Thursday, October 17, 2013

ஸ்கூல் பிடிக்கலை... மாத்த மாட்டேனுட்டாங்க: காஞ்சி பள்ளியில் தீக்குளித்த மாணவி வாக்குமூலம் - www.tnfinds.com - Best Site In The World


ஸ்கூல் பிடிக்கலை... மாத்த மாட்டேனுட்டாங்க: காஞ்சி பள்ளியில் தீக்குளித்த மாணவி வாக்குமூலம்

காஞ்சீபுரம்: பள்ளி வளாகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சிறுமி, புதிய பள்ளி பிடிக்காததால் தற்கொலைக்கு முயன்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். காஞ்சீபுரம் அருகே தூசியை அடுத்த அப்துல்லாபுரம் தோப்பு தெருவில் வசித்து வரும் கன்னியப்பனின் 11 வயது மகளான சினேகா பெரிய காஞ்சீபுரம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 15-ந்தேதி காலை பள்ளிக்கூடம் சென்ற சினேகா, பள்ளியின் கழிவறையில் வைத்து தீக்குளித்தார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சினேகாவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவளது உடலில் 40 சதவீத தீக்காயம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உடல்நிலைத் தேறி வரும் மாணவியை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் வைத்தே சந்தித்தார் சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி. அப்போது அளித்த வாக்குமூலத்தில் மாணவி கூறி தெரிவித்திருப்பதாவது, ‘எனது பெற்றோர் என்னை, காஞ்சீபுரம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு சேர்த்தனர். எனக்கு பள்ளிக்கூடம் பிடிக்கவில்லை என்று அவர்களிடம் கூறினேன். ஆனால் எனது பெற்றோர், உன்னை வேறு பள்ளிக்கூடத்தில் சேர்க்க முடியாது. நீ படித்தால் படி, இல்லாவிட்டால் இரு என்று கண்டிப்புடன் கூறி விட்டனர். எனவே பள்ளிக்கூடம் பிடிக்காமல் நான், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றேன்' என்றார்.

More Hot News Click Here.....



No comments: