தேசியக் கொடியுடன் ஏற்காட்டில் தேர்தல் பிரசாரம்- அதிமுக அமைச்சர் மீது திமுக புகார்
சென்னை: தேசியக் கொடியுடன் அரசு வாகனத்தில் ஏற்காடு இடைத்தேர்தல்
பிரசாரத்தை தமிழக அமைச்சர் வீரமணி மேற்கொண்டதாக தேர்தல் ஆணையத்திடம் திமுக
புகார் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதியில் வரும் டிசம்பர் 4ந் தேதி இடைத்தேர்தல்
நடைபெறுகிறது.
இங்கு தமிழக அமைச்சர் வீரமணி, தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில்
பிரச்சாரம் மேற்கொண்டார் என்பது திமுகவின் புகார். அதாவது தேசிய கொடியுடன்
அரசு வாகனத்தை ஏற்காடு தொகுதியில் பயன்படுத்தினார் அமைச்சர் வீரமணி. அதனால்
அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளையும் திமுக தமது புகார்
மனுவில் ஆதாரமாக சேர்த்துள்ளது.
No comments:
Post a Comment