Wednesday, November 27, 2013

தேசிய உரிமை இயக்கம் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா - www.tnfinds.com - Best Site in the World

தேசிய உரிமை இயக்கம் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா

              தேசிய உரிமை இயக்கத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவானது உடலுறுப்பு தான நிகழ்ச்சியாக ஆரத்தி மாத இதழ் அலுவலகத்தில் நடைபெற்றது.

             விழாவில் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 

             இந்நிகழ்ச்சிக்கு தேசிய உரிமை இயக்கத்தின் நிறுவன தலைவர் திரு. மூ.மோகன்ராஜ் அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக ஆரத்தி மாத இதழின் ஆசிரியர் திரு. ஆ.இராஜரத்தினம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

              அதன் பின்பு நிர்வாகிகளும், உறுப்பினர்களும் உடலுறுப்பு தானத்திற்க்கு பூர்த்தி செய்த படிவத்தை தேசிய உரிமை இயக்கத்தின் நிறுவன தலைவர் தலைமையில் ஆரத்தி இதழின் ஆசிரியரிடம் கொடுத்து பதிவு செய்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆரத்தி மாத இதழின் சார்பில் அவர்களின் சேவையை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.  

            மாநில இளைஞரணி செயலாளர் திரு. சுகனேஸ்வரன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் திரு. கிருபானந்த், சேலம் மாவட்ட செயலாளர் திரு. சிலம்பரசன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். 

























More News Click Here..............

Tuesday, November 26, 2013

திங்கிட்கிழமை காலை 8 முதல் 9 மணி வரை இதயம் பத்திரம்! - www.tnfinds.com - best site in the world

திங்கிட்கிழமை காலை 8 முதல் 9 மணி வரை இதயம் பத்திரம்!

 திங்கட்கிழமை காலை 8 மணி முதல் 9 மணி வரையிலான நேரத்தில் தான் பெரும்பாலானோருக்கு மாரடைப்பு ஏற்படுகிறதாம்.
இதயம் என்றால் உயிர் துடிப்பும், காதலும் தான் பலரின் நினைவுக்கு வரும். ஆனால் இதயம் பற்றி பல சுவாரய்ஸமான தகவல்கள் உள்ளன. அவை பற்றி கேள்விப்பட்டால் அப்படியா, உண்மையாகவா என்று பலர் கேட்கக்கூடும்.
அத்தகைய சுவாரஸ்யமான தகவல்களில் சிலவற்றை பார்ப்போம்.

72 முறை

சராசரி மனிதனின் இதயம் ஒரு நிமிடத்திற்கு 72 முறை துடிக்கும், ஒரு நாளைக்கு 1 லட்சம் முறையும், ஆண்டுக்கு 3 கோடியே 6 லட்சம் முறையும், வாழ்நாளில் 2.5 பில்லியன் முறையும் துடிக்கும்.

டிரக்

இதயம் உருவாக்கும் சக்தியானது ஒரு டிரக்கை 20 மைல் தொலைவு வரை ஓட்ட போதுமானதாகும். ஒரு மனிதனின் வாழ்நாள் முழுவதும் உருவாக்கப்படும் சக்தி நிலவுக்கு சென்று திரும்பி வர போதுமானது

ரத்தம்

மனிதனின் வாழ்நாளில் இதயம் 1.5 மில்லியன் பேரல் ரத்தத்தை வெளியேற்றுகிறதாம்.

சிரிப்பு

சிரிப்பது இதயத்திற்கு மிகவும் நல்லது. சிரிக்கும் போது நம் இதயம் 20 சதவீதம் கூடுதலாக ரத்தத்தை உடலுக்கு அனுப்புகிறதாம். அதனால் முடிந்த வரை சிரித்து வாழ வேண்டும்.

ஸ்டெதஸ்கோப்


ஸ்டெதஸ்கோப்பை பிரான்ஸ் நாட்டு டாக்டர் ரெனி லேனெக் கண்டுபிடித்தார். பெண்களின் மார்பு மீது காதை வைத்து இதயத் துடிப்பை கேட்பது சரியில்லை என்று நினைத்து அவர் ஸ்டெதஸ்கோப்பை கண்டுபிடித்தார்.

பெண்ணின் இதயம்

ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் இதயம் வேகமாகத் துடிக்கும். ஆண்களின் இதயம் நிமிடத்திற்கு 70 முறை துடித்தால், பெண்களின் இதயம் 78 முறை துடிக்குமாம்.

திங்கட்கிழமை

திங்கட்கிழமை காலை இந்த வாரம் துவங்கிவிட்டதே வேலை செய்ய வேண்டுமே என்ற நினைப்பு தான் இதயத்தை பெரிதும் பாதிக்குமாம். திங்கட்கிழமை காலை 8 மணி முதல் 9 மணி வரையிலான நேரத்தில் தான் பெரும்பாலானோருக்கு மாரடைப்பு ஏற்படுகிறதாம்.

More Hot News Click Here...







மணிக்கு 2 லட்சம் கி.மீ வேகத்தில் சூரியனை நோக்கி பாய்ந்து செல்லும் 'ஐசான்'! - www.tnfinds.com - best site in the world

மணிக்கு 2 லட்சம் கி.மீ வேகத்தில் சூரியனை நோக்கி பாய்ந்து செல்லும் 'ஐசான்'!

டெல்லி: சூரியனை நோக்கி நகர்ந்து வந்த ஐசான் வால் நட்சத்திரம் தற்போது சூரியனுக்கு மிக அருகே போய் விட்டது. மணிக்கு 2 லட்சம் கிலோமீட்டர் என்ற வேகத்தில் அது படு வேகமாக போய்க் கொண்டிருக்கிறது.
இந்த வால் நட்சத்திரம் சூரியனை நெருங்கும்போது மொத்தமாக பொசுங்கிப் பஸ்பமாகி விடும்.. அல்லது தப்பிப் பிழைத்து பூமியில் உள்ள மக்களுக்கு மேலும் சில காலம் வண்ணக் கோலத்தைக் காட்டி நிற்கும்.
நவம்பர் 28ம் தேதி வியாழக்கிழையன்று சூரியனை கடக்கவுள்ளதாம் ஐசான். தற்போது அது சூரியனின் பரப்புக்கு மேலே கிட்டத்தட்ட பத்து லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் நிற்கிறதாம்.

ஸ்டீரியோ கொடுத்த படம்

நாசாவின் ஸ்டீரியோ எனப்படும் Solar Terrestrial Relations Observatory யின் எச்ஐ 1 கேமரா ஐசான் வால்நட்சத்திரத்தின் லேட்டஸ்ட் நிலையை படம் பிடித்துள்ளது. அந்தப் படத்தை நாசா வெளியிட்டுள்ளது. நவம்பர் 21ம் தேதி பிடிக்கப்பட்ட படமாகும் இது.

சூரியனுக்கு வெகு அருகே

தற்போதுதான் சூரியனுக்கு மிக அருகே வந்துள்ளது ஐசான் என்பதால், அதன் நிலை குறித்து பெரும் எதிர்பார்ப்புடன் விண்ணியல் ஆர்வலர்களும், விஞ்ஞானிகளும் உள்ளனர்.

மணிக்கு 2 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில்


தற்போது சூரியனை நெருங்க நெருங்க ஐசான் போகும் வேகமும் அதிகரித்துக் கொண்டிருக்கிறதாம். கடந்த ஜனவரி மாதம் ஐசான் வால் நட்சத்திரத்தின் நகர்வு நேரம் மணிக்கு 64,000 கிலோமீட்டர் என்ற அளவில் இருந்தது. தற்போது இது மணிக்கு இரண்டு லட்சத்து 40 ஆயிரம் கிலோமீட்டர் என்ற அதி வேகத்திற்கு மாறியுள்ளது.

நெருங்க நெருங்க இன்னும் வேகம்


இன்னும் சூரியனுக்கு மி்க அருகில் போகும்போது அதன் வேகம் மணிக்கு 10.3லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் இருக்குமாம்.

2012ல் கண்டுபிடிப்பு


2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த வால்நட்சத்திரத்தை ரஷ்யாவைச் சேர்ந்த இரண்டு விண்வெளி வீரர்கள் கண்டறிந்தனர்.

உருக்குலையவில்லை


தற்போது ஐசான் வால்நட்சத்திரம் பெரிய அளவில் உருக்குலையவில்லை என்று நாசாவின் புதிய படத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
இன்னும் அது கட்டுக்குலையாமல் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. முன்னதாக அதன் மையப் பகுதி சிதற ஆரம்பித்து விட்டதாக செய்திகள் வந்திருந்தன என்பது நினைவிருக்கலாம்

More News lick Here...

Saturday, November 23, 2013

விண்டோஸ் 7 பயன்படுத்துவோர் மட்டும் இதை படிக்கவும்...! - www.tnfinds.com best site in the world

விண்டோஸ் 7 பயன்படுத்துவோர் மட்டும் இதை படிக்கவும்...!

இன்று அனைவராலும்பரவலாக பயன்படுத்தப்படும் ஆப்ரேட்டிங் சிஸ்டம் எது என்று கேட்டால் அது விண்டோஸ் தான்.
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தனக்கென மாறா நிலையில் சில வரையறைகளைக் கொண்டதாகவே நாம் பெறுகிறோம். இவற்றில் சில நம் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இருக்கலாம்.
அவற்றை இப்படி செய்து, நிலை நிறுத்தினால் என்ன? என்ற கேள்வியுடன், அதற்கான வழிகள் அதில் உள்ளனவா என்று ஆய்வு செய்வோம். ஒரு சில பொதுவான எதிர்பார்ப்புகளை எப்படி மேற்கொள்வது என கீழே செயல்முறைகள் காட்டப்பட்டுள்ளன.

உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 இன்ஸ்டால் செய்யப்படுகையில், இதனுடன் வரும் சில விளையாட்டுக்கள், ஸ்டார்ட் மெனுவில் சேர்க்கப்பட்டு, மாறா நிலையில் இருக்கும்.
இவை தேவைப்படாதவர்கள், "இது எதற்கு ஸ்டார்ட் மெனுவில்?' என்று கவலைப்படுவார்கள். கேம்ஸ் வேண்டுமென்றால், ஆல் புரோகிராம்ஸ் சென்று, தேவையானதைத் தேர்ந்தெடுத்து இயக்கலாமே! என்று எண்ணுவார்கள். எனவே ஸ்டார்ட் மெனுவில் இருந்து இவற்றை நீக்கும் வழிகளை இங்கு காணலாம்.
ஸ்டார்ட் மெனு சென்று சர்ச் பாக்ஸில் %AllUsersProfile%\Microsoft\Windows\StartMenu\ என டைப் செய்து என்டர் தட்டவும். இப்போது ஸ்டார்ட் மெனுவில் உள்ளவை லோட் செய்யப்படும். இந்த இடத்தில் தான், விண்டோஸ் 7 அனைத்து பயனாளர்களுக்குமான புரோகிராம்களின் ஷார்ட்கட் அமைப்பினைப் பதிந்து வைக்கிறது.
விண்டோஸ் 7 உங்களிடம் இந்த ஷார்ட்களை ஒருவருக்கா அல்லது அனைத்து பயனாளர்களுக்கும் வைத்துக் கொள்ளவா? என்று கேட்கும்.விண்டோஸ் கேம்ஸ்களுக்கான ஷார்ட்கட் அனைவருக்குமாக வைக்கப்பட்டிருக்கும். பின்னர் என்டர் தட்டியவுடன், விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும்.
இதில் "Programs" என்ற போல்டரில் டபுள் கிளிக் செய்திடவும். "All Programs" என்பதன் கீழ் உள்ள அனைத்து புரோகிராம்களும் பட்டியலிடப்படும். இதில் "Games" என்ற போல்டருக்குச் செல்லவும்.
அதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் "Cut" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், இந்த போல்டரை டெஸ்க்டாப் அல்லது டெஸ்க்டாப் உள்ளாக ஏதேனும் ஒரு போல்டருக்குள் வைக்கவும். இனி கேம்ஸ் போல்டர் விண்டோஸ் 7 ஸ்டார்ட் மெனுவில் இனிமேல் கிடைக்காது.

Friday, November 22, 2013

ஒரு சச்சினை வீட்டுக்கு அனுப்பிட்டு இன்னொரு சச்சினை நாட்டுக்கு அனுப்பிய 'கடவுள்'...! - www.tnfinds.com - Best Site in the World

ஒரு சச்சினை வீட்டுக்கு அனுப்பிட்டு இன்னொரு சச்சினை நாட்டுக்கு அனுப்பிய 'கடவுள்'...!

கவாஸ்கர் போனபோது நிறையப் பேர் கவலைப்பட்டார்கள். ஆனால் சச்சின் வந்து சேர்ந்தார். இப்போது சச்சின் போனபோதும் நிறையப் பேர் பெரும் கவலையுடன்தான் இருக்கிறார்கள். ஆனால்.. தோ... வந்தே விட்டார் அடுத்த சச்சின்.
15 வயதேயான பிருத்வி ஷா கிரிக்கெட்டில் பின்னி எடுக்கிறார். படு அதிரடியாக ஆடும் இந்தப் பொடியர், மும்பையில் நடந்த ஹாரிஸ் ஷீல்டு போட்டியில் 546 ரன்களைக் குவித்து அத்தனை பேரையும் விழி விரிய வைத்துள்ளார்.
வருங்கால சச்சின் என்றே பலரும் இவரைக் கூப்பிட ஆரம்பித்து விட்டனர்.


 பிருத்வி ஷா ஏற்கனவே மும்பையில் பிரபலமான பொடியர்தான். இவரது பேட்டிங் ஏற்கனே சிலாகிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் தற்போது ஹாரிஸ் ஷீல்டு போட்டியில் அவர் அதிரடியாக 546 ரன்களைக் குவித்த அத்தனை பேரையும் அவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்து்ளது.

ஹாரிஸ் ஷீல்டு தொடரில் இதுவரை ஒரு வீரர் குவித்த தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதானாம். இதற்கு முன்பு அர்மான் ஜாபர் என்பவர் 473 ரன்களைக் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

பிருத்வி, 16 வயதுக்குட்பட்டோருக்கான மும்பை அணியின் கேப்டானாகவும் உருவெடுத்துள்ளார்.

பிருத்வி பேட்டிங்கில் பின்னி எடுத்ததை மைதானத்தில் கூடியிருந்தோர் வியப்புடன் பார்த்து ரசித்தனர். மொத்தம் 85 பவுண்டரிகளை விளாசினார் பிருத்வி.

மொத்தம் 367 நிமிடங்கள் ஆடி, 330 பந்துகளைச் சந்தித்து, 85 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 546 ரன்களைக் குவித்து அவுட்டானார் பிருத்வி.

பிருத்வி, இங்கிலாந்திலும் ஆடியுள்ளாராம். அங்கு கிளவுசெஸ்டர்ஷயர் 2 அணிக்காக ஆடியுள்ளார்.
பிருத்விக்கு 16 வயது வரும்போதுதான் தெரியும்.. அவருக்கு ராசி இருக்கிறதா என்று.. சச்சினுக்குக் கூட 16 வயதில்தானே இந்திய அணியில் இடம் கிடைத்தது.

More News Click Here............. 


வாரத்திற்கு 3 ஆண்கள்.. இங்கிலாந்தின் படு 'சூடான' மாணவி இவர்தானாம்! - www.tnfinds.com - Best Site in the World

வாரத்திற்கு 3 ஆண்கள்.. இங்கிலாந்தின் படு 'சூடான' மாணவி இவர்தானாம்!

இங்கிலாந்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவி ஒருவர், இங்கிலாந்திலேயே அதிக செக்ஸ் பசி கொண்ட மாணவியாக பெயரெடுத்திருக்கிறார்.
மேலும் இவருக்கு 500 பவுண்டு பரிசும், ஒரு கிரேட் மதுவும், ஒரு வருடத்திற்குத் தேவையான ஆணுறைகளையும் கிப்ட் ஹேம்ப்பராக கொடுத்து அதிர வைத்து்ள்ளது ஒரு இணையதளம்.
வாரத்திற்கு 3 ஆண்களுடன் இவர் செக்ஸ் வைத்து இந்த பரிசுகளைத் தட்டிச் சென்றுள்ளார் என்பதுதான் செய்தியே.



 அந்த மாணவியின் பெயர் எலீனா டெசெய்ன்.
இங்கிலாந்திந் ஷாக் அட் யுனி என்ற இணையதளம்தான் எலீனாவை அதீத செக்ஸ் பசி கொண்ட இங்கிலாந்து மாணவியாக தேர்வு செய்துள்ளது.

எலீனாவுக்கு ஒரு காதலர் இருந்தார். இரண்டு வருடமாக விழுந்து விழுந்து காதலித்தனர். ஆனால் அவர் தனது போக்குக்குத் தடையாக இருப்பதாக கருதிய எலீனா அவரைக் கழற்றி விட்டு விட்டார்.

எலீனாவுக்கு செக்ஸ் என்றால் சிப்ஸ் சாப்பிடுவது போல... அதீத செக்ஸ் பசி கொண்டவராம். இதற்கு காதலர் தடையாக இருந்ததால்தான் அவருக்கு டாட்டா காட்டி விட்டாராம்.

தற்போது எக்ஸீட்டர் பல்கலைக்கழகத்தில் இவர் படித்து வருகிறார். இங்கு வருவதற்கு முன்பு இவர் அதிகபட்சம் 2 பேருடன்தான் உறவு கொண்டிருந்தாராம். ஆனால் இங்கு வந்த பிறகு இவரது ரேஞ்சே மாறிப் போய் விட்டதாம். அதாவது கணக்கு வழக்கே இல்லாத அளவுக்கு உறவில் மூழ்கித் திளைத்தாராம்.

தன்னுடன் உறவு கொண்டவர்களை, பெயர் வாரியாக, வயது வாரியாக விவரமாக ஒரு பட்டியலையும் போட்டு வைத்துள்ளாராம்.

வாரத்திற்கு 3 பேருடன் உறவு கொண்டு விடுவாராம். இல்லாவிட்டால் அந்த வாரம் இவருக்கு திருப்தியாக இருக்காதாம். இந்த அதி வேகப் பாய்ச்சல்தான் அவருக்கு அதீத செக்ஸ் பசி கொண்ட இங்கிலாந்து மாணவி என்ற பட்டத்தைக் கொடுத்துள்ளது.

இவருக்குக் கிடைத்துள்ள இந்தப் பட்டத்தால் இவரது எதிர்காலம் பாதிக்கப்படும் என்று இவரது நலம் விரும்பிகள் கவலை தெரிவித்தாலும், அதுகுறித்து நான் கவலைப்படவில்லை என்று கூறிச் சிரிக்கிறார் எலீனா....


More News Click Here.......... 

Servey 12 - www.tnfinds.com - Best Site in the World


திருமணம் செய்வதாகக் கூறி செக்ஸ் அனுபவித்தார்- தொழிலதிபர் மீது நடிகை ராதா புகார் - www.tnfinds.com - Best Site in the World

திருமணம் செய்வதாகக் கூறி செக்ஸ் அனுபவித்தார்- தொழிலதிபர் மீது நடிகை ராதா புகார்

திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி, செக்ஸ் அனுபவித்துவிட்டு இப்போது வைப்பாட்டியாக மட்டும் வைத்துக் கொள்வேன் என்று ஏமாற்றிவிட்டதாக தொழிலதிபர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார் நடிகை ராதா.
மேலும் ரூ.50 லட்சம் நகை-பணத்தை சுருட்டிச்சென்று விட்டார் என்றும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
சுந்தரா டிராவல்ஸ், அடாவடி, மானஸ்தன், காத்தவராயன் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை ராதா. தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
சென்னை சாலிகிராமம், லோகய்யா தெருவில் தனது தாயாருடன் வசித்து வருகிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
பின்னர் அவர், நிருபர்களைச் சந்தித்து கூறியதாவது:
எனது பூர்வீகம் ஆந்திர மாநிலம் நெல்லூர். ஆனால், சென்னையில்தான் பிறந்து வளர்ந்தேன். பிளஸ்-2 வரை படித்திருக்கிறேன். சினிமாவில் பிரபலமாகி நன்றாக பணம் சம்பாதித்துள்ளேன். எனது பெற்றோருக்கு நான் ஒரே மகள் என்பதால் வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்டேன்.
ஓரளவு சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போதே, திருமணம் செய்துகொண்டு, குழந்தைகள் பெற்று வாழ ஆசைப்பட்டேன். அந்த ஆசைதான் என்னை பெரும் புயலில் சிக்க வைத்து, எனது வாழ்க்கையை இப்போது நாசமாக்கிவிட்டது.


கடந்த 2008-ம் ஆண்டு பிரபல படஅதிபர் ஒருவர் எனக்கு போன் செய்து, 'மலேசியாவைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் ஒருவர், உன்னை நேரில் பார்த்து பேச ஆசைப்படுகிறார். அவர் உனது தீவிர ரசிகர்' என்று சொன்னார். நான் அதற்கு சம்மதித்தேன்.
ஏவி.எம். ஸ்டூடியோவில் வைத்து, அந்த பட அதிபர் மூலம், மலேசிய தொழில் அதிபர் என்ற நாமத்துடன் பைசூல் என்ற ஷியாம் என்பவர் என்னை நேரில் சந்தித்தார். என்னை கதாநாயகியாக நடிக்க வைத்து ஒரு படம் தயாரிப்பதாக சொன்னார். ரூ.10 ஆயிரம் பணத்தை அட்வான்சாக கொடுத்தார்.

அதன்பிறகு பட தயாரிப்பு தொடர்பாக அவரும், நானும் அடிக்கடி சந்தித்து பேசினோம். அடுத்த 20 நாட்களில் பைசூல் என்னை நேசிப்பதாக சொன்னார். திருமணம் செய்துகொள்வதாகவும் தெரிவித்தார்.
ஏற்கனவே இல்லற வாழ்க்கையை விரும்பிய என்னை அவரது காதல் பொங்கிய அழைப்பு சிந்திக்க வைத்தது. அவரது காதலை ஏற்றுக்கொண்டேன். நாளடைவில் என்னை சட்டபூர்வமாக மணந்து கொள்ளாமலேயே, என்னோடு உல்லாசம் அனுபவித்தார். பைசூலும், நானும் கணவன்-மனைவி போலவே ஒரே வீட்டில் வாழ்ந்தோம். அவருக்கு நானே சமைத்துப் போட்டேன். சினிமாவில் நடிப்பதையும் விட்டுவிட்டேன்.

அவருடன் நடத்திய இல்லற வாழ்க்கையின் பலனாக, நான் கர்ப்பம் ஆனேன். ஆனால், அவர் சொன்னதால் கருவை கலைத்துவிட்டேன். கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் கணவன்-மனைவியாக ரகசிய வாழ்க்கை வாழ்ந்தோம்.

என்னை வெளிப்படையாக பைசூல் மனைவியாக ஏற்றுக்கொள்ள மறுத்தார். தனது தந்தை-தாய் என்னை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று முதலில் சொன்னார். இப்போது அவரது தாய்-தந்தை இறந்துவிட்டார்கள். அதற்கு பிறகும் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார்.
'நடிகையை திருமணம் செய்ய முடியாது, வைப்பாட்டியாகத்தான் வைத்துக்கொள்ள முடியும்' என்று என்னை இப்போது கிண்டலாக பேசுகிறார். அவரோடு இனி வாழ முடியாது என்று முடிவு செய்து, கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். அவர் என்னை அனுபவித்துவிட்டு, தூக்கி எறிந்துவிட்டார். செக்ஸ் சுகத்துக்கும், பணத்துக்கும் மட்டும் என்னை பயன்படுத்தினார்.

பைசூல் வைர நகை செய்யும் தொழிலும் செய்வதாகச் சொன்னார். அந்த தொழிலுக்கு தேவைப்படுவதாக சொல்லி எனது நகைகளையும், ரொக்கப் பணமாக ரூ.50 லட்சம் வரையும் என்னிடம் இருந்து சுருட்டினார். அந்த பணத்தைத் திருப்பித் தரவும் மறுத்துவிட்டார். சென்னை திருவல்லிக்கேணியில் அடுக்குமாடி சொந்த வீட்டில் வாழ்கிறார். அவரது சொந்த ஊர் சிவகங்கை அருகே உள்ள இளையான்குடி, புதூர் ஆகும். அவர் ஏற்கனவே ஒரு பெண்ணை ஏமாற்றி இருப்பதாக அறிகிறேன்.
பணத்துக்கும், போகத்துக்கும் என்னைப்போல வேறு நடிகையையோ, வேறு பெண்ணையோ அவர் ஏமாற்றி விடக்கூடாது. அவரது வேடத்தை கலைத்து, சட்டப்படி அவருக்கு தண்டனை பெற்றுத்தருவதற்காகவே, இந்த புகார் மனுவை கொடுத்துள்ளேன்," என்றார்.
அவரது புகார் மனு விசாரணைக்காக தியாகராய நகர் போலீஸ் துணை கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

More News Click Here...... 



ஸ்ருதி ஹாஸனைத் தாக்கியவரின் அடையாளம் தெரிந்தது! - www.tnfinds.com - Best Site in the World

ஸ்ருதி ஹாஸனைத் தாக்கியவரின் அடையாளம் தெரிந்தது!

ஸ்ருதி ஹாஸனை வீடு புகுந்து தாக்கிய நபர் யார் என்ற அடையாளம் தெரிந்துவிட்டது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் கடந்த செவ்வாய்க் கிழமை காலை அவரது மும்பை வீட்டில் வைத்து தாக்கப்பட்டார்.
மும்பை பாந்த்ரா கடற்கரையோர பகுதியில் நடிகர், நடிகைகள் அதிகம் வசிக்கும் பிரபலமான அடுக்கு மாடி குடியிருப்பில் 6-வது மாடியில் ஸ்ருதியின் வீடு உள்ளது.


ஸ்ருதி ஹாஸனைத் தாக்கியவரின் அடையாளம் தெரிந்தது!

இந்த சம்பவத்தினால் அதிர்ந்து போன ஸ்ருதி ஹாசன் அந்த வீட்டில் தங்காமல், தன் தோழி வீட்டில் இருக்கிறார்.
முதலில் இந்த சம்பவம் குறித்து புகார் கொடுக்காத ஸ்ருதிஹாசன் நேற்று முன்தினம் இரவு பாந்திரா போலீசில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து ஸ்ருதிஹாசனிடம் அத்துமீறி நடந்து கொண்டது யார் என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ஸ்ருதிஹாசன் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு போலீசார் நேரில் சென்று விசாரித்தனர். அங்கு வரும் வெளியாட்கள், பாதுகாவலர் அறையில் இருக்கும் நோட்டில் தங்களது பெயர் விவரங்களை எழுதி வைப்பது வழக்கம்.அந்த நோட்டில் பார்த்த போது சுருதிஹாசனை பார்க்க வந்தது அசோக் ஜெயின் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் அங்கிருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் குறிப்பிட்ட நேரத்தில் வந்த நபர் அசோக் ஜெயின் என்று தனது பெயரை பதிவு செய்து இருந்தவன் தெரியவந்தது. அந்த நபரை அடுக்குமாடி குடியிருப்பு பாதுகாவலர்கள் அடையாளம் காட்டினர்.
மேலும் அந்த நபர் சிறிது நாட்களுக்கு முன் ஸ்ருதி ஹாசன் நடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்பு அரங்குகளிலும் ஸ்ருதியைத் தொட முயற்சித்து விரட்டியடிக்கப்பட்டுள்ளான். படப்பிடிப்பு குழுவினரிடம் கண்காணிப்பு கேமரா வீடியோவைக் காட்டியபோது, அவர்களும் அந்த வாலிபரை அடையாளம் காட்டினர்.
இதைத் தொடர்ந்து அந்த நபர் மீது அத்துமீறல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, தேட ஆரம்பித்துள்ளனர் போலீசார்.
இதற்கிடையே ஸ்ருதிஹாஸன் மீதான இந்தத் தாக்குதல் குறித்து அதிர வைக்கும் வேறு சில தகவல்களை மும்பை மீடியா வெளியிட்டுள்ளன.

More News Click Here........... 


'ஓவரா ஆட்டம் போட்ட.. மவனே காணாம போயிருவ!' - விஜய்சேதுபதிக்கு ஆளும்கட்சி இயக்குநர் எச்சரிக்கை - www.tnfinds.com - Best Site in the World

'ஓவரா ஆட்டம் போட்ட.. மவனே காணாம போயிருவ!' - விஜய்சேதுபதிக்கு ஆளும்கட்சி இயக்குநர் எச்சரிக்கை

விஜய் சேதுபதி இப்போது போலவே எளிமையாக இருந்தால்தான் நல்லது. மவனே மீறி ஓவரா ஆட்டம் போட்ட, காணாம போயிருவ, என்று எச்சரித்தார் அதிமுக இயக்குநர் என்று அழைக்கப்படும் ஆர் வி உதயகுமார்.
விஜய் சேதுபதி - ஐஸ்வர்யா, நீலிமா, ஜெயப்பிரகாஷ் நடித்துள்ள படம் பண்ணையாரும் பத்மினியும். சிநேகா கவுரவத் தோற்றத்தில் வருகிறார். அருண்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
'ஓவரா ஆட்டம் போட்ட.. மவனே காணாம போயிருவ!' - விஜய்சேதுபதிக்கு ஆளும்கட்சி இயக்குநர் எச்சரிக்கை
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது.
விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், இயக்குநர்கள் கரு பழனியப்பன், சீனு ராமசாமி உள்பட பலரும் பங்கேற்றனர்.
இயக்குநர் ஆர்வி உதயகுமார் பேசுகையில், "இன்றைக்கு தினத்தந்தி பேப்பரைத் திறந்தால் நான்கு பக்கங்களுக்கு சினிமா விளம்பரங்கள். சந்தோஷமாக இருந்தது. அந்த அளவுக்கு சினிமாவை சுதந்திரமாக இயங்க அனுமதித்திருக்கிறது இந்த அரசு.
ஒரு ஹீரோவுக்கான இலக்கணத்தை உடைத்திருக்கிறார் விஜய் சேதுபதி. ஒரு ஹீரோ இப்படித்தான் நடக்கணும், இருக்கணும் என்பதையெல்லாம் மாற்றியிருக்கிறார். அவரது எளிமை எனக்கு ரொம்பப் பிடிக்கும். இதை அவர் தொடரவேண்டும். மீறி ஆட்டம் போட்டா.. மவனே காணாம போயிருவ...
இன்றைக்கு உள்ள ஹீரோக்கள், இயக்குநர்கள், ரெண்டு படம் ஓடினதுமே ஏதோ இவர்கள்தான் சினிமாவையே கண்டுபிடித்தவர்கள் மாதிரி பேசுவதைப் பார்க்கிறேன். ஆனால் இந்தப் படத்தின் இயக்குநர் அப்படி இல்லை. நிச்சயம் பெரிய ஆளா வருவார்.
படத்தின் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் காத்தடித்தால் பறந்துவிடுவது மாதிரிதான் இருக்கிறார். ஆனால் திறமைக்காரர். இசைஞானி இளையராஜாவுக்கப்புறம் முதல்முறை கேட்கும்போதே பிடிக்கிற மாதிரி பாடல்களைப் போட்டிருக்கிறார்," என்றார்.

More News Click Here.....

கமல் அட்வைஸால் சீரியஸ் ஹீரோவாக மாறிய விவேக்!

கமல் அட்வைஸால் சீரியஸ் ஹீரோவாக மாறிய விவேக்!

கமல் அறிவுரையால், காமெடியனாக இருந்து சீரியஸ் ஹீரோவாக முதல் முறை நடித்துள்ளேன் என்கிறார் விவேக்.
டிரிபிள் எஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஜே.ஏ.லாரன்ஸ் தயாரிக்கும் புதிய படம் ‘நான்தான் பாலா'.
இந்த படத்தில் நாயகனாக காமெடி நடிகர் விவேக் ஹீரோவாக நடிக்கிறார். இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கண்ணன் இயக்கியுள்ளார். வெங்கட் க்ரிஷி என்பவர் இசையமைக்கிறார். மணவாளன் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

இப்படம் குறித்து நடிகர் விவேக் கூறியிருப்பதாவது:
‘நான்தான் பாலா' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இது அவார்டுக்காக எடுக்கப்பட்ட படம் கிடையாது. கமர்ஷியல் படம். இந்த படத்தில் சண்டைக்காட்சிகளும் உள்ளன. அவை, வழக்கமான சண்டைக் காட்சிகள் போல் இல்லாமல் வித்தியாசமாக படமாக்கியிருக்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன்.

பாடல்களை நா.முத்துக்குமார், இளையகம்பன் ஆகியோர் எழுதியுள்ளனர். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் கவிஞர் வாலியிடம் கேட்டு ஒரு பாட்டை வாங்கியிருக்கிறோம். அவர் இதுவரை எழுதிக்கொடுத்த பாடல்களில் இதுதான் கடைசிப் பாடல் என்று சொல்லிக்கொள்ளும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது.

இந்த கதையை பலமாதங்களுக்கு முன்பு நான் கேட்டபோது இந்த கதையை நான் பண்ணலாமா? வேண்டாமா? என்ற அச்சம் என்னுள் எழுந்தது. காரணம் என்னவென்றால் இது ஒரு சீரியஸ் கதை. 25 வருடமாக மக்களிடம் காமெடியனாக போய் சேர்ந்திருக்கிறோம். திடீர்னு அதிலிருந்து மாறி ஒரு சீரியஸ் கேரக்டர் பண்ணும்போது ரசிகப் பெருமக்கள் ஒத்துக் கொள்வார்களா? என்ற தயக்கம் இருந்தது.

இப்படி என் மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் உலகநாயகன் கமல் ஒரு நிகழ்ச்சியில் என்னை சந்தித்து 25 வருடம் காமெடி பண்ணிட்டீங்க. நல்ல கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்க இதுதான் சரியான நேரம். அது உங்களுடைய இன்னொரு பரிணாமத்தை வெளியே எடுத்து வரும் என்று சொன்னார். அதன்பிறகுதான் இந்த கதையை உறுதியாக செய்ய ஆரம்பித்தேன்.

ஆனால், படம் முடிந்து இப்போது பார்க்கும்போது, என்னுடைய திரை வாழ்க்கையில் இந்த படம் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று உணர்கிறேன். நகைச்சுவை நடிகர்களுக்கு கிடைக்கக்கூடிய கௌரவமாக இந்த படம் இருக்கும். இந்திய நகைச்சுவை நடிகர்களுக்கு கிரீடத்தில் ஏற்றிவைக்கப்பட்ட ஒரு மகுடம் என்றே இந்த படத்தைச் சொல்லலாம். எல்லா காமெடியன்களும் இந்த படத்தை பார்த்து பெருமைப்படுவார்கள். அப்படி ஒரு விஷயத்தை இந்த படத்தில் செய்திருக்கிறேன்

இதற்கு பெரிய அளவில் நன்றி சொல்ல வேண்டியது உலகநாயகன் கமலுக்குத்தான். இந்த படம் ரொம்ப வித்தியாசமாக வந்திருக்கிறது. இது தமிழ்நாட்டு ரசிகர்களின் இதயத்தையும் தட்டும், டெல்லி விருது கதவுகளையும் தட்டும். அதுபோன்ற வித்தியாசமான படமாக வந்திருக்கிறது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கூடிய விரைவில் நடைபெறவிருக்கிறது. இந்த வெளியீட்டு விழாவில் ஒருவர் கொடுக்கவேண்டும், மற்றொருவர் வாங்கவேண்டும் என்பது சம்பிரதாயம். அதில் ஒருவர் உலகநாயகன் கமல். மற்றொருவர் யார் என்பதை இப்போதைக்கு சஸ்பென்ஸாக வைக்கிறேன்," என்று கூறி முடித்தார்.

More News Click Here.....

சிம்பு கூடவா?: தயங்கிய நயனின் மனதை மாற்றிய பாண்டிராஜ் - www.tnfinds.com - Best Site in the World

சிம்பு கூடவா?: தயங்கிய நயனின் மனதை மாற்றிய பாண்டிராஜ்

சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா முதலில் தயங்கினாராம்.
சிம்புவும், நயன்தாராவும் வல்லவன் படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது காதலில் விழுந்த அவர்கள் சில காலம் ஒன்றாக இருந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.
இதையடுத்து அவர்கள் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்காமல் இருந்தனர்.

சிம்பு பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கு அவருக்கு ஏற்ற ஜோடியை தேடி வந்தார்கள். இந்நிலையில் இந்த கதைக்கு நயன்தாரா தான் பொருத்தமாக இருப்பார் என்ற முடிவுக்கு வந்தார் பாண்டிராஜ்.

பாண்டிராஜ் தனது படத்தின் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் மூலம் நயன்தாராவை அணுகி தான் இயக்கும் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்குமாறு கேட்டுக் கொண்டார். கதை பிடித்துவிட்டபோதிலும் முன்னாள் காதலருடன் நடிக்க நயன் முதலில் தயக்கம் காட்டியுள்ளார்.

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும், நடிகை தீபிகா படுகோனேவும் ஒரு காலத்தில் காதலர்களாக இருந்தனர். இருப்பினும் அவர்கள் அண்மையில் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தனர் என்று ஒரு உதாரணத்தை நயனிடம் தெரிவித்துள்ளார் பாண்டிராஜ்.

பாண்டிராஜ் பேச்சைக் கேட்ட நயன்தாரா சிம்புவுடன் நடிக்க ஒப்புக் கொண்டார். படத்தில் மைலா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நயன்தாரா.

More News Click Here.....



லிட்டர் டீசலுக்கு 90 கிமீ மைலேஜ்: அடுத்து வந்த புதிய ஃபோக்ஸ்வேகன் கார்! - www.tnfinds.com - Best Site in the World

லிட்டர் டீசலுக்கு 90 கிமீ மைலேஜ்: அடுத்து வந்த புதிய ஃபோக்ஸ்வேகன் கார்!

லிட்டருக்கு 111 கிமீ மைலேஜ் தரும் ஃபோக்ஸ்வேகன் எக்ஸ்எல்1 காருக்கு உற்பத்தி இலக்கைத் தாண்டி முன்பதிவு கிடைத்துள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்தநிலையில், இதே தொழில்நுட்பத்தில் தற்போது அப் ஹேட்ச்பேக் காரின் கான்செப்ட் மாடலை ஃபோக்ஸ்வேகன் அறிமுகம் செய்துள்ளது. டோக்கியோ மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த கார் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. டீசல் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட இந்த கார் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ட்வின் அப் என்ற பெயரில் இந்த கான்செப்ட் கார் பார்வைக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இது 4 கதவுகள் கொண்ட கார் மாடலாக இருக்கிறது. அப் அடிப்படையிலான இந்த காரில் சில மாறுதல்களுடன் ஃபோக்ஸ்வேகன் அறிமுகம் செய்துள்ளது. ஆனால், இதன் எஞ்சின் மற்றும் டிரான்ஸ்மிஷன் அமைப்பு மட்டும் எக்ஸ்எல்1 காரிலிருந்து எடுத்து அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது எக்ஸ்எல்1 கார் போன்றே டீசல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் கொண்ட ஹைபிரிட் மாடல் என்பதும் அதிக ஆவலைத் தூண்டுவதாக இருக்கிறது.

இந்த காரில் 803 சிசி டீசல் எஞ்சினும், 27 kW திறன் கொண்ட எலக்ட்ரிக் மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது. 7 ஸ்பீடு டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன் இணைந்து செயல்புரியும்.

ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் இந்த கார் லிட்டருக்கு 90.91 கிமீ மைலேஜ் தருவதாக ஃபோக்ஸ்வேகன் தெரிவிக்கிறது.

இந்த காரில் 33 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் இருக்கிறது. தவிர, 8.6 kWh லித்தியம் அயான் பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டும் பின்புற இருக்கைக்கும், பூட் ரூமுக்கும் இடையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் பிரத்யேக அமைப்பு கொண்ட கிளட்ச் மூலம், டீசல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டாரை தனித்தனியாக இயக்க உதவுகிறது.

இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 123 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

எலக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும்போது 0- 96 கிமீ வேகத்தை 8.8 வினாடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டது. அதே டீசல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் இணைந்த ஹைபிரிட் நுட்பத்தில் 

இதில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரிகள் மூலம் அதிகபட்சமாக 51 கிலோமீட்டர் தூரம் வரை செல்ல முடியும்.

பிரேக் பிடிக்கும்போது இதன் எலக்ட்ரிக் மோட்டார் ஜெனரேட்டர் போன்று செயல்படும். அப்போது, பிரேக் ஆற்றல் பேட்டரியில் மின் ஆற்றலாக மாற்றி சேமிக்கப்படும் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது.

இதன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் முழுவதுமாக டிஜிட்டல் மீட்டர்களை கொண்டிருக்கிறது. டீசல் அல்லது எலக்ட்ரிக் மோட்டாரில் மாற்றும்போது இன்ஸ்ட்ரூமென்ட் கிள்ஸ்ட்டரில் இருக்கும் பின்னணி விளக்குகளின் நிறமும் மாறிவிடும். ஸ்மார்ட்போன்களில் உள்ளது போன்ற அமோலெட் திரை இதில் பயன்படுத்தப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

More News Click Here.....

அரசு அதிகாரிகளுக்கு ரூ.23 கோடி லஞ்சம் கொடுத்த பெங்களூர், சென்னைவாசிகள் - www.tnfinds.com - Best Site in the World

அரசு அதிகாரிகளுக்கு ரூ.23 கோடி லஞ்சம் கொடுத்த பெங்களூர், சென்னைவாசிகள்

அரசு அதிகாரிகளுக்கு அதிகம் லஞ்சம் கொடுத்த நகரங்களில் பெங்களூர் முதலிடத்திலும், சென்னை இரண்டாவது இடத்திலும் உள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த என்.ஜி.ஓ.வான ஜனகிரஹா ஊழலுக்கு எதிராக ஒரு இணையதளத்தை துவங்கியுள்ளது. www.ipaidabribe.com என்று பெயரிடப்பட்டுள்ள அந்த இணையதளத்தில் தங்களுக்கு வேலை நடக்க அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தவர்கள் அதன் விவரங்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த இணையதளத்தில் உள்ள லஞ்ச விவரங்களை வைத்து அதிகமாக லஞ்சம் கொடுத்த நகரங்களை பார்ப்போம்.
நாடு முழுவதும் உள்ள 22,378 பேர் அந்த இணையதளத்தில் தாங்கள் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவரும் அளித்த லஞ்சத் தொகை ரூ.57.61 கோடி ஆகும்.

அந்த இணையதளம் துவங்கப்பட்ட கடந்த 2011ம் ஆண்டில் இருந்து இதுவரை லஞ்ச விவரங்களை மக்கள் தெரிவித்து வருகின்றனர். இதில் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் தான் 3 ஆண்டுகளில் அதிகமாக ரூ.16 கோடி லஞ்சம் கொடுத்துள்ளனர்.அதிகமாக லஞ்ச அளித்த நகரங்களில் பெங்களூரை அடுத்து சென்னை உள்ளது. சென்னையைச் சேர்ந்த 1,183 பேர் அந்த இணையதளத்தில் லஞ்ச விவரங்களை தெரிவித்துள்ளனர். அவர்கள் கடந்த 3 ஆண்டுகளில் அரசு அதிகாரிகளுக்கு ரூ.7.08 கோடி லஞ்சம் கொடுத்துள்ளனர்.

நில ஆவணங்கள், தண்ணீர், மின் இணைப்பு, பாஸ்போர்ட் சரிபார்த்தல், கல்வி நிறுவனங்களில் அட்மிஷன் பெறுதல் ஆகியவற்றுக்காக மக்கள் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளனர். பெங்களூர், சென்னையை அடுத்து மும்பை (ரூ. 6.97 கோடி), டெல்லி (ரூ. 4.4 கோடி), ஹைதராபாத் (ரூ. 2.89 கோடி), கொல்கத்தா (ரூ. 1.63 கோடி) மற்றும் கொச்சி (ரூ. 56,101) ஆகிய நகரங்கள் உள்ளன.

பெங்களூரில் உள்ளவர்களுக்கு எங்கள் இணையதளம் குறித்த விழிப்புணர்வு உள்ளதால் அதிகமானோர் தாங்கள் கொடுத்த லஞ்ச விவரங்களை தெரிவித்துள்ளனர். சென்னையிலும் எங்கள் இணையதளத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மக்கள் எங்கள் இணையதளம் மூலம் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். தினமும் 20க்கும் மேற்பட்டோர் லஞ்ச விவரங்களை தெரிவித்து வருகின்றனர் என்று ஜனகிரஹாவின் தயாரிப்பு மேலாளர் ஜோலிடா சால்டன்ஹா தெரிவித்துள்ளார்.

மக்கள் எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு ரூ.4 லட்சம் முதல் போக்குவரத்து போலீசாருக்கு ரூ.20 லஞ்சம் கொடுத்தது வரை இணையதளத்தில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த 107 பேர் தாங்கள் லஞ்சம் தர மறுத்ததாக தெரிவித்துள்ளனர்.

More News Click Here...........



படு தாராள நாயகி… ஷாக் ஆன டைரக்டர்! - www.tnfinds.com - Best Site in the World

படு தாராள நாயகி… ஷாக் ஆன டைரக்டர்!

பல இயக்குநர்கள், நாயகிகளை படுத்தி எடுப்பதுண்டு. பல நாயகிகள் இயக்குநர்களை படுத்தி எடுத்த கதையும் உண்டு.
ஆனால் இயக்குநர் கஸாலிக்கு கிடைத்த அனுபவம் அந்த மாதிரி இல்லாமல் கொஞ்சம் வேற மாதிரி.
"சாய்ந்தாடு சாய்ந்தாடு" படத்தின் இயக்குநர் கஸாலிக்கு அந்த நாயகி கொடுத்த இன்ப அதிர்ச்சியை அவர் வாயாலேயே கேட்போம்.

"சாய்ந்தாடு சாய்ந்தாடு' எனக்கு முதல் படம். இது ஒரு குறுநகரத்தில் நடக்கும் கதை. கதைப்படி ஷீலா என்கிற கேரக்டர் அல்ட்ரா மாடர்னாக சிட்டியில் வளர்ந்த பொண்ணு. சிட்டியில் இருப்பது போலவே அரையும் குறையுமான காஸ்ட்யூமோடு அந்த குறுநகரத்திற்கு வருவாள்.

இந்த ஷீலா கேரக்டரில் நடிக்க வைக்க, மும்பையில் இருந்து ஷிவானி என்ற மாடலை அழைத்து வந்தோம். படப்பிடிப்பு அன்று ஷிவானிக்கு, நடிக்க வேண்டிய கேரக்டர் பற்றி ஆங்கிலத்தின் விளக்கிவிட்டேன். ஆனால் அந்த அரைகுறை ஆடை மேட்டர் பற்றி எப்படி விளக்குவது என்பதில் சின்னதாக எனக்குள் கடமுடா. ஒருவழியாக அதை கன்வே பண்ணிவிட்டேன். முட்டிக்கால் தெரியவேண்டும்... லைட்டா அப்டி இப்டி இருக்கணும்னு சொல்லியாச்சு.

அதைக் கேட்ட ஷிவானி, ஓகே காஸ்ட்யூம் கொண்டு வாங்க பார்ப்போம்னு சொல்லி உடனே கொடுத்த காஸ்ட்யூமை போட்டுட்டு வந்து நின்னாங்க. கூடவே, சார் இந்த காஸ்ட்யூம்ல நீங்க கேட்ட கிளாமர் கொஞ்சம் கூட இல்லயே... எங்கிட்ட வேற காஸ்ட்யூம் இருக்கு போட்டுட்டு வரவான்னு கேட்டாங்க. நானும் கேமராமேன் ஷிவாவும் ஓகேன்னு சொன்னோம்.

அடுத்த அஞ்சாவது நிமிஷம் காஸ்ட்யூம் ஓகேவான்னு பார்க்க மேடம் கூப்பிட்டாங்கன்னு அஸிஸ்டெண்ட் வந்து சொன்னார். ஷிவானி அறைக்கு நானும் கேமராமேனும் போனோம்.
"இது ஓகே"வா சார்னு ஆஜரான ஷிவானியைப் பார்த்து, எங்களுக்கு ஷாக். டர்ட்டி கேர்ள் மாதிரி ஒரு காஸ்ட்யூம். கிட்டத்தட்ட டிரெஸ் எங்க இருக்குன்னு டெலஸ்கோப் வச்சி பார்க்கவேண்டிய அளவுக்கு க்ளாமரோ க்ளாமர்.

இதை "அதிர்ச்சி"ன்னு எடுத்துக்கிறதா, இல்ல "இன்ப அதிர்ச்சி"ன்னு எடுத்துக்கிறதான்னு எங்களுக்கு குழப்பம். ஏன்னா, ஷிவானியோட அந்த தாராள மனசை பயன்படுத்தமுடியாதுங்கிற வருத்தம்தான்.

ஷிவானி கிட்ட, இது வில்லேஜ் சப்ஜெக்ட். எங்க ஊரு இந்த அளவெல்லாம் தாங்காதும்மா. பொறு. உனக்கும் வேண்டாம். எனக்கும் வேண்டாம்னு சொல்லி மூணாவதா ஒரு காஸ்ட்யூம் கொடுத்து நடிக்க வச்சோம். இருந்தாலும் காரைக்குடில சூட்டிங் பார்க்க வந்த கூட்டம் அப்பவே ஷிவானிக்கு ரசிகர் மன்றம் வச்சிட்டாங்க.

உன்னோட நல்ல மனசுக்கு நீ தமிழ் சினிமால ரொம்ப நல்லா வருவேம்மான்னு ஷிவானியை வாழ்த்தி அனுப்பி வச்சோம்.
நீங்க மட்டும் இல்ல சார் படம் வந்தா நாங்களும்... அதாவது ரசிகர்களும் ஷிவானியை அப்டியே வாழ்த்துவாங்க!" என்று சிலிர்க்கிறார் அந்த கவர்ச்சிக் காஸ்ட்யூமை மீண்டும் மனத்திரையில் ஓடவிட்டபடி!!

More News Click Here...........