Monday, December 23, 2013

கால்பந்து போட்டியை ரசிக்க விடாமல் அழுத 5 மாத குழந்தை... அடித்துக் கொன்ற கொடூர ரசிகர் - www.tnfinds.com - Best site in the world....


கால்பந்து போட்டியை ரசிக்க விடாமல் அழுத 5 மாத குழந்தை... அடித்துக் கொன்ற கொடூர ரசிகர்

கால்பந்து போட்டியை ரசிக்க விடாமல் தொடர்ந்து அழுது கொண்டே இருந்த தோழியின் குழந்தையை அடித்துக் கொலை செய்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த ரசிகர் ஒருவர். அமெரிக்காவின் ஒக்லஹோமாவை சேர்ந்த 22 வயது இளைஞர் டிரிவியான்ஸ் மார்கஸ் வால்கர். 

தீவிர கால்பந்து ரசிகரான இவர், கடந்த வாரம் தனது தோழியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, தான் வெளியே கிளம்புவதாகவும், தான் திரும்பி வரும் வரை தனது 5 மாத குழந்தையை கவனித்துகொள்ளும்படியும் மார்கஸிடம் கோரியுள்ளார் அவரது தோழி. மார்கஸும் சம்மதம் தெரிவித்து விட்டாராம். தோழி வெளியேறியதும், மார்கஸ் அங்கிருந்த டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்பான கால்பந்து போட்டியை பார்த்து ரசிக்க ஆரம்பித்துள்ளார். 

அப்போது தோழியின் 5 மாத ஆண் குழந்தை அழ ஆரம்பித்துள்ளது. மார்கஸ் எவ்வளவோ சமாதானம் செய்தும் குழந்தை அழுகையை நிறுத்தவில்லையாம். இது கால்பந்து போட்டியை ரசித்துக் கொண்டிருந்த மார்கஸுக்கு தொந்தரவாக இருந்துள்ளது. இதனால் குழந்தையை அடித்து துன்புறுத்திய மார்கஸ், 2 அடி உயரத்திலிருந்து குழந்தையை கீழே வீசியுள்ளார்.

 இதனால் குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டு, காதில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. இதைக் கண்டு பயந்து போன மார்கஸ் உடனடியாக மயங்கிய நிலையில் இருந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை பரிதாபமாக பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மார்கஸைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.



No comments: