Saturday, November 16, 2013

இந்த வார ராசி பலன்(15.11.2013 முதல் 21.11.2013 வரை) - www.tnfinds.com - Best Site in the World

இந்த வார ராசி பலன்(15.11.2013 முதல் 21.11.2013 வரை)

மேஷம்

பொது
அதிகப்படியான முயற்சி தேவைப் படும். உடல் உபாதை வந்து போகும். உயர்வுக்கு உரிய வழியை தேர்வு செய்யுங்கள். ஜன்ம ராசியில் கேது இருப்பது சிறப்பல்ல. எதிலும் நிதானம் தேவை.
பெண்களுக்க
தனலாபம் இருக்கும். கண்டசனியின் காலமாக இருப்பதால் தேவையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். குடும்பச் செலவுகளில் சிக்கனம் மேற்கொள்வீர்கள். உடன் பிறந்தவர் நல்அன்பு பாராட்டுவர்.
வேலை பார்ப்பவர்களுக்கு
தொழிலாளர்கள் எதிர்பார்த்த செயல் தடைபடும். ஒப்பந்தம் மாறும். வியாபாரிகளுக்கு லாபம் குறையும். கலைஞர்களின் உழைப்புக்கு பலன் உண்டு. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.


ரிஷபம்

பொது : உடல்நிலை ஆரோக்கியம் காணும். பொருளாதார தடை நீங்கும். பெரிய மனிதர்களின் நட்பை பெறுவீர்கள். சகோதரர்களின் உதவியும், ஆதரவும் பெறுவீர்கள். இடம், நிலம் வழி ஆதாயம் உண்டு. அரசாங்க வாய்ப்பு தேடிவரும்.
பெண்களுக்கு : குடும்ப பெண்கள், பணவசதிக்கேற்ப தங்கநகை வாங்குவர். குடும்பத்தில் சுப செலவுகள், திருமணம் போன்ற வைபவங்கள் நடக்க வாய்ப்பு கூடிவரும். விருந்து, விசேஷங்களில் மகிழ்ச்சிகர மனதுடன் கலந்து கொள்வீர்கள். இல்லறத்துணையின் கருத்து, குடும்பத்திற்கு நலமும், வளமும் சேர்ப்பதாக அமையும்.
வேலை பார்ப்போர்க்கு : கலைஞர்கள் வாழ்வு சிறக்கும். அரசு அதிகாரிகள் இழந்த பதவி, கவுரவத்தை மீண்டும் பெறுவீர்கள். தொழில் அதிபர்கள் வெற்றி காண்பர். வியாபாரிகள் புதிய தொழில் தொடங்குவீர்கள்.

மிதுனம்

பொது:
குடும்பத்தில் உத்யோகம், தொழில் நிமித்தமாக தற்கால பிரிவு இருக்கும். தடைகளை மாற்றி வெற்றி தருவார். சகோதரர்களின் வாழ்வு சீராகும். வாரத்தின் பின்பகுதியில் வெற்றி தரும். செவ்வாய், சூரியன் பரிவர்த்தனை சிறப்படைய செய்யும். ‘
பெண்களுக்கு:
பெண்கள், குடும்பத்தின் அத்தியவசிய தேவைகளுக்கு மட்டும் பணம் செலவு செய்வது நல்லது. கேது நிம்மதியை தருவார். இல்லறத்துணையிடம் தேவையற்ற விவாதம் பேச வேண்டாம்.
வேலை பார்ப்போர்க்கு:
வியாபாரிகள் தொழில் மாற்றம், இடம் மாற்றம் காண்பர். கலைஞர்களின் எதிர் நீச்சல் முடிவுக்கு வரும். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் வளமான வாழ்வும் நிறைவான சந்தோஷமும் பெறுவர்.

கடகம்

பொது:
அதிகப்படியான முயற்சியால் மட்டும் எந்த காரியமும் வெற்றியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் தனலாபமும் உண்டாகும். தேவையற்ற பிரச்னையால் அவ்வப்போது குழந்தைகளிடம் கோபப்படுவீர்கள்.
பெண்களுக்கு
மகான்களின் ஆசீர்வாதம் கிட்டும். தந்தையின் உத்யோகம், தொழில் மேம்படும். தனகாரகன் குருபகவான் பார்வை நலம் தரும். எதையும் யோசித்து முடிவு எடுக்கவும். பெண்கள், குடும்ப பணச்செலவில் சிக்கனம் பின்பற்றுவது அவசியமாகும்.
வேலை பார்ப்பவர்க்கு
வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடக்கவும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு கிட்டும். தனலாபம் பெறுவீர்கள். அரசு அதிகாரிகள் பொறுப்புடன் பணியாற்றுங்கள்.

சிம்மம்

பொது:
எதிலும் அவசரப்பட வேண்டாம். சகோதரர்கள் வழி மனக்கசப்பு வரும். தந்தைவழி வர்க்கம் ஆதரவும் ஆதாயமும் தருவர். மனைவி வழி யோகம் வலுப்பெறும்.
பெண்களுக்கு:
பெண்கள், பிள்ளைகளின் எதிர்கால நலன் சிறக்க, உரிய வழிவகை காண்பர்.ராகுவால் திடீர் அதிர்ஷ்டம் பெறுவீர்கள். இல்லறத் துணையின் உறவினர் உதவிகரமாக நடந்து கொள்வர்.
வேலை பார்ப்பவர்க்கு:
வியாபாரி கள் தொழில் வளர்ச்சி பெறுவர். கலைஞர்களுக்கு நிறைவான சூழல் உருவாகும். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் புகழுடன் வலம் வருவீர்கள். சந்திராஷ்டமம், 15ம் தேதி வருவதால் எதிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

கன்னி

பொது:
முன்கோபம் தவிர்க்கவும். பணவிரயம், தேவையற்ற குழப்பம் உருவாகும். பதவியோ, பதவி உயர்வோ கிட்டும். சகோதரர்கள் நலம் காண்பர். நம்பியவர்கள் மூலம் நல்ல வாய்ப்பும், தொழில் வளர்ச்சிக்கு போதிய பண உதவியும் கிடைக்கும். சந்திராஷ்டமம், 15, 16, 17 ஆகிய தேதிகளில் வருவதால் பிரயாணம் தவிர்க்கவும்.
பெண்களுக்கு:
தம்பி, தங்கைக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். பெண்கள், உறவினர்களை மனமுவந்து உபசரிப்பர். புத்திரரின் அறிவுத் திறன் வளர, உங்களின் அனுபவங்களை சொல்வீர்கள்.
வேலை பார்ப்போர்க்கு
வியாபாரிகள் சற்று பின்னடைவைத் சந்திப்பர். கலைஞர்கள் முயற்சிக்கு தக்க பலன் உண்டு. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழவும்.

துலாம்

பொது:
தனலாபம், கவுரவம் பெறுவீர்கள். விலகியவர்கள் வருத்தப்படுவர். தடைபட்ட திருமணம், வருத்தமாக இருந்த மனவேதனை மாறும். தொழில், உத்யோகம் மேம்படும். தாய், தந்தையர் நலம் காண்பர்.
பெண்களுக்கு
பெண்கள், கணவரின் அன்பு சீரான பணவசதி கிடைத்து, சந்தோஷ வாழ்வு நடத்துவர்.சகோதரர்கள் மேன்மையடைவர். முன்கோபம் தவிர்க்கவும்.
வேலை பார்ப்பவர்களுக்கு
தொழில் அதிபர்கள் நலம் பெறுவர். வியாபாரிகளின் உயர்வுக்கு வாய்ப்பு கிட்டும். கலைஞர்கள் பூரண பலம் பெறுவர். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் நம்பிக்கைக்குரியவராக இருப்பீர்கள். சந்திராஷ்டமம், 17, 18, 19 ஆகிய தேதிகளில் வருவதால் புதிய முயற்சி தவிர்க்கவும்.

விருச்சிகம்

பொது:
எதிலும் வெற்றியாகும் காலம் இது. சிலருக்கு அரசாங்கத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். பல நல்ல வாய்ப்பு தேடிவரும். தொழில் அதிபர்கள் மூலதனத்தை அதிகப்படுத்தி தொழில் வளர்ச்சி செய்து கொள்வது நல்லது.
பெண்களுக்கு:
பெண்கள், குடும்ப பெருமை பாதுகாப்பதில் அக்கறை கொள்வர். செலவு விவரங்களை கவனமுடன் பின்பற்ற வேண்டும்.
வேலை பார்ப்பவர்க்கு:
வியாபாரிகளுக்கு கடன்சுமை குறையும். கலைஞர்கள் எதிர்பார்த்த காரியம் வெற்றியாகும். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் போற்றும்படியான வாழ்வும் பதவியுடன் வலம்வருவீர்கள். 19, 20, 21 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம்,வருவதால் பயணம், ஜாமீன் தவிர்க்கவும்.

தனுசு

பொது:
குடும்பத்தில் மகிழ்ச்சியும் தனலாபம், பொன், பொருள் சேர்க்கையும் உண்டாகும். தேவையற்ற விஷயங்களில் ஈடுபட வேண்டாம். பிரயாணம் தவிர்க்கவும். படிப்படியான முன்னேற்றம் உண்டு. தொழில் அதிபர்களின் நெருக்கடிக்கு நல்ல தீர்வு கிட்டும்.
பெண்களுக்கு:
குடும்ப பெண்கள், கணவர் வழி சார்ந்த உறவினர்களை நன்கு உபசரிப்பர். உங்கள் நடை, உடை, செயலில் பதிய வசீகரம் உருவாகும். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நிறைவேறும். பூர்வ சொத்தில் வருமானம் கூடும். உடல்நல ஆரோக்கியம் சீராகும்.
வேலை பார்ப்பவர்க்கு
வியாபாரிகளின் கடன்சுமை குறையும். கலைஞர்களின் செயல் வெற்றியாகும். அரசு அதிகாரிகள் உயர்நிலையில் உள்ளோரிடம் அனுசரித்து நடக்கவும்.

மகரம்

பொது :
உணவு கட்டுப்பாடு மற்றும் பேச்சில் கனிவுடன் இருப்பது நல்லது. தாய்க்கு கட்டி அல்லது சிறு அறுவை சிகிச்சை இருக்கும். 6ல் இருந்து குரு விரய ஸ்தானத்தை பார்ப்பதால் விரயம் அதிகரிக்கும். நல்லோர்களின் நட்பை இழப்பீர்கள்.
பெண்களுக்கு:
பெண்கள், குடும்ப பணவசதிக்கேற்ப வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். குடும்பத்திற்கான பணச்செலவில் தாராள குணம் பின்பற்றுவீர்கள்.
வேலை பார்ப்பவர்க்கு
முன்கோபம் தவிர்க்கவும். அரசு அதிகாரிகளின் நெருக்கடிக்கு தீர்வு கிட்டும். வியாபாரிகளின் சிறுசிறு தேவை பூர்த்தியாகும். கலைஞர்களின் கவலை தீரும்.

கும்பம்

பொது
எடுத்த காரியமும் பல தடைகளை கடந்து வெற்றியாகும். பயன்படுத்திக் கொள்ளுங்கள். தந்தையின் உத்யோகம், தொழில் சிறப்படையும். ஆடம்பர பொருள் சேரும்.
பெண்களுக்கு:
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்கள், குடும்ப நலன் காக்க, தியாக மனதுடன் நடந்து கொள்வர். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு வகை தவிர்ப்பது நல்லது.
வேலை பார்ப்பவர்க்கு
லாபம் பெற்று தொழில் விருத்தி காண்பர். வியாபாரிகள் லாபம் அடைவர். கலைஞர்களின் கனவு நினைவாகும். அரசு அதிகாரிகளுக்கு வாய்ப்புகள் தேடி வரும்.

மீனம்

பொது:
தொடர் பிரயாணம், வீண் விரயம் அதிகரிக்கும். எதிலும் எச்சரிக்கை தேவை. மருத்துவச் செலவு வரலாம். உணவுக் கட்டுப்பாடு தேவை. 10ல் பெண்கள் வழி மனக்கவலை வரும்.பூர்வீக சொத்து கை வந்து சேரும்.
பெண்களுக்கு:
பெண்கள், தங்கநகை இரவல் கொடுக்க, வாங்க கூடாது. உறவினர்களிடம் பழகுவதில், இதமான அணுகுமுறை பின்பற்ற வேண்டும்.
வேலை பார்ப்பவர்க்கு:
அரசு அதிகாரிகள் முறையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். வியாபாரிகள் கூடுதல் கடன் படுவீர்கள். மொத்த வியாபாரம் வளம் பெறும். கலைஞர்கள் சிறப்படைவர்.


More News Click Here.............. 













No comments: