ரஜினி சொன்ன கதைகள்: நல்ல நண்பர்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள்!
விழாவில் ரஜினி சொன்ன கதை இது: ஓரு பணக்காரனுக்கு ஏழை நண்பன் ஒருவன் இருந்தான். ஒரு சமயம் பணக்கார நண்பனுக்கு கொஞ்சம் பணத்தட்டுபாடு வந்துடுச்சி. அந்த நேரத்துல அங்கு வந்த ஏழை நண்பன், எரிச்சலும், கவலையோடும் இருக்கும் தன் பணக்கார நண்பனைப் பார்த்து எப்பிடி டா இருக்கே என்று வழக்கம் போல கேட்டான். எரிச்சலான மனநிலையில் இருந்த பணக்கார நண்பன், 'எனக்கு உடனே இருபது லட்சம் ரூபாய் தேவை. உன்னால் முடியுமா?' என்று கோபமாக கேட்டு விட்டு தன் அறைக்குள் சென்றான் . அவன் பின்னாடியே போன ஏழை நண்பன், 'அரை மணி நேரத்தில் பணம் கிடைத்தால் பரவாயில்லையா?' என்று கேட்டான். பணக்கார நண்பனுக்கு ஒரே அதிர்ச்சி. ஏழை நண்பனை ஏளனமாக பார்த்தான். அரைமணி நேரத்தில் பணம் வந்தது. பணக்கார நண்பனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. பணத்தை குடுத்தவாறு ஏழை நண்பன் சொன்னான்: நீ எப்போ பார்த்தாலும் அதிகமா பணத்தைத்தான் சேர்த்தாய் நண்பா.. நல்ல நண்பர்களை சேர்க்க மறந்துவிட்டாய். நான் அதைச் சம்பாதித்து கொண்டேன்டா!", என்றான். இருவரும் கட்டித் தழுவிக் கொண்டார்கள். இந்த உலகத்திலே எதை சேர்ப்பதைக் காட்டிலும் உண்மையான நண்பர்களைச் சேர்ப்பதுதான் உயிருக்கு பலம் தரும்... ஆகவே நட்பையும் நேசிப்போம்!
No comments:
Post a Comment