சென்னையில் பிறந்தது ஆம் ஆத்மி.. தலா 10 ரூபாய் கொடுத்து 700 பேர் சேர்ந்தனர்!
சென்னை: ஆம் ஆத்மி கட்சியின் சென்னை கிளை 700 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி நாடு முழுவதும் தற்போது கிளை பரப்ப ஆரம்பித்துள்ளது. அதன் தலைவர் கேஜ்ரிவால், டெல்லியிலேயே உலா வந்தாலும் கூட அவரது ஆதரவாளர்கள் தத்தமது மாநிலங்களில் கிளைகளைப் பரப்ப ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் தலைக்கு 10 ரூபாய் கட்டணம் கொடுத்து 700 பேர் அக்கட்சியில் இணைந்துள்ளனர் சென்னையில். மேற்கு மாம்பலத்தில் வைத்து இக்கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நடந்தது. பெருமளவிலான பெண்களும் ஆர்வத்தோடு மெம்பராவதற்காக வந்திருந்தனர்.
இதுகுறித்து ஆம்ஆத்மி கட்சியின் இணை அமைப்பாளர் லெனின், பொருளாளர் ஆனந்த் ஆகியோர் கூறுகையில், தமிழகத்தில் 16 மாவட்டங்களில் ஆம்ஆத்மி கட்சி செயல்படுகிறது. சென்னை, கோவை, மதுரையில் உறுப்பினர் சேர்க்கை நடத்தியதுபோல் மற்ற மாவட்டங்களிலும் உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள்.
தமிழக மக்கள் அரசியலில் ஒரு மாற்று இயக்கத்தை எதிர்பார்க்கிறார்கள். அந்த மாற்று இயக்கம் ஆம்ஆத்மி கட்சிதான் என்று மக்கள் நம்புகிறார்கள் என்றனர்.
No comments:
Post a Comment