காதலில் தொலைந்தாரா அஞ்சலி…?
சமீபத்தில் காணாமல் போய் மூன்று மொழி சினிமாவை கலங்கடித்த அஞ்சலி குறித்து மீண்டும் காணாமல் போன கான்ட்ரவர்ஸி. சென்றமுறை மோதல் என்றால் இந்தமுறை, காதல்.
சித்தி மற்றும் சித்தப்பாவுடனான மோதல் காரணமாக திடீரென்று காணாமல் போனார் அஞ்சலி. அதற்குப் பிறகு நடந்த அக்கப்போர் அனைவரும் அறிந்ததே. இனி எனக்கு எல்லாமே சினிமாதான் என்று கூறியவர் புதிய படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். தமிழில் நடிக்க அழைத்த போதெல்லாம் அஞ்சலியிடமிருந்து வந்த பதில், தெலுங்கில் நான் பிஸி. ஆனால் தெலுங்கிலும் புதிய படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை அஞ்சலி. லாரன்சின் முனி 3 – கங்காவில் மட்டும் சின்ன வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார்.
கன்னடத்தில் எங்கேயும் எப்போதும் படத்தை ரீமேக் செய்கின்றனர். தமிழில் நடித்த அஞ்சலியே கன்னடத்திலும் நடித்தால் நல்லது என்று அணுகிய போது, முடியாது என மறுப்பு தெரிவித்ததாக கூறுகிறார்கள். இந்நிலையில் தயாரிப்பு நிர்வாகியை திருமணம் செய்து அமெரிக்காவில் அஞ்சலி செட்டில் ஆனதாக இரண்டு நாட்களாக வதந்தி. அஞ்சலியின் போனும் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதால் உண்மை நிலவரம் யாருக்கும் தெரியவில்லை.
No comments:
Post a Comment