பள்ளிக்கூடத்தில் திடீரென தீக்குளித்த மாணவி.. உயிர் ஊசல்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்
6ம் வகுப்பு படித்து வந்த மாணவி பள்ளி வளாகத்தில் இன்று திடீரென
தீக்குளித்து விட்டார். ஆபத்தான நிலையில் அவரை மருத்துவமனையில்
சேர்த்துள்ளனர்.
காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருபவர்
சினேகா. இவர் செவ்வாய்க்கிழமை காலை பள்ளி வளாகத்தில், தனது உடலில்
மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
பள்ளிக்கூடத்தில் திடீரென தீக்குளித்த மாணவி.. உயிர் ஊசல்
பள்ளிக்கூட இடைவேளையின்போது இந்த அசம்பாவிதத்தில் அவர் ஈடுபட்டார். அக்கம்
பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைத்து மாணவியை அரசு மருத்துவமனைக்குக்
கொண்டு சென்றனர்.
அங்கு ஆபத்தான நிலையில் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்
ஏன் தீக்குளித்தார் என்பது தெரியவில்லை.
No comments:
Post a Comment