இன்று சென்னை பல்கலைக்கழகத்தில் மோடி உரையாற்றுவதை எதிர்த்து வழக்கு
சென்னை: சென்னையில் இன்று மாலை நானி பல்கிவாலா நினைவு உரையாற்ற வரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அங்கு உரையாற்ற தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் கட்சி வழக்குத் தொடர்ந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால பெஞ்ச் முன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் மதசார்பின்மையைக் கட்டிக் காக்க மோடியின் உரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் கட்சியின் தலைவர் தங்கத் தமிழ்வேலன் தனது மனுவில் கூறியுள்ளார். இந்த மனு இன்று காலை விசாரணைக்கு வருகிறது. முன்னதாக அவர் சென்னை மாநகர கமிஷ்னரிடமும் ஒரு மனு அளித்தார். இந்த நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் நடப்பது முறையற்றது. குஜராத் மதக்கலவரத்தை மனதில் வைத்துப் பார்க்கும்போது அங்கு மோடி உரையாற்றுவது பல்கலைக்கழகத்தின் மதசார்பற்ற நிலைக்கே அபாயத்தை ஏற்படுத்திவிடும். கிரிமினல் வழக்கை சந்திக்கும் ஒரு நபர் ஒரு தனியார் அறக்கட்டளைக்காக பல்கலைக்கழகத்துக்குள் வந்து உரையாற்றுவது ஏற்கத்தக்கதல்ல. எனவே, இந்த அனுமதியை ரத்து செய்யுமாறு பல்கலைக்கழக துணை வேந்தருக்கு உத்தரவிட வேண்டும். இதே பல்கலைக்கழகத்தில் அமெரிக்க இஸ்லாமிய அறிஞரான அமினா வதூத் உரையாற்றுவதற்கு இதே பல்கலைக்கழகத்துக்கு தமிழக போலீசார் அறிவுறுத்தி, இந்த உரையை நிறுத்தியதை நினைவுகூர்கிறேன் என்று கூறியுள்ளார் தங்கத் தமிழ்வேலன்.
No comments:
Post a Comment