Friday, December 13, 2013

ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் மோதவிருந்த ரயில்கள்! - www.tnfinds.com - Best site in the world...

ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் மோதவிருந்த ரயில்கள்!

கொல்கத்தாவில் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் வந்ததால் ஏற்படவிருந்த பெரும் விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது.
கொல்கத்தாவின் சீல்டா ரயில் நிலையத்திலிருந்து நேற்று காலை 8.10 மணிக்கு புறப்பட்ட சீல்டா-லால்கோலா பயணிகள் ரயிலை ஓட்டிய ஓட்டுனர் வெளியில் செல்வதற்கான சிக்னல் விழுவதற்குள் பிரதான தண்டவாளத்திற்கு ரயிலை ஓட்டிசென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக போங்கான்-சீல்டா ரயில், அதே தண்டவாளத்தில் எதிரே வந்தது. இதனைக் கவனித்த சீல்டா-லால்கோலா ரயில் ஓட்டுனர், உடனடியாகச் ரயிலை நிறுத்தினார். இரு ரயில்களும் மெதுவாக வந்ததால் உடனடியாக ரயிலை நிறுத்த முடிந்தது.
அதனைத் தொடர்ந்து, சில்டா-லால்கோலா ரயிலை பின்னோக்கி செலுத்திய அந்த ஓட்டுனர், மீண்டும் ரயில் நின்றுகொண்டிருந்த அதே இடத்திற்கு செலுத்தினார்.
இரு ரயில்களும் பாதுகாப்பாக ரயில் நிலையத்திற்கு வந்த சேர்ந்தன.
எனினும், கவனக் குறைவாக ரயிலை இயக்கி விபத்தை ஏற்படுத்த முற்பட்டதாக சீல்டா-லால்கோலா ரயில் ஓட்டுனர், உதவி ஓட்டுனர் ஆகிய இருவரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More Hot News Click Here....

No comments: