Saturday, December 28, 2013

2013ம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளில் 53% மட்டுமே வேலைக்கு தகுதியானவர்கள்!!! ரிப்போர்ட்..- www.tnfinds.com - Best site in the world..

2013ம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளில் 53% மட்டுமே வேலைக்கு தகுதியானவர்கள்!!! ரிப்போர்ட்..

டெல்லி: 2013 ஆண்டில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளில் ஏறக்குறைய பாதி பேர் எந்த வேலையை செய்யவும் தகுதியற்றவர்களாக இருப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது, இந்தியாவின் கல்வி முறைமாணவர்களுக்கு எந்த வித திறன்களையும் அளிப்பதில்லை என கருத்து நிலவுகிறது. நகைச்சுவை நடிகர் கூறுவது போல "என்னத்த படிச்சு... என்னத்த கிழிக்கபோராங்களோ" என்பதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது இந்த ஆய்வு அறிக்கை.
 
 அஸ்பைரிங் மைன்ட்ஸ் (Aspiring Minds) என்ற வேலைத்திறன் தீர்வு நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வில் 2013 ஆம் ஆண்டில் தேர்வுற்ற பட்டதாரிகளில் ஏறக்குறைய 47 சதவிகிதம் பேர் ஆங்கில மொழி அறிவு மற்றும் அறிவாற்றல் திறன்கள் உள்ளிட்ட திறமைகளின் அடிப்படையில் எந்த வேலையும் செய்யத் திறனற்றவர்களாக இருப்பது ஒரு அதிர்ச்சிக்குரிய தகவலாக வெளிவந்துள்ளது.

தகுதி பெற்றவர்கள்.


ஆய்வில் பங்கேற்றவர்களில் 2.59 சதவிகிதம் பேர் கணக்குப் பதிவியல் போன்ற செயலாற்றுத் துறைகளிலும், 15.88 சதவிகிதம் பேர் விற்பனை தொடர்பான வேலைகளிலும் மற்றும் 21.37 சதவிகிதம் பேர் பீபிஒ எனப்படும் வர்த்தக நடைமுறைகள் வெளிப்பெரும் துறைகளுக்கும் பொருத்தமானவர்களாக இருப்பதாகவும் அந்த ஆயவரிக்கை தெரிவித்துள்ளது.

இதிலும் பெண்கள் முதல் இடம்!!!


அதிகமாக பெண்கள் மூன்று வருட பட்டப்படிப்பை மேற்கொள்வதாகவும், வேலைக்கு பொருத்தமானவர்கள் எனும்போது, ஆண்களுக்கு இணையாகவோ அல்லது சற்று அதிகமாகவோ பொருந்துவதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
 

குறைப்பாடுகள்.


மூன்று வருட பட்டப் படிப்புகளில் 100 பெண்களுக்கும் சராசரியாக 109 ஆண்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. வேலை பெறுவதில் குறைந்த ஆங்கில மொழி அறிவு, கணினித் திறன் குறைபாடு மற்றும் அறிந்து கொள்ளும் திறன் ஆகியவை பெரும் தடைகளாக இருக்கிறது.

சிறு நகரங்களின் நிலை!!


ஆங்கில மொழி அறிவு மற்றும் கணினித் திறன் குறைபாடுகள் சிறிய நகரங்களில் பெரும்பாலும் வேலை வாய்ப்புகளை குறைக்கிறது. மேலும் சிறிய நகரங்களில் வசிக்கும் அல்லது படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் இந்த கணினி மற்றும் ஆங்கிலத் திறன் குறைபாடுடன் காணப்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.

 

தகுதியான மாணவர்கள் மிகவும் குறைவு.

 


 


 
 

 




 
 

 

 
 

 

 


No comments: