உற்பத்தி குறைவு... தொடர் விபத்து.. வேலைக்கு ஆள் இல்லை.. பட்டாசு விலை விர்...
கோவில்பட்டி: பட்டாசு ஆலைகளில் பணிபுரிய தேவையான தொழிலாளர் இல்லாமை, தொடர் விபத்து உள்ளிட்ட காரணங்கள் காரணமாக பட்டாசு விலை கடந்த ஆண்டை விட கூடுதலாக இரண்டு மடங்கு ஏறியுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பட்டாசு விலை அதிகம் இருக்கும் என்பதால் மக்கள் இப்போதே வெங்காய வெடி தங்கள் மீது வந்து விழுந்தது போல டென்ஷனாகி காணப்படுகின்றனர். மேலும் உற்பத்திக் குறைவு காரணமாகவும் பட்டாசு விலை இந்த முறை உயர்ந்திருக்கிறதாம்.
பட்டாசு இல்லாமல் எப்படி தீபாவளி... தீபாவளி பண்டிகை என்றாலே சிறுவர்களுக்கு பட்டாசு இல்லாமல் கொண்டாட முடியாது. தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன.
தொடர் விபத்துக்களால் முடக்கம் சமீபத்தில் பட்டாசு தொழிற்சாலைகளில் தொடர் விபத்து நடந்ததால் அதிக அளவில் வேலைக்கு செல்ல தொழிலாளர் முன் வரவில்லை. இருக்கும் தொழிலாளர்களும் அச்சத்துடனே வேலை பார்த்து வந்தனர்.
No comments:
Post a Comment