சச்சின் விளையாடும் கடைசி ஆட்டம்: ரசிகர்களுக்கு ஒரு 'கெட்ட' செய்தி
டெல்லி: சச்சின் டெண்டுல்கர் விளையாடும் கடைசி போட்டியைக் காண
ரசிகர்களுக்கு மிகக் குறைவான அளவே டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.
சச்சின் டெண்டுல்கர் 200வது டெஸ்ட் போட்டியோடு கிரிக்கெட்டில் இருந்து
ஓய்வு பெறுகிறார். அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடுகிறார்.
இந்த போட்டிகளில் மும்பை வாங்கேட ஸ்டேடியம் மற்றும் கொல்கத்தாவில் உள்ள
ஈடன் கார்டனில் நடைபெறுகின்றன. ஈடன் கார்டனில் நடக்கும் போட்டி தான்
சச்சின் விளையாடும் கடைசி போட்டியாகும்.
சச்சினின் கடைசி போட்டியை மறக்க முடியாத ஒன்றாக ஆக்க பெங்காள் கிரிக்கெட் வாரியம் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
சச்சினின் கடைசி ஆட்டத்தை காண வருமாறு பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஈடன் கார்டனில் சச்சின் விளையாடும் இறுதி ஆட்டத்தை காண ரசிகர்களுக்கு
வெறும் 5,000 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம்
பல்வேறு கிளப் உறுப்பினர்கள், பிரபலங்களுக்காக 67,000 இருக்கைகள்
ஒதுக்கப்படுகிறது.
சச்சின் ஓய்வு பெறுகிறார் என்ற செய்தியைக் கேட்டதும் எனது இதயத்
துடிப்பு நின்றது போன்று உணர்ந்தேன். இந்திய கிரிக்கெட்டின் இதயத் துடிப்பு
நின்றுவிட்டது. அவரையும், அவரது ஆட்டத்தையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை
என்றார் அமிதாப் பச்சன்.
No comments:
Post a Comment