களுவாஞ்சிகுடி வீதி விபத்தில் ஒருவர் பலி
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திவந்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வீதித் திருத்த பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது வேகமாக வந்தமோட்டார் சைக்கிள் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளடன் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் மற்றும் வீதி திருத்த பணியில் ஈடுபட்டிருந்த மூவர் உட்பட நான்கு படுகாயமடைந்துள்ளனர்.
இதன்போது படுகாயமடைந்தவர்கள் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதேவேளை உயிரிழந்தவரின் சடலமும் கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
No comments:
Post a Comment