குழந்தை மீது கொதிக்கும் பாலை ஊற்றிய தாய் கைது
கேரளா கட்டப்பனை பிரதேசத்தில் ராஜேஷ் மற்றும் நீது தம்பதியினர் தனது 3 மாத குழந்தை மீது கொதிக்கும் பாலை ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையின் உடலில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
குழந்தைக்கு சிகிச்சை அளித்த வைத்தியர்களுக்கு குழந்தை துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தோன்றியதால் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
ராஜேஷ் இ நீது ஆகியோரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டு வந்ததாகவும் கோபமடைந்த நீது குழந்தை மீது கொதிக்கும் பாலை ஊற்றியதால் காயங்கள் ஏற்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
ராஜேஷ் இ நீது ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் குழந்தைக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment