Tuesday, October 22, 2013

எனக்கு சம்பளம் முக்கியமே இல்லை, கதை தான் முக்கியம்: சிவகார்த்திகேயன் - www.tnfinds.com - Best Site In the World

எனக்கு சம்பளம் முக்கியமே இல்லை, கதை தான் முக்கியம்: சிவகார்த்திகேயன்

சென்னை: தனக்கு சம்பளம் முக்கியம் இல்லை என்றும் கதை தான் முக்கியம் என்றும் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். சின்னத்திரையில் இருந்து பெரியதிரைக்கு வந்து வெற்றி நாயகனாக இருப்பவர் சிவகார்த்திகேயன். அவரது படங்கள் ஓடிவிட்டதால் அவர் தனது சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்திவிட்டதாக பல நாட்களாக கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது. எனக்கு சம்பளம் முக்கியமே இல்லை, கதை தான் முக்கியம்: சிவகார்த்திகேயன் ஆனால் அவரோ இதை மறுத்து வருகிறார். இந்நிலையில் பெரிய நிறுவனம் ஒன்று அவரிடம் தங்கள் படத்தில் நடிக்க கேட்டதாகவும் அவர் சம்பள விஷயத்தில் கறாராக இருந்து வாய்ப்பை ஏற்க மறுத்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து சிவகார்த்திகேயன் கூறுகையில், குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து யாருமே என்னை அணுகவில்லை. அதற்குள் தவறான தகவல் பரப்பியுள்ளனர். சம்பளத்திற்காக நல்ல வாய்ப்புகளை இழக்க நான் தயாராக இல்லை. எனக்கு சம்பளம் முக்கியம் கிடையாது. கதை தான் மிகவும் முக்கியும் என்றார்.

No comments: