பா.ராமச்சந்திர ஆதித்தன் உடலுக்கு அமைச்சர்கள், ஸ்டாலின், வைகோ, விஜயகாந்த் அஞ்சலி
சென்னை: மறைந்த மாலைமுரசு அதிபர் பா.ராமச்சந்திர ஆதித்தன் உடலுக்கு
அமைச்சர்கள், தலைவர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மாலைமுரசு அதிபர் பா.ராமச்சந்திர ஆதித்தன் இன்று காலமானார். அவருக்கு வயது
80. அவரது மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, பாமக
நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள்
இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பா.ராமச்சந்திர ஆதித்தன் உடலுக்கு தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம்,
நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் நேரில் மலர் வளையம் வைத்து அஞ்சலி
செலுத்தினர்.
திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள், பொருளாளர்
மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த்,
அவரது மைத்துனர் சுதீஷ், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், காங்கிரஸ்
தலைவர்கள் குமரி அனந்தன், வசந்தகுமார், தி.க. தலைவர் கி.வீரமணி, மத்திய
அமைச்சர் ஜி.கே.வாசன், பாலபிரஜாபதி அடிகளார், முன்னாள் சென்னை மேயர்
மா.சுப்ரமணியம் உள்ளி்டடோரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
No comments:
Post a Comment