Monday, December 30, 2013

நடராஜர் கோயில் தெற்குவாயிலை திறக்கக் கோரி பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் - www.tnfinds.com - Best Site In The World


நடராஜர் கோயில் தெற்குவாயிலை திறக்கக் கோரி பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்


சிதம்பரம்: 




சிதம்பம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நந்தனார் நுழைந்த தெற்குவாயிலை திறக்கக் கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர்

நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை திறக்க வேண்டும், கோயிலை அறநிலையத்துறை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்பது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கோரிக்கை. இக்கோரிக்கையை வலியுறுத்தி சிதம்பரம் காந்திசிலை அருகே தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் இன்று அக்கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடராஜர் கோயில் தெற்குவாயிலை முற்றுகையிடவும் அவர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். ஆனால் போலீசார் அவர்கள் அனைவரையும் வழிமறித்தனர். பின்னர் ஊர்வலமாக புறப்பட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 115 பேரையும் போலீசார் கைது செய்தனர். உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.

More Hot News Click Here...

No comments: