Wednesday, October 16, 2013

கருப்புப் பண முதலைகள் - அம்பலப்படுத்த ஸ்விஸ் வங்கிகள் ஒப்புதல் - www.tnfinds.com - Best Site in the World

கருப்புப் பண முதலைகள் - அம்பலப்படுத்த ஸ்விஸ் வங்கிகள் ஒப்புதல்


ஜெனீவா: கருப்புப் பணத்தை போட்டு வைத்திருப்பது யார் என்ற விவரத்தை இதுவரை வெளியிட மறுத்து வந்த சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகள் தற்போது அந்த ரகசியத்தை வெளியிடத் தயாராகி விட்டன. இது இந்தியாவுக்கு பெரும் சாதகமாக அமையும் என்று கருதப்படுகிறது. காரணம், இந்தியாவைச் சேர்ந்த பெரும் பெரும் பணக்கார திமிங்கலங்கள்தான் ஸ்விஸ் வங்கிகளில் பெருமளவில் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளனர் என்பதால் ஸ்விஸ் வங்கிகளின் இந்த முடிவு இந்தியாவில் உள்ள கருப்புப் பண முதலைகளுக்குப் பெரும் பீதியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்விஸ் தேசிய வங்கி வெளியிட்ட சமீபத்திய கணக்குப்படி, இந்தியர்கள் அங்குள்ள வங்கிகளில் குவித்துள்ள கருப்புப் பணம் மட்டும் ரூ. 9000 கோடியாகும். இது 2012ம் ஆண்டு கணக்காகும். ஒட்டுமொத்தமாக ஸ்விஸ் வங்கிகளில் ரூ. 90 லட்சம் கோடி பணத்தைக் குவித்து வைத்துள்ளனர் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பெரும் பணக்காரர்கள். ஸ்விஸ் வங்கிகளில் பணத்தைப் போட்டு வைத்திருப்போர் பெயர் விவரங்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டு வருகின்றன. அதை எந்த நாட்டுக்கும் தெரியப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகள் சட்டம் தெரிவிக்கிறது. இதனால்தான் ஸ்விஸ் வங்கிகளில் கருப்புப் பணத்தைக் குவித்து வைத்துள்ள இந்தியர்களின் பெயர்களைப் பெற முடியாமல் தவித்தது மத்திய அரசு. ஆனால் தற்போது இந்த ரகசியங்களை அம்பலப்படுத்த சுவிட்சர்லாந்து அரசு முடிவு செய்திருப்பதால் இந்தியாவுக்கு நிம்மதி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தம் ஒன்றிலும் சுவிட்சர்லாந்து அரசு கையெழுத்திட்டுள்ளது. இதில் 58 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இதில் இந்தியாவும் ஒரு நாடாகும். இந்த ஒப்பந்தத்தின்படி தங்களது நாட்டைச் சேர்ந்த யாரேனும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதாக அந்த நாடு சந்தேகிக்குமானால், அந்த நபர் ஸ்விஸ் வங்கிகளில் போட்டு வைத்திருக்கும் பண விவரம் குறித்த விவரத்தை ஸ்விஸ் வங்கிகளிடம் கேட்கலாம். அவர்கள் அந்த விவரத்தைத் தெரிவிக்க வேண்டும்.

No comments: