Wednesday, October 16, 2013

ஜெய்ப்பூர் ஒருநாள் போட்டியில் ஆஸி. அணி புதிய உலக சாதனை - www.tnfinds.com - Best Site In The World

ஜெய்ப்பூர் ஒருநாள் போட்டியில் ஆஸி. அணி புதிய உலக சாதனை

ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி புதிய உலக சாதனை படைத்துள்ளது.
சர்வதேச ஒருநாள் போட்டியில், களமிறங்கிய முதல் 5 வீரர்கள் அரைசதம் எடுத்ததே அந்த உலக சாதனை ஆகும்.
இப்போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்தது.
துவக்க ஆட்டக்காரர்களான ஃபின்ச் 50 ரன்களும், ஹுயூயஸ் 83 ரன்களும் எடுத்தனர்; அவர்களைத் தொடர்ந்து வாட்ஸன் 59 ரன்களையும், கேப்டன் பெய்லி ஆட்டமிழக்காமல் 92 ரன்களும், மேக்ஸ்வல் 53 ரன்களும் எடுத்தனர்.
ஒரு நாள் ஆட்டத்தில் முதல் 5 பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்தது, கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை.
அதேபோல், ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்ஸ்சில் 5 பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்தது இது இரண்டாவது தடவை.
முன்னதாக, 2008-ல் நடந்த ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணியின் இரண்டாவது பேட்ஸ்மேன் தொடங்கி, 6-வது பேட்ஸ்மேன் வரையில் 5 பேர் அரைசதம் அடித்து சாதனை புரிந்தது நினைவுகூரத்தக்கது.

More News Click Here..... 

 

No comments: