Sunday, September 29, 2013

உயிருடன் இருக்கும் தமிழக அமைச்சர்க்குஇறப்புச்சான்றிதழ் - www.tnfinds.com - Best site in the world

உயிருடன் இருக்கும் தமிழக அமைச்சர்க்குஇறப்புச்சான்றிதழ்
மதுரை மாநகராட்சி சார்பில் தமிழக அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு இறப்புச்சான்றிதழ் வழங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மதுரை சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாநகராட்சியில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் வழங்க லஞ்சம் கேட்பதாக புகார்கள் வந்துள்ள நிலையில், இந்த பிரச்னை எழுந்துள்ளது. தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் தேதி இறந்துவிட்டதாக கடந்த மாதம் 23 ஆம் தேதி இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதே போல் மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை 2006 ஆம் ஆண்டு இறந்துவிட்டதாக கடந்த மாதம் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மதுரை மாநகராட்சி சார்பில் அளிக்கபட்டுள்ள புகாரில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கும் கணினி பிரிவில் டிஜிட்டல் கையெழுத்தினை தவறாக பயன்படுத்தி போலி சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

3 comments:

Anonymous said...

Good government

Anonymous said...

bad active

Anonymous said...

naan ADMK ku ottu pottathu rompa thappu