இலங்கை சிறையில் இருந்த 19 புதுக்கோட்டை மீனவர்கள் விடுவிப்பு
கொழும்பு: இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட புதுக்கோட்டை
மீனவர்கள் 19 பேர் விடுதலை செய்யப் பட்டுள்ளனர்.
இம்மாதம் 14- ஆம் தேதி, மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை
ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படையினர் பிடித்துச்
சென்றனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்
பிடித்த குற்றத்திற்காக அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டனர்.
இலங்கை சிறையில் இருந்த 19 புதுக்கோட்டை மீனவர்கள் விடுவிப்பு
இந்நிலையில், கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 19 பேரும்
ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள்
அனைவரையும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
No comments:
Post a Comment