எல்லை தாண்டி மீன்பிடிப்பு: தூத்துக்குடி அருகே 24 இலங்கை மீனவர்கள் கைது
தூத்துக்குடி: எல்லை தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை
மீனவர்கள் 24 பேர் தூத்துக்குடி அருகே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி கடற்பரப்பில் தென்பகுதியில் 18 கடல் மைல் தொலைவில் 4
படகுகளில் 24 இலங்கை மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இதுபற்றிய
தகவல் கடலோர காவல்படைக்குத் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடந்து 24 இலங்கை மீனவர்களையும் கடலோர காவல்படையினர் கைது
செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
No comments:
Post a Comment