டெல்லி - 70 சட்டசபைத் தொகுதிகளுக்கும் தனித் தனி தேர்தல் அறிக்கை- கேஜ்ரிவால் அதிரடி
டெல்லி: அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, டெல்லி சட்டசபைத்
தேர்தலில் அங்குள்ள 70 தொகுதிகளுக்கும் தனித் தனியாக தேர்தல் அறிக்கையை
தயாரித்துள்ளது.
இந்திய அரசியல் வரலாற்றில் ஒவ்வொரு தொகுதிக்கும் தனித் தனியாக தேர்தல்
அறிக்கை வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.
டிசம்பர் 4ம் தேதி டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில்
டெல்லியில் உள்ள 70 சட்டசபைத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி
போட்டியிடுகிறது.
தேர்தலின்போது தாங்கள் என்னவெல்லாம் செய்யப் போகிறோம் என்பதை கட்சிகள்
தேர்தல் அறிக்கைகளாக மக்களிடம் விளக்கும். அதே போல ஆம் ஆத்மி கட்சியும்
தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளது. ஆனால் 70 தொகுதிகளுக்கும் தனித்
தனியாக. அதாவது மொத்தம் 70 தேர்தல் அறிக்கையை அது தயாரித்துள்ளது.
இதுகுறித்து அரவிந்த் கேஜ்ரிவால் கூறுகையில், மக்களின் பார்வையிலிருந்து
நாம் சிந்திக்க வேண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஒவ்வொரு
தொகுதியின் பிரச்சினையையும் தேர்தல் அறிக்கையில் விளக்கி அதற்குரிய
தீர்வையும் நாங்கள் சொல்லியுள்ளோம் என்றார்.
தேர்தலில் எத்தனை பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர் என்று செய்தியாளர்கள்
கேட்டபோது அதற்குப் பதிலளிக்க கேஜ்ரிவால் மறுத்து விட்டார்.
No comments:
Post a Comment