ஆந்திர மாநில சிவன் கோயிலில் அஞ்சலி 'தரிசனம்'!
அஞ்சலி இந்த நாட்டில்தான் இருக்கிறாரா, வெளிநாட்டில் போய் ரகசியத் திருமணம்
செய்து கொண்டாரா என சூடான விவாதமே நடந்து வரும் வேளையில், ஆந்திர மாநில
சிவன் கோயில் ஒன்றில் அஞ்சலி சாமி கும்பிட்ட தகவல் பரவியதால் ரசிகர்கள்
அங்கு திரண்டனர்.
சென்னையிலிருந்து வெளியேறி மாதக் கணக்கில் ஆந்திராவிலேயே தங்கியுள்ளார்
அஞ்சலி.
சென்னையிலிருந்த தன் புதிய வீட்டை சித்தி அபகரித்துக் கொண்டதால், அதை
மீட்க சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். வழக்கு நடந்து
கொண்டிருக்கிறது.
அவருக்கு எதிராக சித்தி பாரதிதேவியும், இயக்குநர் களஞ்சியமும் வெவ்வேறு
வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர்.
ஆனால் இவற்றில் எதிலும் அஞ்சலி ஆஜராகவில்லை. தமிழ்ப் படங்களிலும் நடிக்க
மறுத்துவிட்டார். தெலுங்கிலும் அவருக்குப் படமில்லை.
எனவே அஞ்சலி வெளிநாட்டில், ஒரு பெரும் புள்ளியுடன் செட்டிலாகிவிட்டார்
என்று கூறப்பட்டது.
ஆனால் அவர் ஆந்திராவில்தான் இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஸ்ரீ சைலத்தில் உள்ள மல்லிகார்ஜூனா சுவாமி
கோவிலில் அவர் நேற்று சாமி கும்பிட்டார். அங்கு சிவபெருமானுக்கு
ருத்ராபிஷேகமும், தாயார் பிரமராம்பிகாவிற்கு குங்கும அர்ச்சனையும் செய்து
வழிபட்டார். அஞ்சலியை காண ரசிகர்கள் முண்டியடித்தனர்.
பாதுகாவலர்கள்
தடுத்து நிறுத்தினார்கள்.
சித்தியிடம் ஏற்பட்ட மோதல் குறித்து அஞ்சலியிடம் கேட்டபோது, நான் சாமி
கும்பிட வந்தேன். இங்கு எதுவும் பேசவிரும்பவில்லை. நான் இங்குதான்
இருக்கிறேன். விரைவில் செய்தியாளர்களைச் சந்தித்து விவரமாகப் பேசுவேன்,
என்று கூறிவிட்டு காரில் ஏறிப் பறந்தார்.
No comments:
Post a Comment