Monday, December 30, 2013

'லாஸ்ட் மினிட்ல' மாறும், அரங்கேறும், வரும்... ஞானதேசிகன் திகில் பேச்சு! - www.tnfinds.com - Best Site In The World


'லாஸ்ட் மினிட்ல' மாறும், அரங்கேறும், வரும்... ஞானதேசிகன் திகில் பேச்சு!


சென்னை: மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு பிரியாணி விருந்து படைத்துள்ளது காங்கிரஸ். இந்த விழாவில் கலந்து கொண்டு பிரியாணி வழங்கிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், கடைசி நேரத்தில் காங்கிரஸ் கூட்டணியில் பல கட்சிகள் இணையும் என்று பொடி வைத்துப் பேசினார். சென்னை தி.நகரில் ஜி.கே.வாசன் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி 200 பெண்களுக்கு இலவச சேலைகளும், பொதுமக்களுக்குப் பிரியாணி விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.



பிரியாணியை தனது கையால் வழங்கினார் ஞானதேசிகன். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இப்போதைக்கு எதையும் உறுதியாக கூறமுடியாது. ஆனால் தேர்தல் நெருங்கும் போது காட்சிகள் மாறும். பல நாடகங்கள் அரங்கேறும். அப்போது கூட்டணிகளில் எதிர்பாராத திருப்பங்கள் வரும். காங்கிரஸ் அணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்பு உள்ளது என்றார். மாறும், அரங்கேறும், வரும்.. என்று ஞானதேசிகன் பேசுவது அப்படியே திகில் பட வசனம் போலவே இருக்கிறதே... கடைசி நேரத்தில் காங்கிரஸ் என்ன குண்டைப் போடப் போகிறதோ... 


More Hot News Click Here...



No comments: