200 அடி பள்ளத்தில் பாய்ந்து டிப்பர் விபத்து
அட்டனிலிருந்து கம்பளை வரை சென்ற டிப்பர் லொறி ஒன்று கொழும்பு அட்டன் பிரதான வீதியில் செனன் தோட்டப்பகுதிக்கு அண்மித்த பகுதியில் இன்று காலை 5 மணியளவில் 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பயணித்த சாரதியும் உதவியாளரும் படுகாயங்களுடன் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment