சிறுமியிடம் எப்படி பலாத்காரம் செய்யப்பட்டாய் என்பதை செய்து காட்டச் சொன்ன போலீஸ்காரர்
டெல்லி: டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 13 வயது
சிறுமியிடம் ஆடையை அவிழ்த்துவிட்டு பலாத்காரம் எப்படி நடந்தது என்பதை
போலீஸ்காரர் ஒருவர் செய்து காட்டுமாறு கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி உத்தம் நகரில் கடந்த மாதம் 14ம் தேதி 13 வயது சிறுமி ஒருவர் பலரால்
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அந்த சிறுமி தனது தாய்
மற்றும் உறவுக்கார பெண்ணுடன் காவல் நிலையத்திற்கு சென்று புகார்
கொடுத்துள்ளார். அவரது புகாரின்பேரில் ஒரு சிறுமி மற்றும் தீபக் என்பவர்
கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அந்த சிறுமி கடந்த 4ம் தேதி மூத்த போலீஸ் அதிகாரிகளை சந்தித்து
உத்தம் நகர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் மீது புகார் கொடுத்தார். புகார்
கொடுக்க சென்ற தன்னிடம் தனது தாய் மற்றும் உறவுக்கார பெண் முன்பு ஆடையை
அவிழ்ந்துவிட்டு எப்படி பலாத்காரம் நடந்தது என்பதை செய்து காட்டுமாறு
போலீஸ் அதிகாரி ஒருவர் தன்னை வற்புறுத்தியதாக சிறுமி புகார் கொடுத்தார்.
இதையடுத்து சிறுமியை காவல் நிலையத்தில் வைத்து ஆடையை அவிழ்க்குமாறு
வற்புறுத்திய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment