ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் மோதவிருந்த ரயில்கள்!
கொல்கத்தாவில் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் வந்ததால் ஏற்படவிருந்த பெரும் விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது.
கொல்கத்தாவின் சீல்டா ரயில் நிலையத்திலிருந்து நேற்று காலை 8.10 மணிக்கு புறப்பட்ட சீல்டா-லால்கோலா பயணிகள் ரயிலை ஓட்டிய ஓட்டுனர் வெளியில் செல்வதற்கான சிக்னல் விழுவதற்குள் பிரதான தண்டவாளத்திற்கு ரயிலை ஓட்டிசென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக போங்கான்-சீல்டா ரயில், அதே தண்டவாளத்தில் எதிரே வந்தது. இதனைக் கவனித்த சீல்டா-லால்கோலா ரயில் ஓட்டுனர், உடனடியாகச் ரயிலை நிறுத்தினார். இரு ரயில்களும் மெதுவாக வந்ததால் உடனடியாக ரயிலை நிறுத்த முடிந்தது.
அதனைத் தொடர்ந்து, சில்டா-லால்கோலா ரயிலை பின்னோக்கி செலுத்திய அந்த ஓட்டுனர், மீண்டும் ரயில் நின்றுகொண்டிருந்த அதே இடத்திற்கு செலுத்தினார்.
இரு ரயில்களும் பாதுகாப்பாக ரயில் நிலையத்திற்கு வந்த சேர்ந்தன.
எனினும், கவனக் குறைவாக ரயிலை இயக்கி விபத்தை ஏற்படுத்த முற்பட்டதாக சீல்டா-லால்கோலா ரயில் ஓட்டுனர், உதவி ஓட்டுனர் ஆகிய இருவரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எனினும், கவனக் குறைவாக ரயிலை இயக்கி விபத்தை ஏற்படுத்த முற்பட்டதாக சீல்டா-லால்கோலா ரயில் ஓட்டுனர், உதவி ஓட்டுனர் ஆகிய இருவரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment