடந்ததை பார்த்து மீட்பு படையினர் பதைத்துவிட்டனர். இந்த பேருந்தில் பயணம் செய்தவர்களில் 33 பேர் ஆன்லைனில் டிக்கெட்டை முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேவர் குருபூஜை: பசும்பொன்னில் அமைச்சர்கள் காரை முற்றுகையிட்டு பொதுமக்கள் கல்வீச்சு, 144 தடை உத்தரவை போட்டுவிட்டு எதற்காக அஞ்சலி செலுத்த வந்தீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் - www.tnfinds.com - Best Site in the World

தேவர் குருபூஜை: பசும்பொன்னில் அமைச்சர்கள் காரை முற்றுகையிட்டு பொதுமக்கள் கல்வீச்சு 144 தடை உத்தரவை போட்டுவிட்டு எதற்காக அஞ்சலி செலுத்த வந்தீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் கலந்து கொள்ள வந்த அமைச்சர்களின் கார் மீது பொதுமக்கள் கல் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 106வது பிறந்தநாள் மற்றும் 51வது குருபூஜை கொண்டாடப்படுகிறது. குரு பூஜையின் இரண்டாவது நாளான இன்று தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், காமராஜ் உள்ளிட்டோர் தேவரின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அமைச்சர் செல்லூர் கே. ராஜு மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு காரில் சென்றுள்ளார். அவருடன் பரமக்குடி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான சுந்தரராஜனும் சென்றுள்ளார். அவர்கள் சென்ற காரை திடீர் என்று பொதுமக்கள் மறித்து 144 தடை உத்தரவை போட்டுவிட்டு எதற்காக அஞ்சலி செலுத்த வந்தீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் குறுக்கிட்டு பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிலர் அமைச்சர்களின் கார் மீது கற்கள் மற்றும் கம்புகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீசார் அமைச்சர்களை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tuesday, October 29, 2013

111 கிமீ மைலேஜ் காருக்கு ஏக டிமான்ட்: விழி பிதுங்கி நிற்கும் ஃபோக்ஸ்வேகன் - www.tnfinds.com - Best Site in the World

111 கிமீ மைலேஜ் காருக்கு ஏக டிமான்ட்: விழி பிதுங்கி நிற்கும் ஃபோக்ஸ்வேகன்


லிட்டருக்கு 111 கிமீ மைலேஜ் தரும் ஃபோக்ஸ்வேகன் ஹைபிரிட் காருக்கு எதிர்பார்க்காத அளவு முன்பதிவு வருகிறதாம். இதனால், ஃபோக்ஸ்வேகன் செய்வதறியாது திக்குமுக்காடி நிற்கிறது. கடந்த மார்ச் மாதம் நடந்த ஜெனீவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த இந்த கார் பார்வையாளர்களை மட்டுமின்றி உலக அளவில் ஆட்டோமொபைல் துறையினரையும், கார் ஆர்வலர்களையும் திரும்பி பார்க்க வைத்தது. அதிநவீன தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த காருக்கான வரவேற்பை ஃபோக்ஸ்வேகன் நிறுவனமே எதிர்பாராத வகையில் இருக்கிறது.

அலுமினியம் மற்றும் சிஆர்எஃப்பி எனப்படும் பிளாஸ்டிக் பாகங்கள் பயன்படுத்தி கைகளால் தயாரிக்கப்படுகின்றன. எனவே, ஜெர்மனியின் ஓஸ்னாபுரூக் ஆலையில் மொத்தம் 200 எக்ஸ்எல்1 கார்களை மட்டுமே தயாரிக்க ஃபோக்ஸ்வேகன் முடிவு செய்துள்ளது. ஆனால், இந்த காரை வாங்குவதற்கு முண்டியடித்துக் கொண்டு முன்பதிவு நடக்கிறதாம். எனவே, முன்பதிவு செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கார்களை தயாரித்து கொடுக்க இயலாத நிலையில் ஃபோக்ஸ்வேகன் உள்ளது.

முன்பதிவை பார்த்து திகைப்பில் ஆழ்ந்துள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்களை தேர்வு செய்து கார்களை விற்பனை செய்வதற்கான முயற்சிகளை துவங்க உள்ளது.

அதிக மைலேஜ் தருவதற்காக தங்கு தடையின்றி செல்லும் விதத்தில் பிரத்யேக ஏரோடைனமிக் டிசைனை கொண்டிருக்கிறது. இலகு எடை கொண்ட பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், இந்த கார் வெறும் 795 கிலோ மட்டுமே எடை கொண்டது.

இந்த கார் 100 கிலோமீட்டர் வேகத்தில் சீராக செல்வதற்கு 8.4 பிஎஸ் பவர் போதுமானது. அந்த அளவுக்கு சிறப்பான காற்றியக்கவியல் தத்துவத்தில் வடிவமைத்துள்ளனர்.

இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். 0-100 கிமீ வேகத்தை 12.7 வினாடிகளில் கடந்துவிடும்.

ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் இந்த மைலேஜை எக்ஸ்எல்1 தருகிறது. 48 பிஎஸ் பவரை அளிக்கும் 2 சிலிண்டர் டீசல் எஞ்சினும், 27 பிஎஸ் பவரை அளிக்கும் எலக்ட்ரிக் மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளன.

ஹைபிரிட் நுட்பத்தின் அடிப்படையில், கணக்கீடுகளின்படி 0.9 லிட்டர் டீசலுக்கு 100 கிமீ மைலேஜை இந்த கார் சாத்திப்படுத்தியுள்ளது.

இந்த கார் கிலோமீட்டருக்கு வெறும் 21 கிராம் மட்டுமே கார்பனை வெளியிடும் என்பதால் சுற்றுச் சூழலுக்கு உகந்ததாக கருதலாம்.

3,888 மிமீ நீளம், 1,665 மிமீ அகலம் மற்றஉம் 1,153 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. போலோவைவிட குறைவான உயரத்தை கொண்டிருக்கும்.

கடந்த 2002ம் ஆண்டு முதன்முறையாக கான்செப்ட் மாடலாக ஃபோக்ஸ்வேகன் இந்த காரை அறிவித்தது. கடந்த மார்ச் மாதம் ஜெனீவா மோட்டார் ஷோவில்தான் இந்த கார் உற்பத்தி நிலைக்கு செல்ல இருப்பதாக அறிவித்தது.

'உங்க புது சட்டம் அஜீத்துக்கும் சந்தானத்துக்கும் பொருந்தாதா?' - நடிகைகள் காட்டம் - www.tnfinds.com - Best Site in the World

'உங்க புது சட்டம் அஜீத்துக்கும் சந்தானத்துக்கும் பொருந்தாதா?' - நடிகைகள் காட்டம்


நடிகைகள் பட விழாக்களுக்கு வரலேன்னா மட்டும் இவ்வளவு கெடுபிடி காட்டும் நீங்கள், பட விழாக்கள் பக்கமே வராத நடிகர் அஜீத் மற்றும் சந்தானத்துக்கு மட்டும் பொருந்தாதா என கேள்வி எழுப்பியுள்ளனர் முன்னணி நடிகைகள். தமிழ் சினிமாவில் தாங்கள் நடித்த படங்களின் இசை வெளியீடு மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்ட நாயகிகள் கலந்து கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு பிரதானமாக எழுந்துள்ளது. நாயகிகள் இல்லாததால் போதிய விளம்பரம் கிடைக்காமல் போவதால், அவர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் படத்தில் நடிக்கத்தான் சம்பளமே தவிர, இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கல்ல. அந்த கால்ஷீட்டை நாங்கள் வேறு படத்துக்கு தரவேண்டியிருக்கிறது என நடிகைகள் தரப்பில் கூறிவந்தனர். இந்த நிலையில், விழாக்களில் கலந்து கொள்ளாத நடிகைகளின் சம்பளத்தில் 20 சதவீதத்தை பிடித்தம் செய்து கொள்வதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு நடிகைகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க தனி சம்பளம் மற்றும் வந்து போக, தங்க ஆகும் செலவுகளை தயாரிப்பாளர்தான் ஏற்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் எங்களால் வரமுடியாது என்று கூறியுள்ளனர். இல்லாவிட்டால் தயாரிப்பாளர் பிடித்தம் செய்வதாகக் கூறும் 20 சதவீதத்தை தங்கள் சம்பளத்தில் ஏற்ற வேண்டிய நிலையை தயாரிப்பாளர் சங்கம் உருவாக்கியுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத முன்னணி நடிகை ஒருவர் தெரிவித்தார். 'ஒரு கோடி சம்பளம் கேட்டதற்கு பதில் 1 கோடியே இருபது லட்சம் என சம்பளம் பேச வேண்டியதுதான்,' என சக நடிகைகள் கமெண்ட் அடித்ததாக அவர் தெரிவித்தார். அஜீத், சந்தானத்தையும் கூப்பிட வேண்டியதுதானே... "நடிகைகளிடம் மட்டும் இவ்வளவு கெடுபிடி காட்டும் தயாரிப்பாளர் சங்கம், பட விழாக்கள், பிரஸ் மீட்டுகள், விளம்பர நிகழ்ச்சிகள் என எதற்குமே எட்டிப் பார்க்காத அஜீத், சந்தானம் போன்றவர்களை மட்டும் விட்டுவிடுவது ஏன்? அவர்கள் மட்டும் விதிவிலக்கா... அவர்கள் சம்பளத்தில் 20 சதவீதம் குறைக்கத் தயாரா? இவர்களைப் போலத்தான் ஒரு நடிகை கலந்து கொள்ளாமல் போக ஆயிரம் காரணங்கள் உள்ளன", என்றும் குமுறியுள்ளனர் நடிகைகள். படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும்போதே, படத்தின் விழாக்கள், விளம்பர நிகழ்ச்சிகள் எதற்கும் தன்னை அழைக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்து, அதை எழுத்துப்பூர்வமாகவும் எழுதி வாங்கிக் கொண்டுதான் நடிக்கிறார் அஜீத் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதெல்லாம் சந்தானமும் அஜீத் வழியைத்தான் பின்பற்றுகிறாராம்!

பகலில் காலேஜுக்கு.. ராத்திரியில் லாட்ஜுக்கு.. இது நாக்பூரில்! - www.tnfinds.com - Best Site in the World

பகலில் காலேஜுக்கு.. ராத்திரியில் லாட்ஜுக்கு.. இது நாக்பூரில்!


நாக்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இளம் பெண்கள், பகலில் கல்லூரிப் பெண்கள் போலவும், ராத்திரியானால் விபச்சாரத்திலும் ஈடுபட்டு பரபரப்பைக் கிளப்பி வருகின்றனராம். இவர்களில் பெரும்பாலானவர்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் என்பதுதான் பரபரப்புக்கு முக்கியக் காரணம். இதற்கு முன்பு வரை நாக்பூரில் உள்ள கங்கா ஜமுனா பகுதியைத்தான் அந்த ஊரின் சிவப்பு விளக்குப் பகுதியாக அனைவரும் பார்த்து வந்தனர். ஆனால் தற்போதோ, நாக்பூரைச் சுற்றியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த இளம் பெண்கள் விபச்சாரத்திற்காக நாக்பூரை முற்றுகையிட்டு வருகின்றனராம்.

படிக்க வரும் போது 

வாடி, ஹிங்கனா, கல்மேஸ்வர், கம்ப்டீ உள்ளிட்ட நாக்பூரைச் சுற்றியுள்ள சிறிய ஊர்கள், கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான இளம் பெண்கள் நாக்பூரில் கல்லூரியில் படிக்க வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்களில் கல்லூரி முடிந்ததும் இரவில் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனராம்.

வேலை பார்க்க வரும்போதும் 

அதேபோல பல இளம் பெண்கள் வேலை பார்ப்பதாக கூறி நாக்பூரில் வந்து தங்கி அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனராம்.


செலவுக்காகவும், ஆடம்பரத்திற்காகவும் 

இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது படிப்புச் செலவு, குடும்பச் செலவுக்காக விபச்சாரத்தில் ஈடுபடுவதாக கூறுகின்றனர். ஆனால் பலர் ஆடம்பரமாக வாழ்க்கை நடத்த விபச்சாரத்தை நாடுவதாக கூறுகின்றனர்.

பெரும்பாலானவர்களுக்கு இரட்டை வாழ்க்கைதான்... 

நாக்பூரைச் சேர்ந்த வர்ஷா பாக்ளே என்ற சமூக சேவகி கூறுகையில், பல இளம் பெண்கள் தொலை தூரத்திலிருந்து வந்து நாக்பூரில் தங்குகின்றனர். படிக்கவும், வேலை பார்க்கவும் வரும் இவர்கள் தங்களது குடும்பத்தைக் காக்கவும், தங்களது செலவுகளுக்காகவும் இரட்டை வாழ்க்கை நடத்துகின்றனர்.

18 முதல் 25 வயதுக்குள் 

இவர்களுக்கு 18 முதல் 25 வயதுக்குள்தான் உள்ளது. அதேசமயம், இவர்கள் அனைவரும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறி விட முடியாது. நல்ல வசதி படைத்த பெண்களும் இவர்களில் அடக்கம். இவர்கள் ஆடம்பரமான வாழ்க்கைக்காகவும், ஜாலிக்காகவும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.

நாகரீகமான பெண்களும் 

இவர்களில் பலரது குடும்பங்கள் நாகரீகமானவை, சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவை. வசதியானவையும் கூட. இவர்களும் விபச்சாரத்தில் ஈடுபடுவதுதான் ஆச்சரியம் தருகிறது.

கலை, அறிவியல்.. 

விபச்சாரம் விபச்சாரத்தில் ஈடுபடும் பல இளம் பெண்கள் கலை, அறிவியல், வணிகப் படிப்புகளைப் படித்து வருபவர்கள் ஆவர்.

பணத்தின் மீது மோகம் 

இந்தப் பெண்களுக்கு பணத்தின் மீதான மோகம் அதிகமாக இருக்கிறது. கை நிறையப் பணத்தைப் பார்த்து விரும்பியே இந்த தொழிலுக்கு வருகின்றனர். பலர் நேரடியாக வாடிக்கையாளர்களிடம் பணத்தைப் பெறுகின்றனர். சிலர் புரோக்கர்கள் மூலமாக பணத்தைப் பெறுகின்றனர்.

ஒவ்வொருரிடமும் ஏகப்பட்ட சிம் கார்டுகள் 

இந்தப் பெண்கள் ஒவ்வொருவரும் ஏகப்பட்ட சிம் கார்டுகளை வைத்துள்ளனர். குறைந்தது 5 முதல் 6 சிம் கார்டுகளை இவர்கள் வைத்துள்ளனர். தங்களுக்குப் பிடித்த வாடிக்கையாளர்களிடம் எண்களையும் கொடுத்துக் கொள்கின்றனர்.

ஒரு இரவுக்கு 10,000 வரை 

இவர்கள் ஒரு இரவுக்கு குறைந்தது 6000 வசூலிக்கின்றனர். சிலர் ரூ. 10,000 வரை கூட சம்பாதிக்கின்றனர்.

மணிக் கணக்கிலும் ரேட்... 

சில பெண்கள் மணிக்கணக்கிலும் ரேட் பேசி வருகின்றனர். அதாவது ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1500 முதல் 2000 வரை இவர்கள் வசூலிக்கின்றனர்.

வாரத்திற்குக் குறைந்தது 2 முறை... 

இந்தப் பெண்கள் குறைந்தது வாரத்திற்கு 2 முறை விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் இவர்களிடம் மாதந்தோறும் பெருமளவில் பணம் புழங்குகிறது. அதை வைத்து ஜாலியாக விருப்பப்படி செலவு செய்து வருகின்றனர்.

செல்போன் வாங்க, மேக்கப் சாமான் வாங்க... 

பல பெண்கள் இந்தப் பணத்தை வைத்து ஆடம்பரமாக செலவிடுகிறார்கள். காஸ்ட்லியான செல்போன்கள் வாங்குகிறார்கள். மேக்கப் சாதனங்களை வாங்கிக் குவிக்கிறார்கள். விதம் விதமான டிரஸ் வாங்கிப் போட்டுக் கொள்கின்றனர்.

300 செக்ஸ் தொழிலாளர்களில் முக்கால்வாசிப் பேர் மாணவிகள் 

நாக்பூரில் தொழில்முறை செக்ஸ் தொழிலாளர்கள் 300 பேர் உள்ளனர். இவர்களில் முக்கால்வாசிப் பேர் மாணவிகளே என்றார் வர்ஷா.

இயக்குனர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கு: கோர்ட்டில் ஆஜராகாத நடிகை அஞ்சலிக்கு பிடிவாரண்ட் - www.tnfinds.com - Best Site in the World

இயக்குனர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கு: கோர்ட்டில் ஆஜராகாத நடிகை அஞ்சலிக்கு பிடிவாரண்ட்

சென்னை: இயக்குனர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத நடிகை அஞ்சலிக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் களஞ்சியம் தன்னை கொடுமைபடுத்தியதாக நடிகை அஞ்சலி பரபரப்பு புகார் தெரிவித்தார். இதையடுத்து அவர் தலைமறைவாகி பின்னர் ஹைதராபாத்தில் உள்ள காவல் நிலையத்தில் அவராகவே ஆஜர் ஆனார். இதற்கிடையே அஞ்சலியின் குற்றச்சாட்டை மறுத்த இயக்குனர் களஞ்சியம் அவர் மீது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இயக்குனர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கு: கோர்ட்டில் ஆஜராகாத நடிகை அஞ்சலிக்கு பிடிவாரண்ட் இந்த வழக்கு பல முறை விசாரணைக்கு வந்துள்ளது. ஆனால் அஞ்சலி மட்டும் இதுவரை ஆஜராகவே இல்லை. இந்நிலைில் அக்டோபர் 25ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அஞ்சலிக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி கடந்த 12ம் தேதி உத்தரவிட்டார். இத்தனை நாட்களாக ஆஜராகாத அஞ்சலி இன்று வருவார் என்று கூறப்பட்டது. இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் கூடிவிட்டனர். இன்றைய வழக்கு விசாரணையின்போது இயக்குனர் களஞ்சியம் மட்டுமே ஆஜரானார். அஞ்சலி ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர் மேகநாதன் ஆஜராகி அஞ்சலிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரால் நீதிமன்றத்திற்கு வர முடியவில்லை என்று தெரிவித்தார். இதை கேட்ட நீதிபதி ராஜலட்சுமி அஞ்சலிக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை நம்பர் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். ஆந்திராவில் தங்கி தெலுங்கு படங்களில் நடித்து வரும் அஞ்சலி விரைவில் சரண் அடைந்து பிடிவாரண்ட்டை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புற்றுநோயில் சிக்கிய நடிகைகள்…. - www.tnfinds.com - Best Site in the World

புற்றுநோயில் சிக்கிய நடிகைகள்….


பிரபல நடிகைகள் மம்தா, மனிஷா கொய்ராலா இருவரும் மீண்டும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என திரை உலகில் பிரபலமாக மின்னும் நட்சத்திரங்கள் சிலர் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகி அடையாளம் தெரியாமல் உருக்குலைந்து மரணத்தை தழுவியுள்ளனர். சில நடிகைகள் மட்டுமே விழிப்புணர்வோடு செயல்பட்டு அதிலிருந்து மீண்டுள்ளனர். புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள நடிகைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ஸ்ரீ வித்யா 

எழுபது, எண்பதுகளில் கதாநாயகியாக நடித்த ஸ்ரீ வித்யா பின்னர் அம்மா, அக்கா, அண்ணியாக நடித்து அசத்தியவர். மார்பகப் புற்றுநோய் தாக்கி 2006ம் ஆண்டு உயிரிழந்தார்.


கவுதமி

ரஜினி, கமல் என பிரபல நடிகர்களுடன் நடித்த நடிகை கவுதமி. திருமணத்திற்குப் பின்னர் இவருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டது. தன்னம்பிக்கையுடன் இதை எதிர்த்து போராடி வருகிறார்.

ஏஞ்சலீனா ஜோலி

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலீனா ஜோலி மார்பகப் புற்றுநோய் தாக்குதலினால் தனது மார்பகத்தை இழந்துள்ளார். ஆனாலும் தன்னம்பிக்கை தளராமல் மீண்டும் அதே ஆக்சன் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

மம்தா மோகன்தாஸ் 

சிவப்பதிகாரம் படத்தில் நடித்தவர் மம்தா மோகன்தாஸ். இவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் கேன்சர் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

மனீஷா கொய்ராலா 

இதேபோல் கர்ப்பப்பை கேன்சரால் பாதிக்கப்பட்டார் மனிஷா கொய்ராலா. அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு 2 மாதங்களுக்கு முன் மும்பை திரும்பினார். தற்போது அவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். மீண்டும் சிகிச்சைக்காக நியூயார்க் செல்ல உள்ளார்.

புற்றுநோய் விழிப்புணர்வு 

தற்போது புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள நடிகைகள் அனைவருமே அதைப்பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியல் முகேஷ் அம்பானி முதல் இடம்!! அப்ப அனில் அம்பானி?? - www.tnfinds.com - Best Site in the World

இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியல் முகேஷ் அம்பானி முதல் இடம்!! அப்ப அனில் அம்பானி??

டெல்லி: இந்தியாவின் ரூபாய் மதிப்பு குறைவாக இருந்தாலும், பண பணகாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. உலக அளவில் பெரும் பணக்காரர் வரிசையில் கார்லோஸ் சிலிம், பில் கேட்ஸ், வாரன் பஃபெட் போன்றவர்கள் இருந்தாலும், இந்த வரிசையில் நம் இந்தியர்கள் சிலர் இருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது. இங்கு நாம் பார்க்க போவது இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள், சீனாவை சேர்ந்த ஹருண் என்ற சர்வே நிறுவனம், இந்திய ரிச் லிஸ்ட் என்ற ஒரு சர்வே பட்டியலை வெளியிட்டது. இதில் முதல் இடத்தை பிடித்திருப்பது ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, இவரது சொத்து மதிப்பு 18.9 பில்லியன் டாலராகும்

முகேஷ் அம்பானி 
அம்பானி பொருள்வளம் 2% குறைந்த போதிலும், அவர் தொடர்ந்து இரண்டாவது வருடமாக தனது முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

எல். என். மிட்டல் 
லண்டனை சேர்ந்த ஸ்டீல் பரோன் L .N .மிட்டல் 15.9 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். மிட்டல் அவர்களின் பொருள்வளம் கடந்த வருடத்தை விட இந்த வருடம் 6% குறைந்தது. இருந்தது.


திலிப் சங்கவி 
சன் பார்மாகியுடிகல்ஸின் நிறுவனர் திலிப் சங்கவி முதன் முறையாக முதல் மூன்று இடங்களில் இடம்பெற்றுள்ளார். இவரின் பொருள்வளம் இந்த வருடம் 66% எழுச்சிப் பெற்றுள்ளது.

அசிம் பிரேம்ஜி 
மென்பொருள் துறையில் பெரும் புள்ளியாக விளங்கும் விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி நான்காம் இடத்தில் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு $ 12 பில்லியன் டாலராகும்.

சிவ நாடார் 
மென்பொருள் துறையில் மற்றோரு ஜம்பவானாக விளங்கும் எச்சிஎல் டெக்னாலஜிஸ் தலைவர் சிவ நாடார் ஐந்தாம் இடத்தில் 8.6 பில்லியன் டாலர் மதிப்புடன் இருக்கிறார்

குமார் மங்கலம் பிர்லா 
பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா ஆறாம் இடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 8.4 பில்லியன் டாலராகும்

ஆதி கோத்ரேஜ் 
கோத்ரேஜ் குழுமத்தின் தலைவர் ஆதி கோத்ரேஜ் 8.1 பில்லியன் டாலர் மதிப்புடைய சொத்துகளுடன் ஏழம் இடத்தில் இருக்கிறார்.

பல்லோஞ்சி மிஸ்ட்ரி 
பல்லோஞ்சி ஷபூர்ஜி பல்லோஞ்சி & கோ வின் தலைவர் பல்லோஞ்சி மிஸ்ட்ரி 8ஆம் இடத்தில் இருக்கிறார்.

சசி & ரவி ருயா 
எஸ்ஸார் எனர்ஜி நிறுவனத்தின் தலைவரான சசி & ரவி ருயா ($ 7.6 பில்லியன்) 9 வது இடத்தில் இருக்கிறனர்.

சுனில் மிட்டல் 
தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனத்தின் உரிமையாளர் சுனில் மிட்டல் 7.3 பில்லியன் டாலர் மதிப்புடன் 10வது இடத்தில் இருக்கிறார்.

அனில் அம்பானி 
அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் அனில் அம்பானி $ 7.1 பில்லியன் டாலர்களுடன் 11 ஆவது இடத்தை பிடித்தார்.

ஷாருக் கான் 
ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் அமைத்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான், 114 வது இடத்தை பிடித்தார். மேலும் அவரின் சொத்துக்கள் மதிப்பு 400 மில்லியன் டாலராகும்.

பெண்களின் ஆதிக்கம் குறைவு 
பணக்கார பட்டியலில் ஆண்களின் ஆதிக்கம் அதிகம். பெண்களின் ஆதிக்கம் வெறும் 4% தான்.

சாவித்ரி ஜிண்டல் 
ஓபி ஜிண்டல் குழுவின் நிர்வாக தலைவரான ஸ்டீல் பரோனஸ் சாவித்ரி ஜிண்டல் இந்தியாவின் பணக்கார பெண்மணி. அவரின் தனிப்பட்ட சொத்துக்கள் 5.1 பில்லியன் டாலர் ஆகும்.

நான்கு பெண்கள் 
அவரை தொடர்ந்து இரண்டாவதாக அனு அகா, கிரண், மசும்தர்-ஷா மற்றும் ஷோபனா பார்டியா மூன்றாவது நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தையும் பிடித்தார்கள்.

பொருளாதார வளர்ச்சி 
பொருளாதார வளர்ச்சி 5% மந்தம் அடைந்தாலும், ஹுருண் இந்தியா ரிச் லிஸ்டின் மில்லியனர்களின் சராசரி நிகர மதிப்பு 2012 ஆம் ஆண்டைக்காட்டிலும் 2013 ஆண்டில் 100 மில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்திய நிறுவனங்கள் இந்த கடினமான நாட்களிலும் கூட தனது மீளும் திறனை காட்டியுள்ளது என ஹுருண் ரிப்போர்ட் இந்தியாவின் வெளியிட்ட அனாஸ் ரஹ்மான் ஜூனாயிட் அவர்கள் தெரிவித்தார்.

Monday, October 28, 2013

முதல்ல ரோடு போடுங்க, அப்புறம்தான் 'அது'... கொலம்பியா பெண்களின் 'செக்ஸ்' ஸ்டிரைக்! - www.tnfinds.com - best site in the world

முதல்ல ரோடு போடுங்க, அப்புறம்தான் 'அது'... கொலம்பியா பெண்களின் 'செக்ஸ்' ஸ்டிரைக்!


கொலம்பியா: கொலம்பியாவில் பெண்கள் நூதனமான போராட்டத்தில் குதித்துள்ளனர். அதாவது அங்குள்ள சாலைகளை மேம்படுத்தும் வரை செக்ஸ் உறவைத் தவிர்க்கும் ஸ்டிரைக் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் ஆண்கள் வெலவெலத்துப் போயுள்ளனராம். கொலம்பியாவின் பர்பகாஸ் என்ற இடத்தில்தான் இந்த நூதன ஸ்டிரைக் நடந்து வருகிறது. அங்குள்ள சாலைகள் படு மோசமாக இருப்பதாகவும், அதை சரி செய்ய யாருமே நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் இதனால்தான் இந்த ஸ்டிரைக்கை ஆரம்பித்துள்ளதாகவும் கூறியுள்ளனர் பர்பகாஸ் பெண்கள்.

கிராஸ்ட் லெக்ஸ்... 


கிராஸ்ட் லெக்ஸ் மூவ்மென்ட் என்ற பெயரில் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.

2 வருடங்களில் 2வது ஸ்டிரைக் 


கடந்த 2 வருடங்களில் 2வது முறையாக இப்படி ஒரு செக்ஸ் ஸ்டிரைக்கை கொலம்பிய பெண்கள் நடத்துகின்றனர். 

சாலை போடும் வரை.. நோ...


 தங்களது பகுதியில் சாலைகளை மேம்படுத்த வேண்டும், சேதமடைந்த சாலைகளுக்குப் பதில் புதிய சாலைகள் போட வேண்டும். அதுவரை செக்ஸ் கிடையாது என்று இந்தப் பெண்கள் அறிவித்துள்ளனர்.

பல மணி நேர பயணம் 


இப்பகுதியில் உள்ள சாலைகள் நாட்டின் இதர பகுதிகளை இணைக்கக் கூடிய வகையில் உள்ளது. படு மோசமான இந்த சாலைகளில் பயணிப்பது பெரும் நரகமாகவும் இருக்கிறதாம். மேலும் அருகில் உள்ள மருத்துவமனைக்கோ அல்லது வேறு எங்குமோ செல்ல வேண்டுமானால் 14 மணி நேரம் பிடிக்கிறதாம்.

கூல் பெண்களே கூல்...


 பெண்களின் இந்தப் போராட்டத்தால் ஆண்கள் டென்ஷனாகியுள்ளனர். சாலைகளைச் சீர் செய்யுமாறு அதிகாரிகளை அவர்கள் கேட்டு்க கொண்டுள்ளனர். அதிகாரிகளும் நிலைமையின் அவசரத்தை உணர்ந்து சாலைகளை சீரமைப்பதாக உறுதியளித்துள்ளனர்.


More Hot News Click Here...












அஜீத்தின் ஆரம்பம் ஹிட்டாக வாழ்த்தி மதுரையில் 'பேனர்' வைத்த விஜய் ரசிகர்கள் - www.tnfinds.com - best site in the world


அஜீத்தின் ஆரம்பம் ஹிட்டாக வாழ்த்தி மதுரையில் 'பேனர்' வைத்த விஜய் ரசிகர்கள்


 சென்னை: அஜீத்தின் ஆரம்பம் படம் வெற்றி பெற வாழ்த்தி விஜய் ரசிகர்கள் மதுரையில் பேனர் வைத்துள்ளனர். அஜீத் குமாரும், விஜய்யும் நண்பர்களான பிறகு அவரது ரசிகர்களும் நண்பேன்டா ஆகிவிட்டனர். இந்நிலையில் அஜீத்தின் ஆரம்பம் படம் வெற்றி பெற வாழ்த்தி மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள் பேனர் வைத்துள்ளனர். இந்த பேனர் மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்த பேனரில் அஜீத்துக்கு விஜய் வாட்ச் கட்டிவிடுவது போன்ற புகைப்படம் உள்ளது. 


இணையதளத்தில்



இணையதளத்தில் இந்த பேனர் போடப்பட்டவுடன் அஜீத் மற்றும் விஜய் ரசிகர்கள் அதை சமூக வலைதளங்களில் தீயா பரப்பி வருகின்றனர்.

விஜய் ரசிகர் 


பேனர் குறித்து விஜய் ரசிகரான ஷங்கர்(எங்க ஷங்கர் இல்லப்பா) என்பவர் கூறுகையில், அஜீத் குமார் விஜய்யின் எதிரி என்று சிலர் நினைத்தாலும் நாங்கள் எப்பொழுதுமே அவர் மீது மரியாதை வைத்துள்ளோம். அஜீத்தையும், அவரது படங்களையும் நாங்கள் ஆதரித்து வருகிறோம். ஆரம்பம் படம் திரையுலகில் புதிய ஆரம்பமாக இருக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

அஜீத் ரசிகர் மன்றம்


 விஜய் ரசிகர்கள் ஆரம்பம் படத்தை ஆதரித்து வைத்துள்ள பேனரை பார்த்த அஜீத் ரசிகர் மன்றத்தினர் உருகிவிட்டனர். இதையடுத்து அவர்கள் விஜய் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

31ம் தேதி ரிலீஸ் 


ஆரம்பம் படம் வரும் 31ம் தேதி ரிலீஸாகிறது. தமிழகத்தில் ரிலீஸாவதற்கு முந்தைய நாள் வெளிநாடுகளில் ரிலீஸ் செய்யப்படுகிறது. ஆரம்பம் படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More Hot News Click Here...







Sunday, October 27, 2013

தேசிய உரிமை இயக்கத்தின் செயல்வீரர்கள் கூட்டம் - www.tnfinds.com - Best Site in the World

தேசிய உரிமை இயக்கத்தின் செயல்வீரர்கள் கூட்டம்

அக்டோபர் 27, சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், வாளதாசம்பட்டியில் தேசிய உரிமை இயக்கத்தின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தேசிய உரிமை இயக்கத்தின் நிறுவன தலைவர் திரு. மூ.மோகன்ராஜ் அவர்கள் தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார். கூட்டத்திற்க்கு மேட்டூர் நகர செயலாளர் திரு. பா.சிலம்பரசன் ஏற்பாடு செய்திருந்தார்.

அப்பகுதியின் நீண்ட நாள் பிரச்சனைகள் பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. திருநங்கைகள் வாழ்வில் பல இன்னல்களுக்கு உள்ளாவதால் அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற்ப்பட்டு தமிழக முதல்வருக்கு அனுப்பபட்டது.

புதிதாக இயக்கத்தில் இணைந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் கிழக்கு ஓலைப்பட்டி மற்றும் வாளதாசம்பட்டியை சேர்ந்த உறுப்பினர்களும் இளைஞர்களும் கலந்து கொண்டனர்.


More News Click Here...............

Saturday, October 26, 2013

குழந்தைகளைக் காப்போம்! - www.tnfinds.com - Best Site in the World

குழந்தைகளைக் காப்போம்!

நாள்தோறும் சமூக - பொருளாதார பாகுபாடின்றி, குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவதை ஊடகங்கள் வாயிலாக கேள்விப்படுகிறோம். நாம் பாதிக்கப்படாதவரை எந்தச் செய்தியும் 'சம்பவம்' தான். எனினும் குறைந்தபட்சம், சம்பவங்கள் நமக்கு சம்பவிக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று யோசித்ததில் நிறைய தோன்றியது, பதிவாக போடும் அளவுக்கு. மேலும், சில ஆராய்ச்சிகள் செய்ததில் கிட்டியவைகளையும் சேர்த்து... 

குழந்தைகள் மற்றும் பாலியல் தொந்தரவுகள்


யார் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்?
* அப்பா - அம்மா இருவரும் வேலைக்கு போகும் வீடுகளில் தனியாக இருக்கும் குழந்தைகள்
* உறவினர் வீடுகளில் வளரும் குழந்தைகள்
* குழந்தைத் தொழிலாளர்கள்
* உடல் ஊனமுற்ற / மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள்
* ஹாஸ்டலில் வளரும் மற்றும் சம்மர் கேம்ப்பில் விடப்படும் குழந்தைகள்
(இவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள், அவ்வளவே. ஆனால், எல்லாக் குழந்தைகளுமே சில பல மனித மிருகங்கள் சூழ் உலகத்தில் வாழ நிர்பந்திக்கப்பட்டிருப்பதால், யாருக்கும் நடக்கலாம்)
குற்றவாளிகளை எப்படி இனம் காண்பது?
* குழந்தையோடு தனிமையை வலுக்கட்டாயமாக ஏற்படுத்திக் கொள்வார்கள். ("நீங்க போயிட்டு வாங்க... இவளும் என் பொண்ணு போல தான், நான் பார்த்துக்கறேன்...")
* குழந்தை ஆசைப்பட்டு, நீங்கள் வேண்டாம் என்று மறுக்கும் பொருளை வலிய வந்து வாங்கித்தருவார்கள்.
* ஆபத்தான சில விஷயங்களை செய்யச் சொல்லி குழந்தைகளை தூண்டுவார்கள் ("நீ எவ்ளோ தைரியசாலி பார்! உன்னால மொட்டைமாடி சுவர்ல கூட பிடிச்சிக்காம நிக்க முடியுது!")
எவை பாலியல் சார்ந்த தவறுகள்?
கட்டாயப்படுத்தி உறவுவைத்துக் கொள்வது மட்டும் அல்ல... முத்தம் தருவது, பிடித்து அழுத்துவது, பிறப்புறுப்பை காண்பிக்கச் சொல்வது, பார்க்க மற்றும் தொட சொல்வது, சில படங்கள் அல்லது வீடியோக்களை பார்க்க வைப்பது, நிர்வாணமாக்கி படம் எடுப்பது என்று பட்டியல் நீள்கிறது.
எப்படி காப்பாற்றலாம்?
* சின்ன சங்கடம் என்றாலும், அம்மா - அப்பாவிடம் சொல்லி விடும் அளவுக்கு நாம் நம்பிக்கை தருவது.
* குட் டச், பேட் டச் ( Good Touch / Bad Touch ) பற்றிய புரிதல்.
* குழந்தைகள், சிலரோடு பழக பிடிக்கவில்லை என்று சொன்னால் அதை மேலோட்டமாய் கேட்டு உதாசீனப்படுத்தாமல் இருப்பது.
* குழந்தைகள் போக்கில் திடீர் மாறுதல் ஏற்பட்டால் இனம் காண்பது, காரணம் கேட்டறிவது.
* எக்காரணம் கொண்டும் அம்மா,அப்பா, பாட்டி தாண்டி யாரும் தொட்டு பேசுவதை அனுமதிக்காமல் இருக்க கற்று தருவது.
* உரக்க கத்துவதை ஒரு தற்காப்பாக பயன்படுத்தவேண்டியது என்றும் அவசியம் குழந்தைகளுக்கு தெரிந்திருக்கவேண்டும்.
* கல்யாணவீடுகள், இன்ன பிற அன்னிய மனிதர்கள் நிறைய புழங்கும் இடத்தில், குழந்தை நம் கண்பார்வையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம்.
* குழந்தைகளுக்கு இறுக்கமான மற்றும் அரைகுறை உடைகளை தவிர்க்கலாம். (பத்து வயது தாண்டினாலும், பெற்றோருக்கு அவர்கள் குழந்தை தான். யாவர் பார்வைக்கும் அப்படியே என்று நினைப்பது மடத்தனம்.)
கவனிக்க:
- ஆண் குழந்தைகளும் பாலியல் சார்ந்த வன்முறைக்கு ஆளாகிறார்கள்.
- பெண்களும் பாலியல் சார்ந்த குற்றம் புரிகிறார்கள்.
- பெற்றோருக்கு நன்கு அறிமுகமானவர்களிடம் தான் அதிகமாக குழந்தைகள் மாட்டுகின்றன.
- பெரும்பாலும் குழந்தையிடம் தவறாக நடக்கிறவர்கள் Habitual Offenders ஆக இருக்கிறார்கள். இவர்கள், தண்டனை பெற்றாலும் சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் தவறு செய்துக்கொண்டே தான் இருக்கிறார்கள்!
- பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ மற்றும் மனோதத்துவ உதவி அவசியம். ஏனெனில் வெளியே தெரியாவிட்டாலும், பின்னாளில் தீவிர மனச்சிதைவு ஏற்படலாம். இது எதிர் பாலின வெறுப்பில் தொடங்கி சமூகவிரோத செயல் வரை கொண்டுவிடுகிறது.
பின்குறிப்பு - எந்த குழந்தையாவது துன்புறுத்தலுக்கு ஆளாவதாய் தோன்றினால், நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய எண் 1098
எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளலாம்... பத்து ஒன்பது எட்டு - 1098. 

More News Click Here.............. 

திண்டுக்கல்லில் ஞானதேசிகன் போட்டி? - www.tnfinds.com - Best Site in the World

திண்டுக்கல்லில் ஞானதேசிகன் போட்டி? 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக ஞானதேசிகன், கடந்த 2011-ம் ஆண்டு கடைசியில் நியமிக்கப்பட்டார். சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞரான இவர், திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவைச் சேர்ந்தவர்.
இந்த ஆண்டுடன் ஞானதேசிகன் மாநிலங்களவை எம்.பி. பதவி காலம் முடிவடைவதால் அடுத்த ஆண்டு 2014-ம் ஆண்டு மே மாதம் நடக்கும் மக்களவைத் தேர்தலில் ஞானதேசிகன், காங்கிரஸ் கட்சி சார்பில் திண்டுக்கல் தொகுதியில்போட்டியிட தயாராகி வருவதாகவும், அதற்காக அவரது ஆதரவாளர்கள் தற்போதே தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, இந்த தொகுதியில் மீண்டும் போட்டியிட "சிட்டிங்' காங்கிரஸ் எம்.பி. என்.எஸ்.வி.சித்தன் முயற்சி செய்து வருகிறார். ஆனால், ஞானதேசிகன் போட்டியிடுவதாக அவரது ஆதரவாளர்கள் தேர்தல் ஆயத்தப் பணிகளில் ஈடுபடுவதால், எம்.பி.யின் ஆதரவாளர்கள் "அப்செட்' ஆகியுள்ளனர். அதனால், காங்கிரஸ் கட்சியில் தேர்தல் தேதி, கூட்டணி முடிவாகாத நிலையில் தொகுதியில் "சீட்' பெற காங்கிரஸ் கட்சியில் இப்போதே கலாட்டா தொடங்கிவிட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகனிடம் கேட்டபோது, "நான் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. இன்னும் தேர்தல் தேதி முடிவாகவில்லை. கூட்டணி இறுதியாகவில்லை. மேலும், நான் கட்சியின் மாநிலத் தலைவராக உள்ளதால், நான் போட்டியிட்டால் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் எல்லா தொகுதியிலும் முழுமையாக கவனம் செலுத்த முடியுமா எனத் தெரியவில்லை. போட்டியிடுவது குறித்து நான் மட்டும் முடிவு செய்தால் போதாது. கட்சி மேலிடம் அனுமதி கொடுக்க வேண்டும். வத்தலகுண்டு சொந்த ஊர் என்பதால், யாரையோ வெறுப்பேற்ற யாராவது திண்டுக்கல்லில் நான் போட்டியிடுவதாக தேவையில்லாமல் பரப்பிவிட்டிருக்கலாம் '' என பிடி கொடுக்காமல் நழுவினார். 

More News Click Here.......... 


அரசு ஆசிரியை கோபத்தில் முளைத்த ஃபேஸ்புக் பக்கம்! - www.tnfinds.com - Best Site in the World

அரசு ஆசிரியை கோபத்தில் முளைத்த ஃபேஸ்புக் பக்கம்!

நல்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஃபேஸ்புக் பக்கம்.

'ஸ்கூல்ல வெட்டியாக உட்கார்ந்துதானே இருக்கப்போறீங்க?', 'உலகத்துலயே ரொம்ப ஈஸியானது, கவர்ன்மென்ட் ஸ்கூல் டீச்சர் வேலைதான்', 'பசங்கள நிக்க வெச்சு வாசிக்க சொல்றது... அவங்களாவே நோட்ஸ் வாங்கிப் படிக்கச் சொல்றது... இதுக்கு மேல என்னத்த பண்ணப்போறீங்க', 'கவர்ன்மென்ட் டீச்சர்ஸ் சரியா பாடம் நடத்தினா, அப்புறம் ஏன் பிரைவேட் ஸ்கூல்ல அட்மிஷன் குவியுது..?'
பேருந்து பயணத்திலும், ஷேர் ஆட்டோ பயணத்திலும் சக பயணிகளிடம் பேச்சுக்கொடுக்கும்போது, உதிர்க்கப்பட்ட மேற்குறிப்பிட்ட சொற்றொடர்களால் உண்டான கோபத்துக்கு, தன் பள்ளியின் பெயரில் தொடங்கிய ஃபேஸ்புக் பக்கத்தின் மூலம் பதில் சொல்லி வருகிறார், அரசுப் பள்ளி ஆசிரியை கிருஷ்ணவேணி.
சென்னை அருகே வண்டலூருக்குப் பக்கத்தில் உள்ள நல்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கென தனி ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கி, அவ்வப்போது அப்டேட் செய்து வரும் ஆசிரியை கிருஷ்ணவேணியிடம் பேசினேன்.
"அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்றாலே பலரும் மோசமாகவே பார்க்கிறார்கள். எங்களை எந்த வேலையும் செய்யாமல் சம்பளம் வாங்கும் சோம்பேறிகள் என்றே சிலர் நினைக்கிறார்கள். இதை எனக்குத் தெரிந்தவர்களே என்னிடம் கலாய்த்தல் தொனியில் குத்திக்காட்டியிருக்கிறார்கள்.
அத்தகையோர் ஒவ்வொருவரிடமும் என்னால் விளக்கத்தை அளித்துக்கொண்டிருக்க முடியாது. அவர்களுக்குப் புரியவைப்பதும் கடினம். அப்போதுதான், ஃபேஸ்புக்கில் ஒரு பக்கத்தை உருவாக்கி, எங்கள் பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிக்க கல்விச் சேவையையும், எங்கள் பள்ளி மாணவர்களின் திறமையையும் வெளிப்படுத்த முடிவு செய்தேன்.
அதன்படி, நல்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி என்ற பெயரிலேயே ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கினேன். எனக்கு ஃபேஸ்புக்கில் இருந்த மிகச் சில நண்பர்களிடம் விருப்பம் தெரிவிக்குமாறு கோரிக்கை வைத்தேன். சென்ற ஆண்டு டிசம்பரில் உருவாக்கப்பட்ட இந்தப் பக்கத்துக்கு இப்போது லைக்குகள் 500-ஐ தாண்டியிருக்கிறது. இதற்குக் கிடைக்கும் எதிர்வினைகள் ஊக்கத்தை அளிக்கிறது" என்கிறார் நெகிழ்ச்சியுடன்.
தமிழகத்தில் முப்பருவ முறை கொண்டுவரப்பட்ட பிறகு, வளரறி மதிப்பீடு பிரிவின் மதிப்பெண்களை அள்ளுவதற்காக மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலைக்கொண்டு விதவிதமான புராஜெக்ட்டுகளை செய்து, தங்கள் ஆசிரியர்களிடம் அசத்தி வருகிறார்கள். இந்த மதிப்பீட்டு முறை, இந்தக் கல்வி ஆண்டில் ஒன்பதாம் வகுப்பு வரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நல்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் மாணவர்களின் படைப்பாற்றல் வியக்கத்தக்கது. தங்களுக்கு எளிதில் கிடைக்கின்ற பொருட்களைக் கொண்டு அசத்தலான புராஜக்ட்களை செய்து ஆச்சரியப்பட வைக்கிறார்கள். இந்த விவரம் அனைத்தும் இப்பள்ளியின் ஃபேஸ்புக் பக்கத்தில் குவிந்து கிடக்கின்றன. மாணவர்கள் தங்கள் புராஜெக்ட்களுடன் சிரித்துக்கொண்டே போஸ் கொடுக்கும் காட்சிகள்தான் இந்தப் பக்கத்தின் ஹைலைட்.
"எங்கள் மாணவர்களின் படைப்பாற்றலை, உலகுக்கு ஆதாரங்களுடன் உரைப்பதற்கு எங்கள் ஃபேஸ்புக் பக்கம் துணைபுரிகிறது. எங்கள் பள்ளியில் கொண்டாடும் 'ஜாய் ஆஃப் கிவிங்', 'ஆசிரியர் தினம்' உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறோம்.
நல்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எல்லாருமே ஏழ்மையின் பின்னணி கொண்டவர்கள். இந்த ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்துவிட்டு, ஏழை மாணவர்களுக்கு நேரடியாக உதவி செய்வதற்கு, இளைஞர்கள் பலரும் முன்வந்திருக்கிறார்கள். எங்கள் பள்ளிக்கு கணினி உள்ளிட்ட வசதிகளைச் செய்து தருவதற்கும் சிலர் உறுதி அளித்திருக்கிறார்கள். என் கோபத்தால் ஆரம்பிக்கப்பட்ட ஃபேஸ்புக் பக்கம், இப்போது என்னையும், சக ஆசிரியர் நண்பர்களையும் ஊக்கப்படுத்தும் தளமாகவே மாறிவிட்டது.
எங்கள் பள்ளிக்குக் கிடைத்த வரவேற்புக்கு, தலைமையாசிரியர், ஆசிரியர்கள் அனைவருமே காரணமானவர்கள். அனைவரின் ஒத்துழைப்பால்தான் எங்கள் பகுதியில் இப்பள்ளிக்கு நன்மதிப்பு கூடியிருக்கிறது" என்கிறார் ஆசிரியை கிருஷ்ணவேணி.
சமீபத்தில்கூட தன் மாணவர்கள் போட்டி ஒன்றுக்காக செய்த புராஜெக்டை, யூடியூபில் பதிவேற்றி, அதற்கு இணையவாசிகளின் ஆதரவையும் நாடினார். அந்தப் புராஜெக்ட்டைப் பார்க்க http://youtu.be/HioD6RKgPe4
ஃபேஸ்புக் என்பது ’பொழுது போக்கு’ அல்ல... ’பொழுது ஆக்கம்’மும் கூட, என்பதை உணர்த்தும் ஆசிரியை கிருஷ்ணவேணியிடம், இப்போதெல்லாம் யாராவது அவரது பணி மற்றும் பள்ளியைப் பற்றி கிண்டல்செய்தால் ஒரு துண்டு காகிதத்தில் எழுதிக் கொடுக்கும் ஃபேஸ்புக் பக்க முகவரி https://www.facebook.com/nallambakkampums 

More News Click Here.............. 

அறிவுத்திறனை மெதுவாக அழிக்கும் 11 உணவுகள்!!! - www.tnfinds.com - Best Site in the World

அறிவுத்திறனை மெதுவாக அழிக்கும் 11 உணவுகள்!!! 

நம் அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகள் அனைத்தும் நமக்கு போதுமான ஊட்டச்சத்து அளிக்கிறதா? இல்லை. நாம் சாப்பிடும் உணவில் 20-30% உணவு தான் ஊட்டச்சத்து தரக்கூடிய உணவு, மீதி அனைத்தும் நமக்கு தெரியாமல் நமது உடலை அழித்து கொண்டிருக்கும் உணவு வகைகள். சுவை நன்றாக இருப்பதால், நாம் சில வகை உணவுகளை விரும்பிக் சாப்பிடுகிறோம். ஆனால், அவ்வகை உணவுகள் நம் உடலுக்கு பெரிதும் தீங்கு செய்கிறது. ஊட்டச்சத்தின் அடிப்படையில் பார்க்கும் போது, நாம் எல்லா வகையான உணவுகளையும் குறிப்பிட வேண்டும். உதாரணமாக, சில வகையான சிறந்த உணவுகள் நமது எடை குறைப்பிற்கு உதவும், வேறு சில நமது அறிவுத்திறனை ஊக்குவிக்கும் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தும் உணவுகள். இதற்கு மாறாக சிலவகை உணவுகள் மூளைச் செயல்பாட்டை அழிக்கும் உணவாகவே இருக்கிறது. உணவியல் வல்லுநர்கள் கூறும் அறிவுரை என்னவென்றால், இவ்வகை உணவுகளை குறைவாக உட்கொள்வதினால், அதன் கேடு விளைவிக்கும் தன்மை கட்டுப்படுத்தப்படுகிறது. இதோ நமது அறிவுத்திறனை மெதுவாக அழிக்கும் முதல் 11 உணவுகள் என்னவென்று பார்க்கலாம்.

சர்க்கரை மற்றும் சர்க்கரை கலந்த உணவுகள், எடை குறைப்பை கெடுப்பது மட்டுமல்லாது, மூளைச் செயல்பாடையும் கெடுக்கும். நீண்ட காலம் சர்க்கரை உட்கொள்வதினால், அது நரம்பியல் பிரச்சனைகளை உருவாக்கும் மற்றும் ஞாபகத்திறனையும் பாதிக்கும். அது மட்டுமல்லாது, சர்க்கரை உணவுகள் நமது படிப்பாற்றலையும் பாதிக்கும். இதனால் தான் சர்க்கரை அதிகமாக உள்ள உணவு வகைகளான பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஸ்வீட், கான் சிரப் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

மது உட்கொள்ளுதல் நாளடைவில் நமது கல்லீரலை பாதிக்கும். இதனால் வருவது தான் "பிரைன் ஃபாக்" எனப்படும் மூளை மூடுபனி. பிரைன் ஃபாக் என்ற பெயருக்கு ஏற்ப இது மனக்குழப்பத்தை ஏற்படுத்தி, சிந்திக்கும் திறனை தாக்குவதோடு, நினைவாற்றலையும் தாக்கும். இதனால் மது அதிகம் உட்கொண்டால், சில பொருட்களின் பெயர் மறந்து போய்விடும், சில நிகழ்வுகளை நினைவு கூற முடியாது, நாம் கனவுலகில் இருக்கின்றோமா நிஜவுலகில் இருக்கின்றோமா என்று கூட தெரியாத நிலை வந்துவிடும். இவை அனைத்தும் மது நமது மூளையின் செயல்பாட்டை பாதிப்பதால் ஏற்படுகிறது. நல்ல வேளையாக, இந்த அறிகுறிகள் அனைத்தும் திரும்புதலால் நாம் மது அருந்துவதை நிறுத்த வேண்டும் அல்லது வாரம் ஒன்று அல்லது இரண்டு தடவை அருந்துவது என கட்டுபடுத்த வேண்டும்.

அண்மையில் மாண்ட்ரியல் பல்கலைகழகத்தில் நடந்த ஆராய்ச்சியின் படி, ஜங்க் உணவுகள் நமது மூளையில் உள்ள இரசாயனத்தை மாற்றி, அவை மனஅழுத்தம் மற்றும் கவலை நிலைக்கு ஆளாக்கும். அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகள் சாப்பிட்டு பழகிவிட்டு, அதனை நிறுத்தும் போதும் இதே போன்ற அறிகுறிகள் ஏற்படும். இந்த வகை உணவுகள், டோபமைன் உருவாவதை தடுக்கிறது. டோபமைன் என்பது சந்தோஷம் மற்றும் நல்ல உடல் வளம் பெற உதவி செய்யும் இரசாயனம். அதுமட்டுமல்லாது, டோபமைன் அறிவுத்திறன், விழிப்புணர்வு, ஊக்கத்திறன் மற்றும் ஞாபகத்திறன் போன்றவற்றிற்கும் உதவுகிறது.

தற்போதுள்ள எல்லா பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் இரசாயனங்கள், சாயப்பொருட்கள், சேர்க்கைப் பொருட்கள், செயற்கை சுவைகள் மற்றும் பதப்பொருட்கள் உள்ளன. இது அறிவுத்திறனை பாதித்து, குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே அதியியக்கத்தை தூண்டுகிறது. பொரித்த உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், மூளையில் உள்ள நரம்பு அணுக்களை அழிகின்றன. இருப்பினும் சில எண்ணெய்கள் மிகவும் ஆபத்தானவை. அவைகளில் சூரியகாந்தி எண்ணெய் தான் மிகவும் நச்சுத்தன்மை உடையதாகும்.

பொரித்த உணவுகள் போல பதப்படுத்தப்பட்ட உணவுகளும் மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கும். மேலும் அல்சைமர் எனப்படும் மூளை சிதைவு நோய் வரும் வாய்ப்புகளும் அதிகமாகும்.

அதிக உப்பு உள்ள உணவுகள் இரத்த அழுத்தத்தை பாதிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். மேலும் அது நமது இதயத்திற்கும் கேடு விளைவிக்கும். அதிக உப்பு உள்ள உணவுகள் அறிவுத்திறன் மற்றும் சிந்திக்கும் திறனை பெரிதும் பாதிக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. வேண்டுமெனில் அது அறிவாற்றலை பாதிக்கும் என்றும் சொல்லலாம். உப்பு மற்றும் நிக்கோட்டின் உள்ள பொருட்களை சாப்பிடுவது, ஒருவித போதையை உண்டாக்கும். அதனை கைவிடும் போது, அவற்றின் மேல் தீவிர நாட்டம் அடையத் தூண்டும்.

எல்லா வகையான தானியங்களும் உடல் நலத்தையும், மூளைச் செயல்பாட்டையும் பாதிக்கும். ஆனால், முழு தானியங்களில் உள்ள அதிக நார்ச்சத்து நாடி துடிப்பிற்கு மிகவும் நல்லது. மற்ற வகை தானியங்கள் அனைத்தும் நமக்கு விரைவிலேயே முதிர்வு ஏற்பட செய்யும் மற்றும் ஞாபக மறதி வரும் வாய்ப்புகளும் அதிகரிக்கும். அதனால், தானியங்களுக்குப் பதிலாக கார்போஹைட்ரேட் சேர்த்து சாப்பிட வேண்டும். நாம் பயன்படுத்தும் கார்போஹைட்ரேட், கூட்டு அமைப்பு கொண்ட கார்போஹைட்ரேட்டாக இருக்க வேண்டும். அதற்கு முழு தானிய பிரட்டை உண்ணுங்கள்.

தசை வளர்ச்சிக்கும், உடல் சரிவர செயல்படவும் பெரிதும் உதவியாக இருப்பது புரதமே. மாமிசம் தான் உயர்தர புரோட்டீன் நிறைந்த உணவு. ஆனால், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளான ஹாட் டாக், சலாமி, சாசேஜ் போன்றவற்றை சாப்பிடக்கூடாது. இயற்கையான புரோட்டீன்கள் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது. ஆனால் பதப்படுத்தப்பட்ட புரோட்டீன் அதற்கு எதிர்மாறாக செயல்படும். ஆகவே இயற்கையான உயர்தர புரோட்டீன் நிறைந்த இயற்கை மீன்கள் (டூனா, சால்மன்), பால் பொருட்கள், வால்நட் மற்றும் விதைகளை சாப்பிடுங்கள்

கொழுப்புச்சத்துள்ள உணவுகள் உடலில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். அதிலும் இதயம் தொடர்பான பிரச்சனைகளில் ஆரம்பித்து, அதிக கொலஸ்ட்ரால் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்பட காரணமாக இருக்கும். அவை நமது மூளையையும் பெரிதும் பாதிப்பதனால் பக்கவாதம் வர காரணமாக இருக்கிறது. மேலும் இவ்வகை உணவுகளை நீண்ட காலம் சாப்பிட்டால், அது நமது மூளையை சுருங்கச் செய்யும். இதனை தொடர்ந்து, தமனிகள் பாதிக்கக்கூடும். இதனை தடுக்கவும், பக்கவாதம் வராமல் காக்கவும் கொழுப்புச்சத்துள்ள உணவுகளை குறைவாகவே சாப்பிட வேண்டும்.

சிலர் ஒரே நாளில் எடை குறைப்பதற்காக சர்க்கரைக்கு பதில் செயற்கை இனிப்புகளை உபயோகிப்பதால் ஸ்லிம் ஆகிவிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆம்! செயற்கை இனிப்புக்களில் மிக குறைவான கலோரிகள் தான் இருகின்றன. ஆனால், அவை நன்மை தருவதை விட தீமையை தான் அதிகம் தருகின்றன. அதிலும் நீண்ட காலம் செயற்கை இனிப்புக்களை உபயோகித்தால், அது மூளையை பாதிக்கும். மேலும் அதிக அளவு செயற்கை இனிப்புக்களை உபயோகித்தால், அது அறிவுத்திறனையும் பாதிக்கும்.

வயதான தோற்றம், மூச்சு காற்றில் துர்நாற்றம், நுரையீரல் புற்றுநோய் போன்ற பாதிப்புக்களை உண்டாக்குவதோடு மட்டும் நிக்கோட்டின் நின்று விடுவதில்லை. இது இரத்தத் தந்துகிகள் எனப்படும் சிறிய இரத்தக் குழாய்களுக்கு இறுக்கம் கொடுத்து, நரம்பியல் அலைப் பரப்பிகளின் உற்பத்தி மற்றும் செயல்பாடுகளை பாதிப்படைய செய்யும். குறிப்பாக இரத்தத் தந்துகிகள் தான் மூளை செயல்பாட்டிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே நிக்கோட்டின் உள்ள உணவுப் பொருட்களை அறவே தவிர்ப்பது நல்லது.


இன்டர்நெட் விட்டு விட்டு வருதா உங்களுக்கு? - www.tnfinds.com - Best Site in the World

இன்டர்நெட் விட்டு விட்டு வருதா உங்களுக்கு?

இன்றைய காலகட்டத்தில் இணைய இணைப்பு மிக அத்தியாவசிய தேவையாகிவிட்டது மக்களுக்கு எனலாம் நாம் இணையம் பயன்படுத்தும் ஏற்படும் பெரும் பிரச்சனை ஒன்று உள்ளது. அதுதான் இணைய இணைப்பு திடீர் திடீர் என விட்டுப் போவது, நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்னை இதுதான், குறிப்பாக கம்பி வழி இணைப்பு கொண்டோருக்கு இது தொடர்ந்து வரும் பயமுறுத்தலாகவே உள்ளது. இணைய இணைப்பு இல்லாமல் போவது என்பது, நமக்கு தும்மல் வருவது போல ஆகிவிட்டது. தும்மலையாவது ஒரு சில காரணங்களுக்காகக் கட்டாயம் வரும் என எதிர்பார்க்கலாம். ஆனால் இன்டர்நெட் இணைப்பு எப்போது கட் ஆகும் மீண்டும் எப்போது வரும் எனச் சொல்ல முடியாது. பொதுவாக இது போல கட் ஆனால், உடனே கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்து பார்க்கிறோம். நமக்கு இன்டர்நெட் சர்வீஸ் வசதி தரும் நிறுவனத்தைத் திட்டித் தீர்க்கிறோம். கட்டிய காசு தீர்ந்தவுடன் முதலில் இந்த நிறுவனத்தை முடித்து , வேறு ஒரு நிறுவனத்தின் சேவைக்கு மாற்றினால் தான் நிம்மதி என்கிறோம். இருப்பினும் கீழ்க்காணும் விஷயங்களை செய்து பார்த்திருக்கிறிர்களா நண்பரே இதை பாருங்கள் இதுதான் உங்களது இணைப்பு தீடீரென்று தடைபடுவதற்கு காரணம் நண்பரே இதை ஒரு முறை செக் செய்து பாருங்கள்....

வேறு எதனையும் செய்வதற்கு முன்னால், உங்கள் மோடத்தினை மீண்டும் ரீபூட் செய்திடுங்கள். ஒன்றுமில்லை, அதற்கு வரும் மின்சக்தியை நிறுத்தி சில நொடிகள் கழித்து மீண்டும் ஆன் செய்திடுங்கள். பின் உங்கள் ரௌட்டரை ஆன் செய்திடுங்கள். இவற்றில் ஏதேனும் ஒன்றினைப் பயன்படுத்துவோரே அதிகம். அவர்கள் அதனை மட்டும் ரீஸ்டார்ட் செய்தால் போதுங்க.

உங்களுக்கு ரௌட்டர் வழி இணைப்பு இல்லை என்றால் கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடுங்கள். அதன் பின் கேபிள் மோடத்தினை ரீ ஸ்டார்ட் செய்திடுங்கள்.

மோடத்தில் விளக்குகள் எரிந்து டேட்டா பரிமாற்ற விளக்குகள் சிமிட்டத் தொடங்கினால் இன்டர்நெட் இணைப்பு வந்துவிட்டது என்று பொருள். அனைத்து விளக்குகளும் எரியவில்லை என்றால் உங்கள் இணைப்பிற்கான கேபிள்கள் அனைத்தும் சரியாகப் பொருத்தப்பட்டிருப்பதனை உறுதி செய்திடுங்கள்.

அதன் பின் உங்களுக்கு இணைப்பு தந்துள்ள நிறுவனத்தின் கஸ்டமர் சர்வீஸ் எண்ணுக்கு போன் செய்திடுங்கள். அதற்கு முன் அவரிடம், எது போன்ற குறை என்று சொல்ல வேண்டும் என்பதனைத் தீர்மானித்து வைத்துக் கொள்ளுங்கள் அப்போது தான் உங்களால் எளிதாக அவரிடம் பேச முடியும்

இப்போது புதிய பிரவுசர் விண்டோ ஒன்று திறந்து கொள்ளுங்கள் இப்போது www.tnfinds.com கொடுத்து பாருங்கள் www.tnfinds.com வரவில்லையென்ல் இந்த மாதிரி செய்யுங்கள்...

ஸ்டார்ட் அழுத்திக் கிடைக்கும் கட்டத்தில், ரன் பாக்ஸில் cmd என டைப் செய்து என்டர் தட்டவும். உங்கள் மானிட்டர் திரையில், கறுப்பு பாக்ஸில் டாஸ் இயக்கம் கிடைக்கும். அங்கு துடிக்கும் கர்சரில் Ipconfig /all என டைப் செய்திடுங்கள். உங்களுடைய default gateway மற்றும் DNS servers அறிந்து கொள்ளுங்கள். பின் இவற்றிற்கு கட்டளை கொடுத்துப் பாருங்கள். பதில் கிடைக்கிறதா?

இவை அனைத்தும் உங்கள் இணைப்பைத் தராவிட்டால், traceroute எனக் கொடுத்துப் பார்த்தால் எங்கு பிரச்சினை ஏற்பட்டு இணைப்பு அறுந்து போகிறது என்று தெரியும். traceroute என்பது ஒரு கட்டளைச் சொல் ஆகும் நண்பரே

உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து தகவல்கள் ஒரு பாக்கெட்டாக எங்கெங்கு செல்கின்றன என்று காட்டச் சொல்லும் ஒரு கட்டளை. traceroute எனக் கொடுத்து பின் ஒரு ஸ்பேஸ் கொடுத்து உங்களுக்குச் சிக்கலைத் தரும் தளத்தின் முழு முகவரியைத் தர வேண்டும்.

பொதுவாக ஒரு தளம் கிடைக்கவில்லை என்றால் இது போல traceroute மற்றும் ping கட்டளைகள் கொடுத்துப் பார்த்துவிட்டுப் பின் இன்டர்நெட் சேவை தரும் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். முதலில் உங்கள் யூசர் நேம் கொடுக்கவும். அவர்கள் உங்கள் அக்கவுண்ட்டினைச் சார்ந்த மேலும் சில தகவல்களை உறுதி செய்வார்கள் இது ஒரு பார்மாலிட்டி நடவடிக்கை மட்டுமே

அவர்கள் கூறும் செயல்பாடுகளையும் பொறுமையாக மேற்கொண்டு, பதில் கொடுங்கள். நிறுவனத்தின் சர்வரில் பிரச்சினை இருந்தால் அவர்கள் உடனே அதனை உங்களுக்குத் தெரிவித்து, உங்கள் குறை எந்த எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், எத்தனை மணி நேரத்திற்குள் அது சரி செய்யப்படும் எனவும் கூறுவார்கள்.



டெல்லி சட்டசபை தேர்தல்.. தேமுதிகவும் போட்டி! 27-ல் வேட்பாளர்கள் அறிவிப்பு!! - www.tnfinds.com - Best Site in the World

டெல்லி சட்டசபை தேர்தல்.. தேமுதிகவும் போட்டி! 27-ல் வேட்பாளர்கள் அறிவிப்பு!!


டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிகவும் போட்டியிட உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை வரும் 27-ந் தேதி விஜயகாந்த் டெல்லியில் அறிவிக்கிறார். இதுகுறித்து டெல்லி தே.மு.தி.க. மாநில செயலாளர் வி.என்.தட்சிணாமூர்த்தி கூறியதாவது: டெல்லியில் 12 லட்சம் தமிழர்கள் வசிக்கிறோம். பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள்தான். அவர்கள் தங்களது அடிப்படை வசதிகளுக்காக போராடி வருகின்றனர். ஆனால் எவரும் தமிழர்களின் குறைகளை கேட்பது இல்லை. டெல்லி மாநில அரசில் தமிழர்களின் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டிய அவசியம் இருக்கிறது. அதனால் டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். டெல்லி ஐந்தர்மந்தர் பகுதியில் வரும் 27-ந்தேதி நடைபெறும் தே.மு.தி.க. பொதுக்கூட்டத்தில் கட்சி தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். அக் கூட்டத்தில் டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களின் பெயர்களை விஜயகாந்த் அறிவிக்கிறார் என்றார். டெல்லியியின் ஜனக்புரி, ஆர்கே புரம், கரோல் பாக் ஆகிய தொகுதிகளில் தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கின்றனர். அத்துடன் டெல்லி ஜந்தர் மந்தரில் கணிசமான எண்ணிக்கையில் கூட்டத்தைக் கூட்டுவதன் மூலம் காங்கிரஸ், பாஜகவின் பார்வையை தமது கட்சி மீது திருப்ப முடியும் என்பது தேமுதிகவின் நம்பிக்கை.

சமூக வலைதளங்களில் பிரசாரம்... தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு - www.tnfinds.com - Best Site in the World

சமூக வலைதளங்களில் பிரசாரம்... தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு


டெல்லி: லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிடுவோர் சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்வதற்கான கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவு தொடர்பாக தேர்தல் ஆணையம் ஏற்கனவே கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. வேட்பாளர்கள் தங்கள் பிரசாரத்துக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்துவது தொடர்பாக இப்போது மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. சமூக வலைதளங்களில் பிரசாரம்... தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தலைமை தேர்தல் அதிகாரிகள் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு பெற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. அதில் விக்கிபீடியா, ட்விட்டர், யூ டியூப், ஃபேஸ்புக் போன்றவற்றை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் பிரசாரத்துக்காக பயன்படுத்துவது குறித்த சில வழிமுறைகளையும் கட்டுப்பாடுகளை பற்றி குறிப்பிட்டு உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், 26 ஏ படிவத்தின் அடிப்படையில் பூர்த்தி செய்யும் பத்திரத்தில் தங்களைப் பற்றிய மற்ற விபரங்களுடன் அவர்களுடைய மின்னஞ்சல் முகவரி, கைபேசி மற்றும் அவர்களின் ஃபேஸ்புக், ட்விட்டர், பிளாக்கர் போன்ற சமூக வலைதளங்களின் பயனாளர் கணக்கு குறித்த விபரங்களை தேர்தல் ஆணையத்துக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ளது. தொலைக்காட்சி சேனல்கள், இணையதளங்கள் ஆகியவற்றில் வெளியிடும் பிரசார விளம்பரங்கள் குறித்த விவரங்களையும் அவற்றுக்காக செலவழிக்கப்படும் தொகை குறித்த தெளிவான விவரங்களையும் தேர்தல் அதிகரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. சமூக வலைத்தளங்களில் செய்யும் பிரசாரம் குறித்து முன்கூட்டியே சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அனுமதி சான்றிதழ் பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களால் சமூக வலைதளங்களில் மேற்கொள்ளப்படும் பிரசாரம் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளது. வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தவிர, இணைய தளங்களில் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் விஷயங்களின் உள்ளடக்கம் மீதான வழிமுறைகள் குறித்து தொலைத்தொடர்பு மற்றும் செய்தி தொழில்நுட்ப அமைச்சகத்துடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது

பெண் போலீசுக்கு போன் செய்து செக்ஸ் டார்ச்சர்: வாலிபரை வளைத்துப் பிடித்து கைது செய்த போலீஸ் - www.tnfinds.com - Best Site in the World

பெண் போலீசுக்கு போன் செய்து செக்ஸ் டார்ச்சர்: வாலிபரை வளைத்துப் பிடித்து கைது செய்த போலீஸ்

சென்னை: போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்த வாலிபரைப் பிடித்து கூண்டில் அடைத்துள்ளனர் போலீசார். கண்ட மேனிக்கு கொச்சை கொச்சையாக பேசிய வாலிபர் இப்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். மாமல்லபுரம் அருகே உள்ள வடநெமிலியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். லாரி கிளீனரான இவர் கடந்த சில மாதங்களாகவே போலீஸ் கட்டுப்பாட்டு அறை பெண் போலீசாரிடம் ஆபாசமான வார்த்தைகளை பேசி வந்துள்ளார். ஒவ்வொரு முறையும் போன் செய்யும் போதெல்லாம், பெண்களின் அங்க அடையாளங்களை சொல்லி பன்னீர் செல்வம் அருவறுக்கத்தக்க வகையில் பேசியுள்ளார். நேற்று இரவும் 9 மணிக்கு வழக்கம் போல கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த பன்னீர் செல்வம், பெண்களிடம் பேசக்கூடாத வார்த்தைகளையெல்லாம் பெண் போலீசிடம் அள்ளி வீசியிருக்கிறார். இப்படி எல்லை மீறி பெண் போலீசுக்கு தொல்லை கொடுத்த அவர், உச்சக்கட்டமான ‘செக்ஸ்' வார்த்தைகளையும் உபயோகப்படுத்தி இருக்கிறார். இதனால் அதிர்ந்து போன போலீசார், பன்னீர் செல்வத்தின் ‘‘கெட்ட வார்த்தை''களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். இது பற்றி கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டர் முருகன், எழும்பூர் போலீசில் புகார் செய்தார். எழும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். போலீஸ் விசாரணையில் கடந்த 7 மாதங்களில் பன்னீர் செல்வம் 1041 முறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து ஆபாசமாக பேசி பெண் போலீசாரை திணறடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பன்னீர் செல்வம் கைது செய்யப்பட்டார். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தொந்தரவு செய்தல், மிரட்டல் விடுத்தல், தகவல் தொடர்பு சாதனத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளும் அவர் மீது பாய்ந்தது. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பன்னீர் செல்வம் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக கட்டுப்பாட்டு அறைக்கு அதிக அளவில் வெடிகுண்டு மிரட்டல் போன்கள் வந்து கொண்டே இருந்தது. எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த யுவராஜ் என்ற வாலிபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த பரபரப்பு அடங்கும் முன்னர், போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் பெண் போலீசாருக்கே செக்ஸ் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு கம்பி எண்ணுகிறார் இந்த வாலிபர்.


திருநங்கைகளுக்கு எவ்வளவோ செய்ய வேண்டி உள்ளது: சுப்ரீம் கோர்ட் உருக்கம் - www.tnfinds.com - Best Site in the World

திருநங்கைகளுக்கு எவ்வளவோ செய்ய வேண்டி உள்ளது: சுப்ரீம் கோர்ட் உருக்கம்


திருநங்கைகள் சமுதாயத்தில் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகிறார்கள் என்று உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. தேசிய சட்ட உதவி ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, சமூகம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் இருந்து திருநங்கைகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் சொந்த குடும்பம் மற்றும் சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கல்வி, சுகாதார சேவைகள் மற்றும் பொது இடங்களில் குறிப்பிட்ட அளவே அனுமதி உள்ளது. அவர்களால் தேர்தலில் போட்டியிடவும், திருமணம் செய்யவும், வாக்களிக்கவும், பாஸ்போர்ட் பெறவும், ஓட்டுநர் உரிமம் பெறவும், ரேஷன் கார்டு மற்றும் ஐடி கார்டு ஆகியவை பெறவும் முடியாமல் உள்ளது. அனைத்து குடிமக்களுக்கும் வாக்களிக்க, தேர்தலில் போட்டியிட உரிமை உண்டு. ஆனால் வாக்காளர் பட்டியலில் ஆண், பெண் என்ற இரு பிரிவு தான் உள்ளது. அதனால் மூன்றாவது பாலியல் வகையைச் சேர்ந்த திருநங்கைகளால் வாக்களிக்கவோ, தேர்தலில் போட்டியிடவோ முடியவில்லை. எனவே திருநங்கைகள் என்ற பிரிவையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். மேலும் வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஐடி கார்டு, ரேஷன் கார்டு, பள்ளியில் சேர, மருத்துவ உதவி பெற உள்ளிட்டவைக்கான விண்ணப்பங்களில் திருநங்கைகளுக்கு என்று ஒரு பிரிவை சேர்க்க வேண்டும். திருநங்கைகளுக்கு திருமணம் செய்து கொள்ள, குழந்தையை தத்தெடுக்க உரிமை வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன் மற்றும் ஏ.கே. சிக்ரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது தேசிய சட்ட உதவி ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் கூறுகையில், நீதித் துறை மற்றும் அரசமைப்பு சட்டம் ஆகியவை திருநங்கைகளை அங்கீகரித்தால் மட்டுமே மாநில அரசுகள் அவர்களுக்கு தேவையானவற்றை செய்ய முடியும். இதற்காக அரசு பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பாலியல் பண்பு உண்டு. பாலியலை அடிப்படையாகக் கொண்டு திருநங்கைகளை பிரித்து பார்க்கக் கூடாது. அவர்கள் சமூகம் மற்றும் கல்வியறிவில் பின்தங்கிய குடிமக்களாக உள்ளனர். அரசு ஒதுக்கீடுகளின் பயனை திருநங்கைகளும் பெற வேண்டும் என்று மண்டல் கமிஷன் பரிந்துரைத்திருந்தது. அதனால் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டு சலுகைகள் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்றார். இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், திருநங்கைகள் சமுதாயத்தில் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகிறார்கள். பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் அவர்கள் சேர்க்கப்படுவதில்லை. அவர்களுக்கு செய்ய வேண்டியது நிறைய உள்ளது என்றனர்.

தர்மபுரியில் மாதக்கணக்கில் 144 நீடிப்பது நல்லதல்ல: கருணாநிதி -www.tnfinds.com - Best Site in the World

தர்மபுரியில் மாதக்கணக்கில் 144 நீடிப்பது நல்லதல்ல: கருணாநிதி

சென்னை: தர்மபுரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மாதக்கணக்கில் நீடிப்பது ஜனநாயகத்திற்கு அழகல்ல என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் முறையிலான அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கேள்வி: போலீஸ் பக்ருதீன் கைது விவகாரம் பெரிதாகிக்கொண்டு போகிறதே? 
பதில்: அதைப்பற்றி நான் முன்பே விரிவாக எழுதியிருக்கிறேன். கொலைக் குற்றவாளிகள் போலீஸ் பக்ருதீன் குழுவினரா? அல்லது ஏற்கனவே டி.ஜி.பி. அறிக்கையில் தெரிவித்திருந்த நபர்களா? பக்ருதீன் எந்த இடத்தில் கைது செய்யப்பட்டார்? கைது செய்த போலீஸ் அதிகாரி யார்? என்பதற்கான விளக்கங்களையெல்லாம் அரசு தெளிவுபடுத்தவேண்டுமென்று எழுதியிருந்தேன். ஆனால், பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களைப் போக்கிடும் வகையில், அரசு அதைப்பற்றி விளக்கமளிக்கவில்லை. இதற்கிடையே, வேலூரில் செய்தியாளர்களிடம் போலீஸ் பக்ருதீன்; தான் கொலையாளி அல்ல என்றும், அவ்வாறு சொல்லக் காவல் துறையினர் வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெ.அப்துல் ரகிம் தாக்கல் செய்த மனுவில், பக்ருதீன் தனது நண்பர் என்றும், அவரைப் போலீசார் சுட்டுக்கொன்றுவிடுவார்களோ என்று அச்சமாக உள்ளது என்றும் தெரிவித்திருந்தார். மேலும் அவருடைய வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடும்போது, பக்ருதீனின் கைது குறிப்பாணையின் நகலை வேலூர் கோர்ட்டிலிருந்து வாங்கிப் பார்த்ததாகவும், அதில் பக்ருதீனை கைது செய்ததாகக் கூறி, திருவண்ணாமலை சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் கே.அண்ணாதுரை கையெழுத்திட்டிருப்பதாகவும், ஆனால், 15.10.2013 அன்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், பக்ருதீனைக் கைது செய்த காவல்துறையினரான லட்சுமணன், ரவீந்திரன் மற்றும் வீரகுமார் ஆகியோருக்கு பரிசு வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், அது உண்மையென்றால் வேலூர் நீதிமன்றத்தில் பக்ருதீனை கே.அண்ணாதுரை கைது செய்ததாகக் குறிப்பிடும் குறிப்பாணை தவறானது என்று தெரிய வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். பக்ருதீனை எந்த இடத்தில், எப்போது கைது செய்தனர் என்பதை உறுதி செய்வதற்காக அருகிலே உள்ள சாட்சிகளிடம் கையெழுத்து வாங்க வேண்டும்; ஆனால் அப்படிப்பட்ட சாட்சிக்கையெழுத்து எதுவும் கைதுக் குறிப்பாணையில் காணப்படவில்லை என்றும், பக்ருதீனை கைது செய்தது குறித்து அவருடைய தாயாருக்கு தகவலை காவல் துறையினர் அனுப்பியதாகத் தெரிவித்தபோதிலும், அந்தத் தகவலைக் கொடுத்ததற்கான ஆதாரம் எதையும் அரசு தாக்கல் செய்யவில்லை என்றும், ஒருவரைக் கைது செய்யும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்பதற்கு, "டி.கே.பாசு வழக்கில்" உச்சநீதிமன்றம் வரையறுத்த விதிகளை மீறி பக்ருதீனைக் காவல் துறையினர் கைது செய்திருக்கிறார்கள் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அப்துல் ரகிமின் வழக்கறிஞர் கோரியிருக்கிறார். வழக்கு விசாரணை அடுத்த வாரத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு போலீஸ் பக்ருதீன் கைது விவகாரம் இடியாப்ப சிக்கலாகிக் கொண்டிருக்கும் நிலையில், ஜெயலலிதாவும், காவல்துறைத் தலைவரும் விளக்கமேதும் தராமலிருப்பது விந்தையாக இருக்கிறது! 
 
 
 கேள்வி: தர்மபுரி மாவட்டம், முழுமைக்கும் இரண்டு மாதமாக 144 தடை உத்தரவு போடப் பட்டிருப்பது எதைக் காட்டுகின்றது? 
பதில்: இந்த அரசின் இயலாமையையும், ஜனநாயகத்துக்கு வாய்ப்பூட்டு போடும் முயற்சியையும் தான் காட்டுகின்றது. அந்த மாவட்டத்தில் இரண்டு சமூகத்தினருக்கு இடையே கலவரம் ஏற்படுமோ என்ற நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது அதிலே சம்பந்தப்பட்டவரே தற்கொலை செய்துகொண்டதால், பிரச்சினை எல்லாம் முடிந்துவிட்டது. ஆனால், 144 தடை உத்தரவு மட்டும் இன்னும் திரும்பப் பெறப்படாமல் உள்ளது. இதுகுறித்து பா.ம.க. சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றே தாக்கல் செய்து, தமிழக அரசிடம் நீதிபதி விளக்கம் கேட்டிருக்கிறார். பொதுவாக 144 தடை உத்தரவை மாதக்கணக்கில் நீட்டிப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு அழகல்ல! என்று கூறியுள்ளார்.

Friday, October 25, 2013

இந்த வார ராசி பலன்(25.10.2013 முதல் 31.10.2013 வரை) - www.tnfinds.com - Best Site in the World

இந்த வார ராசி பலன்(25.10.2013 முதல் 31.10.2013 வரை)

மேஷம்

பொது:
 சமுதாயத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் காரியங்கள் தடைகளைத் தாண்டி நல்லபடியாக நடக்கும். நண்பருக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். உடல் நலம் பாதிக்கப்படலாம். 
 
பெண்களுக்கு:
 கணவர் பாசமாக இருப்பார். பணப் புழக்கம் நன்றாக இருக்கும். சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழக்கூடும். 
 
வேலை பார்ப்போருக்கு: 
சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அதனால் வேலை பளு குறையும். பயணம் செய்ய இது உகந்த வாரம் அல்ல. வியாபாரிகளுக்கு தன வரவு உண்டு.


ரிஷபம்

 
பொது: 
பெரியவர்கள் ஆலோசனைப்படி நடப்பீர்கள். எடுக்கும் காரியங்களை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். புதிய முதலீடுகள் செய்யக்கூடும். உற்றார், உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். 
 
பெண்களுக்கு: 
குடும்பத்தார் சந்தோஷமாக இருப்பார்கள். சேமிப்பு செலவாகும். கணவர் மீது பாச மழை பொழிவீர்கள். குழந்தைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். 
 
வேலை பார்ப்போருக்கு: 
வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். வேலை பளு அதிகரிக்கும். எந்த வேலையையும் பதட்டப்படாமல் செய்யவும்.


மிதுனம்

 
பொது: 
வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். சிலர் புனிதப் பயணங்கள் மேற்கொள்ளக்கூடும். வரவுக்கேற்ற செலவு உண்டு. உடன் பிறப்புகள் பாசமாக இருப்பார்கள். 
 
பெண்களுக்கு: 
உறவினர்களுடன் இருந்து வந்த பிரச்சனை தீரும். கடன் தொல்லைகள் தீரும். குடும்பத்தாரை அனுசரித்துச் சென்று நல்ல பெயர் எடுப்பீர்கள். பண வரவு அதிகரிக்கும். 
 
வேலை பார்ப்போருக்கு: 
நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்கவும். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்களின் குடும்ப விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரிகள் தொழிலில் முன்னேற்றம் காண்பர்.


கடகம்

 
பொது:
 மனம் தெளிவு பெறும். உங்களின் திறமை மேம்படும். உங்கள் காரியங்களை நண்பர்கள் உதவியுடன் நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உற்சாகமாக காணப்படுவீர்கள். 
 
பெண்களுக்கு: 
மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழக்கூடும். குழந்தைகள் கேட்கும் பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். பெரியவர்களை அனுசரித்துச் செல்வீர்கள். எதிலும் நிதானமாக இருக்கவும். 
 
வேலை பார்ப்போருக்கு: 
உயர் அதிகாரிகளின் ஆதரவு சுமாராகத் தான் இருக்கும். சிலருக்கு எதிர்பார்த்தபடி பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வேலையில் கூடுதல் கவனம் தேவை.


சிம்மம்

 
பொது: 
எப்பாடுபட்டாவது திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். பொருளாதாரம் மேம்படும். கடிதம் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். மனக் கவலைகள் மாறி குதூகலமாக காணப்படுவீர்கள். 
 
பெண்களுக்கு: 
உற்றார், உறவினர்களை அனுசரித்து செல்லவும். குழந்தைகள் உங்கள் சொல்படி நடப்பார்கள். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து மகிழ்வீர்கள். நல்ல காரியத்திற்காக சேமிப்பை செலவு செய்வீர்கள். 
 
வேலை பார்ப்போருக்கு: 
உயர் அதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். அதனால் அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்களிடம் நட்புடன் பழகவும். யாருக்கும் அறிவரை வழங்க வேண்டாம்.


கன்னி

 
பொது: 
எதிரிகளால் கூட நன்மை அடையக்கூடும். தெய்வ பலம் அதிகரிக்கும். சகோதரிகளுடன் பிரச்சனை ஏற்படலாம். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். 
 
பெண்களுக்கு: 
கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். குழந்தைகளால் பெருமை அடையக்கூடும். உடல் நலனில் கவனம் செலுத்தவும். 
 
வேலை பார்ப்போருக்கு:
 சிலர் புதிய வேலை கிடைத்து செல்லக்கூடும். பொறுப்புகள் அதிகரிக்கும். உழைத்து உழைத்து களைத்து போவீர்கள். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பேச்சில் இனிமை தேவை.


துலாம்

 
பொது: 
பண வரவு திருப்திகரமாக இருக்கும். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நடக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். மனம் மகிழும் செய்தியைக் கேட்பீர்கள். 
 
பெண்களுக்கு: 
குடும்பத்தில் நிம்மதி இருக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் குறித்த நேரத்தில் அலுவலகத்திற்கு செல்லவும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரக்கூடும். குடும்பத்தில் நல்ல காரியம் நடக்கும். 
 
வேலை பார்ப்போருக்கு: 
உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையில் கண்ணும் கருத்துமாக இருக்கவும். தேவையில்லாத விஷயத்தில் தலையிட வேண்டாம்.


விருச்சிகம்

 
பொது: 
திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடக்கும். சமுதாயத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பண வரவு தாமதமாகலாம். 
 
பெண்களுக்கு: 
கணவரை அனுசரித்துச் செல்வீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி அடையக்கூடும். பழைய கடன்களை அடைக்க புதிதாக கடன் வாங்கக்கூடும். சேமிப்பு பெருகும். 
 
வேலை பார்ப்போருக்கு: 
கொடுக்கும் வேலைகளை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உங்களின் ரகசியங்களை யாரிடமும் கூற வேண்டாம். வருமானத்திற்கு குறைவிருக்காது. வியாபாரிகளுக்கு பணம் கொடுக்கல், வாங்கல் சுமாராகத் தான் இருக்கும்.


தனுசு

 
பொது: 
உடல் நலம் சிறப்பாக இருக்கும். பண வரவு தள்ளிப் போகலாம். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வழக்குகள் சாதகமாக முடியும். 
 
பெண்களுக்கு: 
கணவரிடம் பாராட்டு பெறக்கூடும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளை நீங்களே சமாளித்துவிடுவீர்கள். சில்லறைக் கடன்களை அடைப்பீர்கள். 
 
வேலை பார்ப்போருக்கு:
உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். அலுவலக பிரச்சனைகள் குறையும். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றமும், ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு தொழில் நல்லபடியாக நடக்கும்.


மகரம்

 
பொது: 
பண வரவு இரண்டு மடங்கு அதிகரிக்கும். பயணத்தின்போது கவனமாக இருக்கவும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது கவனமாக இருக்கவும். நினைத்த காரியங்கள் அதிக முயற்சிக்கு பிறகே வெற்றி பெறும். 
 
பெண்களுக்கு: 
குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். பெரியோரின் ஆசி கிடைக்கும். சமையல் அறையில் வேலை செய்யும்போது கவனமாக இருக்கவும். 
 
வேலை பார்ப்போருக்கு: 
அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் ஆகியோர் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு பதவி உயர்வு தேடி வரும். அலுவலகத்தில் குடும்ப விஷயங்கள் பற்றி பேச வேண்டாம்.


கும்பம்

 
பொது: 
நீண்ட காலமாக இழுத்துக் கொண்டிருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்படலாம். 
 
பெண்களுக்கு: 
கணவரிடம் விட்டுக் கொடுத்து நடக்கவும். குழந்தைகளின் நலனில் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்துடன் குல தெய்வ வழிபாடு செய்ய திட்டமிடுவீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். 
 
வேலை பார்ப்போருக்கு: 
வேலையில் கவனாக இருக்கவும். இல்லை என்றால் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகலாம். பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவீர்கள்.


மீனம்

 
பொது: 
நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள். சேமிப்பு பெருகும். திறமை பளிச்சிடும். உங்கள் பேச்சால் பிறரைக் கவர்வீர்கள். சமுதாயத்தில் முக்கிய நபர்களின் நட்பு கிடைக்கும். 
 
பெண்களுக்கு: 
பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். குழந்தைகளின் கல்விச் செலவு அதிகரிக்கலாம். இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். பெரியவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். 
 
வேலை பார்ப்போருக்கு: 
உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறக்கூடும். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். வேலை பளு குறையும். வியாபாரிகளுக்கு வருமானம் அதிகரிக்கும்.


Thursday, October 24, 2013

எங்களை நீக்கலைன்னா.. பல ரகசியங்களை சொல்லுவோம்: விஜயகாந்துக்கு அதிருப்தி எம்.எல்.ஏ. எச்சரிக்கை! - www.tnfinds.com - Best Site in the World

எங்களை நீக்கலைன்னா.. பல ரகசியங்களை சொல்லுவோம்: விஜயகாந்துக்கு அதிருப்தி எம்.எல்.ஏ. எச்சரிக்கை!

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தைரியம் இருந்தால் எங்களை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று அதிருப்தி எம்.எல்.ஏ.சுந்தரராஜன் சவால்விட்டுள்ளார்.

ஜூனியர் விகடன் வாரம் இருமுறை இதழுக்கு அதிருப்தி எம்.எல்.ஏ.சுந்தரராஜன் அளித்த பேட்டி:

விஜயகாந்த்தோட நடவடிக்கைகள் பிடிக் காம நாங்க வெளியே வந்து ஒரு வருஷம் ஆகப் போகுது. எங்க தொகுதி மக்களுக்காக நாங்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்று, பல நல்ல திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கிய நன்றிக்காக, நாங்கள் அம்மாவை வெளிப்படையாக ஆதரிக்கிறோம்.

இது, விஜயகாந்த்தைப் பொறுத்தவரை கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயல். கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய எங்களை ஏன் இன்னும் கட்சியை விட்டு நீக்காமல் வைத்திருக்கிறார் விஜயகாந்த்? இது கட்சிக்கு அவர் செய்யும் துரோகம் அல்லவா?

ரொம்ப நேர்மையானவர்போல மேடையில் பேசும் அவர், அரசியல் கட்சிகளின் சட்டப்படி, தலைமைக்கு கட்டுப்படாமல் வெளியேறி வந்து விட்ட எங்களை நீக்குவதுதானே முறை? ஏன் செய்யவில்லை? அவர் கேட்ட விளக்கக் கடிதத்தைக்கூட நாங்கள் மதிக்கவில்லை.

அப்படியிருக்கும்போது, எதிர்க் கட்சி அந்தஸ்து போய்விடும் என்பதால்தானே எங்களை நீக்காமல் இருக்கிறார். இது, சட்டத்தை அவமதிக்கும் செயல் இல்லையா? இதன் மூலம் அரசாங்கத்தை ஏமாற்றி தன் பி.ஏ-வுக்கும் டிரைவருக்கும் அரசு தரும் சம்பளத்தை வாங்கிக்கொண்டிருக்கிறார்.

அவர் ரோஷக்காரராக இருந்தால், சொந்தப் பணத்தில் இருந்து தன் வேலைக்காரர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டியதுதானே? வள்ளல் போல வெளியில் பேசுவார். ஆனால், அவர் எப்படிப்பட்டவர் என்பது, கூடவே இருந்த எனக்குத் தெரியும்.

எங்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். இல்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம். அது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும்'

தூத்துக்குடி கூட்டத்தில் பேசிய பிரேமலதா, விஜயகாந்த் தனியரு மனிதனாக மதுரையில் இருந்து சென்னைக்குச் சென்று கஷ்டப்பட்டு சினிமாவில் நடித்துச் சாதித்தவர் என்று பேசியுள்ளார். இந்த பிரேமலதாவுக்கு விஜயகாந்த்தைப் பற்றி என்ன தெரியும்?

1990-க்குப் பிறகுதானே தெரியும். விஜயகாந்த்தின் வளர்ச்சிக்கு யாரெல்லாம் பக்கபலமாக இருந்தனர் என்பது தெரியுமா? நான், ராவுத்தர், சேனா ஃபிலிம்ஸ் முதலாளி போன்ற 25-க்கும் மேற்பட்ட நண்பர்களுடைய உதவியால்தான் விஜயகாந்த் வளர்ந்தார். அவருக்குப் பெண் பார்த்துவிட்டு நாகர்கோவிலில் சிறையில் பூத்த சின்ன மலர் ஷூட்டிங்கில் இருந்தவரிடம் தகவல் சொன்னவனே நான்தான்.

பழைய சம்பவங்கள் தெரியாமல், அவரை மகுடிக்கு ஆடும் பாம்புபோல மாற்றி, எங்களைப் போன்ற பால்ய நண்பர்களையும் விஜயகாந்த்தின் உறவினர்களையும் அண்டவிடாமல் செய்துவிட்டது பிரேமலதா குடும்பம்.

கட்சியில் ஆரம்ப காலத்தில் இருந்து உழைத்த பலர் மனம் நொந்துபோவதற்கு காரணமான மூன்று பேரை பற்றி விஜயகாந்த்துக்கு எதுவுமே தெரியாதா?

இது இப்படியே போனால், விஜயகாந்த்தின் கதி அதோ கதிதான். மக்கள் அளித்த அங்கீகாரத்தை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள விஜயகாந்த்துக்கு தெரியவில்லை.

பெரிய பெரிய தலைவர்கள் அமர்ந்த எதிர்க் கட்சித் தலைவர் பதவியின் மதிப்பு தெரியவில்லை.

எனக்கு இதுகூட வருத்தம் இல்லை. நான் மதிக்கிற சிறந்த பேச்சாளரும் எழுத்தாளருமான அப்பழுக்கற்ற மனிதருமான தமிழருவி மணியன் அவர்கள், தமிழகத்தில் மதுவுக்கு எதிராகவும் தமிழர் நலன் காக்கவும் நேர்மையாகப் போராடி வருகிற தேர்ந்த அரசியல்வாதியான வைகோவுடன், இந்தக் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபாடான விஜயகாந்த்தைக் கொண்டுபோய் சேர்க்க ஆசைப்படுகிறாரே... அதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை.

விஜயகாந்த் தைரியமானவராக இருந்தால், எங்களை கட்சியைவிட்டு உடனே நீக்க வேண்டும். இல்லை என்றால், அவரைப் பற்றிய பல ரகசியங்களை நான் சொல்ல வேண்டிய நிலை வந்துவிடும். பழகிய தோஷத்துக்காகத்தான் இவ்வளவு நாள் பொறுத்துப் பொறுத்துப்போனேன். இனி முடியாது. இவ்வாறு எம்.எல்.ஏ. சுந்தரராஜன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

அதிமுகவுடன் காங். கூட்டணி? ஜெ- ப.சிதம்பரம் தொலைபேசியில் பேச்சு - www.tnfinds.com - Best Site in the World

அதிமுகவுடன் காங். கூட்டணி? ஜெ- ப.சிதம்பரம் தொலைபேசியில் பேச்சு


சென்னை: பாரதிய ஜனதா அல்லது 3வது அணியை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆதரிப்பார் என்று கூறப்படும் அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியோ அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் மும்முரம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் இடையே கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் காங்கிரஸ் நிர்வாகிகள் அதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. தேர்தல் களத்தில் திமுகவினர் காலைவாரிவிடவே வாய்ப்பு இருக்கிறது என்பது காங்கிரசாரின் கருத்து. இதைத்தான் அதிமுக ஆதரவு காங்கிரசார் பலரும் மேலிடத்துக்கும் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் அதிமுக தரப்பிலும் ஜெயலலிதா மீதான பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்க காங்கிரஸ் மேலிடத்தை தொடர்பு கொள்ளும் படலங்களும் அரங்கேறி இருக்கின்றன. காங்கிரஸ் மூத்த தலைவர் மார்க்ரெட் ஆல்வா மூலமாக இத்தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டு பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறதாம்.

அதிமுகவின் எதிரியாக கருதப்படும் ப.சிதம்பரம்தான் இப்போது அதிமுகவுடன் கூட்டணி அமைக்க மும்முரம் காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது. சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் மீண்டும் ஜெயிக்க திமுகவின் தயவை விட ஆளும் அதிமுக தயவு அவசியம் என்று பெரும்பான்மையான கட்சியினர் தெரிவித்திருக்கின்றனர். இதனை அப்படியே மேலிடத்துக்கும் தெரிவித்திருக்கிறார் ப.சிதம்பரம்

ப.சிதம்பரத்தின் பரிந்துரையில் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டவர் ரோசய்யா. தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடனும் இணக்கமான போக்கை கொண்டிருப்பவர் ரோசய்யா. எதிரிகளாக இருக்கும் ப.சிதம்பரத்தையும் ஜெயலலிதாவையும் ரோசய்யா தமது பர்சனல் போனில் பேசவைத்தார் என்றும் கோட்டை வட்டார தகவல்கள் பரபரக்கின்றன.

இருப்பினும் அதிமுகவைப் பொறுத்தவரையில் தேர்தலுக்குப் பின்னர்தான் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உறுதியாக இருப்போம் என்பது கூறப்பட்டிருக்கிறது. அதாவது பாரதிய ஜனதா, 3வது அணி அல்லது காங்கிரஸ் யார் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதைப் பொறுத்து தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளலாம் என்பது அதிமுகவின் கணக்கு.

ஆனால் ஜெயலலிதா இப்படியெல்லாம் செய்யக் கூடியவர் என்பதால் தேர்தலின்போதே கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்பதில் கறாராக இருக்கிறது காங்கிரஸ். பெங்களூர் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு நெருங்க நெருங்க.. லோக்சபா தேர்தலும் நெருங்க நெருங்க.. அதிமுக- காங்கிரஸ் உறவும் நெருக்கமாகிவிடும் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

அரசு மருத்துவமனையில் ஓராண்டில் 42 குழந்தைகள் கடத்தல்: ஹைகோர்ட்டில் தமிழக அரசு தகவல் - www.tnfinds.com - Best Site In The World

அரசு மருத்துவமனையில் ஓராண்டில் 42 குழந்தைகள் கடத்தல்: ஹைகோர்ட்டில் தமிழக அரசு தகவல்



மதுரை: தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த ஓராண்டில் 42 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த ஜூன் 15 ஆம் தேதி குழந்தை ஒன்று காணாமல் போன வழக்கில், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் காவல்துறை தலைவர் ராமானுஜம் ஆகியோர் சார்பில் தனித்தனியாக விளக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டன. அதில், கடந்த ஓராண்டில் அரசு மருத்துவமனைகளில் இருந்து 42 குழந்தைகள் காணாமல் போயிருப்பதாகவும், அதில் 27 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தை குறித்த விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள குழந்தைகளை கண்டறிய சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Hot News Click Here...


கூகுளில் சிக்கிய ஏலியன்....! - www.tnfinds.com - Best Site In The World


கூகுளில் சிக்கிய ஏலியன்....!

சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகமான கூகுள் ஸ்டிரிட் வியூ பற்றி உங்களுக்கு நினைவிருக்கலாம் அதாங்க ஒவ்வொரு தெருவின் படத்தை துல்லியமாக காட்டுமே அதான். அந்த கூகுள் ஸ்டிரிட் வியூவில் பல படங்கள் மற்றும் தகவல்கள் சரியாக இருந்தாலும் சில தகவல்களை பார்த்தால் நமக்கு சிரிப்பு தான் வரும். ஆமாங்க அதில் ஏதாவது ஒரு தெரு பெயரை போட்டு தேடினால் பார்க்கவே பயங்கரமாக இருக்கும் வியூஸ்லாம் வருதுங்க உடனே நீங்க உங்க தெரு பெயர போட்டு தேடாதிங்க. வெளிநாட்டு தெருக்களை மட்டும் இப்போதைக்கு கூகுள் படம்பிடித்திருக்கு விரைவில் இது இந்தியாவுக்கும் வர இருக்கிறது. சரி அதுல தேடி நமக்கு கிடைக்கற படங்களை நீங்களே பாருங்க....

 இதுதாங்க அந்த படங்கள்