Sunday, October 27, 2013

தேசிய உரிமை இயக்கத்தின் செயல்வீரர்கள் கூட்டம் - www.tnfinds.com - Best Site in the World

தேசிய உரிமை இயக்கத்தின் செயல்வீரர்கள் கூட்டம்

அக்டோபர் 27, சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், வாளதாசம்பட்டியில் தேசிய உரிமை இயக்கத்தின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தேசிய உரிமை இயக்கத்தின் நிறுவன தலைவர் திரு. மூ.மோகன்ராஜ் அவர்கள் தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார். கூட்டத்திற்க்கு மேட்டூர் நகர செயலாளர் திரு. பா.சிலம்பரசன் ஏற்பாடு செய்திருந்தார்.

அப்பகுதியின் நீண்ட நாள் பிரச்சனைகள் பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. திருநங்கைகள் வாழ்வில் பல இன்னல்களுக்கு உள்ளாவதால் அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற்ப்பட்டு தமிழக முதல்வருக்கு அனுப்பபட்டது.

புதிதாக இயக்கத்தில் இணைந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் கிழக்கு ஓலைப்பட்டி மற்றும் வாளதாசம்பட்டியை சேர்ந்த உறுப்பினர்களும் இளைஞர்களும் கலந்து கொண்டனர்.


More News Click Here...............

1 comment:

Anonymous said...

Very Nice