தேசிய உரிமை இயக்கம் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா
தேசிய உரிமை இயக்கத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவானது உடலுறுப்பு தான நிகழ்ச்சியாக ஆரத்தி மாத இதழ் அலுவலகத்தில் நடைபெற்றது.
விழாவில் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு தேசிய உரிமை இயக்கத்தின் நிறுவன தலைவர் திரு. மூ.மோகன்ராஜ் அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக ஆரத்தி மாத இதழின் ஆசிரியர் திரு. ஆ.இராஜரத்தினம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அதன் பின்பு நிர்வாகிகளும், உறுப்பினர்களும் உடலுறுப்பு தானத்திற்க்கு பூர்த்தி செய்த படிவத்தை தேசிய உரிமை இயக்கத்தின் நிறுவன தலைவர் தலைமையில் ஆரத்தி இதழின் ஆசிரியரிடம் கொடுத்து பதிவு செய்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆரத்தி மாத இதழின் சார்பில் அவர்களின் சேவையை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
மாநில இளைஞரணி செயலாளர் திரு. சுகனேஸ்வரன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் திரு. கிருபானந்த், சேலம் மாவட்ட செயலாளர் திரு. சிலம்பரசன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
No comments:
Post a Comment