பாலிவுட்டில் ஸ்லோவாக செல்ல விரும்பும் தனுஷ்
சென்னை: பாலிவுட்டில் ஸ்லோவாக செல்ல விரும்புவதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் ராஞ்ஹனா படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
பாடியை காட்டி நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டும் நடிகர்களுக்கு மத்தியில் தனுஷ் நடிப்பை வெளிப்படுத்தினார்.
இதனால் அவரின் முதல் இந்தி படமே சூப்பர் ஹிட்டானது.
ரூ.100 கோடி.
தனுஷின் நடிப்பை பாலிவுட் கொண்டாடியது. இந்நிலையில் ராஞ்ஹனா படம் ரூ. 100 கோடி வசூல் செய்தது. தனுஷ்-சோனம் கபூர் ஜோடியை ரசிர்கள் ஏற்றுக் கொண்டனர்.
ஒரு படம்.
நான் பாலிவுட்டில் ஒரு சமயத்தில் ஒரு படத்தில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன். ஏனென்றால் இங்குள்ள கலாச்சாரம் மற்றும் ரசிகர்களின் விருப்பத்தை புரிந்து கொள்வது கடினமாக உள்ளது என்றார் தனுஷ்.
மெதுவாக.
ரசிகர்களின் விருப்பத்தை அனைவராலும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. அதனால் நான் என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக நடிக்க விரும்புகிறேன். எனவே மெதுவாக செல்லவே விரும்புகிறேன் என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.
பால்கியின் படம்.
ராஞ்ஹனாவை அடுத்து தனுஷ் ஆர். பால்கியின் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் நடிக்கிறார். படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
No comments:
Post a Comment