'ஐ' மட்டும் வரட்டும் அப்புறம் பாருங்கள்: பவர் ஸ்டார் சீனிவாசன்.
சென்னை: ஷங்கரின் 'ஐ' படம் ரிலீஸானால் தனது மார்க்கெட் எகிறிவிடும் என்று பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்து வருகிறாராம்.
லத்திகா படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானவர் பவர்ஸ்டார் சீனிவாசன். அந்த படத்தை அவர் எப்படி ஓட்டினார் என்பவது அனைவருக்கும் தெரியும்.
இந்நிலையில் தான் சந்தானம் அவரை தனது கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடிக்க வைத்தார்.
கலாய்த்த சந்தானம்...
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சந்தானம் பவரை கண்டமேனிக்கு நக்கல் அடித்தார். ஆனால் பவரின் நல்ல நேரம் அதுவே அவருக்கு சாதகமாகிவிட்டது. இதயைடுத்து அவருக்கு கோடம்பாக்கத்தில் படுகிராக்கியாகிவிட்டது.
மோசடி வழக்குகள்...
ஷங்கரின் 'ஐ'...
இயக்குனர் ஷங்கரின் 'ஐ' படத்தில் பவர் நடித்துள்ளார். தான் ரோபோவாக நடித்துள்ள இந்த படத்தை தான் அவர் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் ரிலீஸானால் தனது மார்க்கெட் எகிறிவிடும் என்று திரை உலகினரிடம் தெரிவித்து வருகிறார்.
No comments:
Post a Comment