சோழிங்கநல்லூரில்
கணவருடன் ஏற்பட்ட தகராறில்
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தாயின் பிணத்துடன் தவித்த குழந்தையை கதவை உடைத்து மீட்டனர்
சோழிங்கநல்லூர், அக்.7-சோழிங்கநல்லூரில்
கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த இளம்பெண், தூக்குப்போட்டு தற்கொலை
செய்து கொண்டார். தாயின் பிணத்துடன் தவித்த குழந்தையை வீட்டின் கதவை
உடைத்து அக்கம் பக்கத்தினர் மீட்டனர்.கணவன்-மனைவி தகராறுகாஞ்சீபுரம்
மாவட்டம் சோழிங்கநல்லூர் சாரங்கபாணி தெருவில் வசித்து வருபவர் சரவணன்.
இவர், சொந்தமாக வேன் ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி ராஜகுமாரி (வயது 23).
இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. 2 வயதில் இன்பகுமார் என்ற
குழந்தை உள்ளது.நேற்று முன்தினம் காலை கணவன்-மனைவி இடையே
குடும்பத்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சரவணன் வேலைக்கு சென்று
விட்டார். வீட்டில் ராஜகுமாரி, தனது குழந்தையுடன் தனியாக இருந்தார்.குழந்தையின் அழுகுரல்இந்த
நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் சரவணன் வீட்டில் இருந்து
குழந்தை இன்பகுமாரின் அழுகுரல் கேட்டது. நீண்டநேரமாக குழந்தை அழுது கொண்டே
இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை தட்டினார்கள். கதவு
உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. நீண்டநேரம் ஆகியும் ராஜகுமாரி
கதவை திறக்கவில்லை. எனவே சரவணனுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால்
குழந்தையின் அழுகுரல் அதிகரித்துக்கொண்டே சென்றதால், அக்கம் பக்கத்தினர்
வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு சென்று பார்த்த அவர்கள்,
அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள்.தூக்கில் பிணம்வீட்டின்
உள்ளே மின்விசிறியில் தூக்குப்போட்டு கயிறு அறுந்த நிலையில் ராஜகுமாரி
பிணமாக கிடந்தார். தாயின் பிணத்துக்கு அருகில் பச்சிளம் குழந்தை அழுது
கொண்டு இருந்தது தெரிந்தது. உடனடியாக அவர்கள் குழந்தையை மீட்டு வெளியே
கொண்டு வந்தனர். பின்னர் இதுபற்றி செம்மஞ¢சேரி போலீஸ் நிலையத்துக்கு தகவல்
தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் செம்மஞ¢சேரி இன்ஸ்பெக்டர்
வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தற்கொலை செய்த
ராஜகுமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுபற்றி விசாரணை
நடத்தினார்கள்.பிணத்துடன் குழந்தை தவிப்புநேற்று முன்தினம்
காலை கணவருடன் ஏற்பட்ட தகராறில் ராஜகுமாரி மனம் உடைந்து காணப்பட்டதாக
தெரிகிறது. தனது குழந்தை இன்பகுமாருக்கு சோறு ஊட்டி படுக்க வைத்த பின்னர்,
ராஜகுமாரி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். தூங்கி
எழுந்த அந்த பச்சிளம் குழந்தை, தனது தாய் இறந்ததை அறியாமல் தாயின்
பிணத்துடன் தவித்து கொண்டிருந்ததும், பின்னர் அக்கம் பக்கத்தினர் வந்து
கதவை உடைத்து குழந்தையை மீட்டதும் விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார்
தெரிவித்தனர்.ஆர்.டி.ஓ. விசாரணைசம்பவம் குறித்து செம்மஞ¢சேரி
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்
ராஜகுமாரிக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ.
விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.பச்சிளம் குழந்தையை தவிக்க விட்டு விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment