மகனை அணைத்தபடி 52 மாடியில் இருந்து குதித்த தந்தை
அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள மேன்ஹட்டன் நகரில் உள்ள 52 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ஒரு தந்தை தனது 3 வயது மகனுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
35 வயது மதிக்கத்தக்க நபர், தனது மகனை கட்டி பிடித்தபடி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்தார். இதைப் பார்த்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதில், சம்பவ இடத்திலேயே தந்தை உயிரிழக்க, சிறுவன் படுகாயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தான். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
No comments:
Post a Comment