உலகின் முதல் செயற்கை இதயம்.. 'வாழ்நாள் கியாரண்டி'யை 5 வருடம் நீட்டிக்குமாம்
லண்டன்: பிரான்சில் இதய பாதிப்பில் பாதிக்கப்பட்ட நபருக்கு முதன்முறையாக செயற்கை மனித இதயம் பொருத்தி சாதனை படைத்துள்ளனர் மருத்துவர்கள். இது 5வருட ஆயுட்காலத்தை நீடிக்குமாம்.
பிரான்சு மருத்துவர்கள் லித்தியம் அயான் பேட்டரிகள் மூலம் இயங்கும் செயற்கையான மனித இதயத்தை உருவாக்கினார்கள். உயிருள்ள உறுப்பை போன்று இயங்கும் இந்த செயற்கை இருதயம் 5 வருடங்கள் வரை ஒருவரின் ஆயுளை நீட்டிக்க செய்யும் என்று கூறப்படுகிறது.
இதை உடலுக்கு வெளியில் பொருத்தியும் இயங்கச்செய்ய முடியும் என்றும் தெரிவித்தனர். இந்த செயற்கை இதயத்தை முதல் முறையாக தலைநகர் பாரிசில் உள்ள ஒரு மருத்துவமனையில் 75 வயது முதியவருக்கு பொருத்தி வெற்றிகரமாக இயங்க செய்தனர்.
ஒரு கிலோ கிராம் எடைக்கு குறைவான ஆரோக்கியமான இந்த செயற்கை மனித இருதயம் முன்பு உருவாக்கப்பட்ட தற்காலிகமாக செயற்கை இருதயத்தை போல் இல்லாமல் 5 ஆண்டுகாலம் நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment