Sunday, October 20, 2013

கிராமத்து பெண்களை ஏமாற்றி டெல்லி சிவப்பு விளக்கு பகுதியில் விற்கும் அந்த 'ராஜு' யார்? - www.tnfinds.com - Best Site In the World

கிராமத்து பெண்களை ஏமாற்றி டெல்லி சிவப்பு விளக்கு பகுதியில் விற்கும் அந்த 'ராஜு' யார்?

டெல்லி: பல்வேறு மாநிலங்களில் இருந்து பெண்களை டெல்லிக்கு அழைத்து வந்து அவர்களை பாலியல் தொழிலில் தள்ளிவிடும் ராஜு என்ற நபர் யார் என்று தெரியாமல் போலீசார் குழம்பி வருகின்றனர். டெல்லியில் உள்ள பல்வேறு இடங்களில் பாலியல் தொழில் நடக்கும் இடங்களில் இருந்து போலீசார் பல பெண்கள் மற்றும் பதின்வயது பெண்களை மீட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் கூறுகையில், தங்களுக்கு டெல்லியில் வேலை வாங்கித் தருவதாக, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ராஜு என்ற நபர் தான் தங்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக ஜிபி ரோட்டில் இருந்து மீட்கப்பட்ட பெண்களில் ஏராளமானோர் தங்களை இந்த தொழிலில் தள்ளிவிட்டது ராஜு தான் என்று தெரிவித்துள்ளனர். ஜிபி ரோட்டில் மட்டும் 92 இடங்களில் பாலியல் தொழில் நடந்து வருகிறது. அங்கு 3,500 பேர் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்கம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநில பெண்களை டெல்லியில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது இந்த ராஜு தான். ராஜு என்பது ஒரு ஆளா, அல்லது பலர் அந்த பெயரை பயன்படுத்துகிறார்களா என்று போலீசாருக்கே புரியவில்லை. இதுவரை ராஜுவின் புகைப்படம் சிக்கவே இல்லை. மீட்கப்பட்ட பெண்களுக்கும் அவனை சரியாக அடையாளம் கூறத் தெரியவில்லை. அவன் பெண்களை டெல்லிக்கு அழைத்து வந்து அவர்களை பாலியல் தொழில் நடத்துவோரிடம் ரூ.20,000 முதல் ரூ.5 லட்சம் வரை விற்றுவிடுகிறானாம். மைனர் பெண்கள் அதுவும் நேபாள பெண்களை அதிக அளவில் இந்த தொழிலில் ஈடுபடுத்துகிறார்களாம். காரணம் அவர்களின் சிவந்த மேனி. டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு பாழும் தொழிலில் தள்ளிவிடப்படும் பெண்கள் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவும், இந்தி தெரியாதவர்களாகவும் உள்ளனர். போலீசார் கடந்த 2 ஆண்டுகளாக இந்த ராஜுவை தேடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments: