Friday, January 10, 2014

ரூ. 17 லட்சம் பணத்தை வங்கியிலிருந்து எடுத்து தீவைத்து எரித்த பாக். சகோதரிகள் - www.tnfinds.com - Best site in the world.....


ரூ. 17 லட்சம் பணத்தை வங்கியிலிருந்து எடுத்து தீவைத்து எரித்த பாக். சகோதரிகள்

பாகிஸ்தானில் ஒரு விசித்திரமான, அதே சமயம் விபரீதமான சம்பவம் நடந்துள்ளது. இரு சகோதரிகள் வங்கியிலிருந்து ரூ. 17 லட்சம் பணத்தை எடுத்து அதை தீவைத்து எரித்து விட்டனர். அவர்கள் பணத்தைப் போட்டு தீவைத்து எரித்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தடுப்பதற்குள் முழுப் பணமும் எரிந்து போய் விட்டது. 

மேலும், அந்த சகோதரிகளில் மூத்தவர் கையில் இருந்த பிஸ்டலை எடுத்து அக்கம் பக்கத்தினரை மிரட்டவும் செய்ததால் அவர்கள் அருகில் போக அஞ்சினர். பணத்தைக் காப்பாற்ற வந்தவர்களைப் பார்த்து, இது எங்கள் பணம். இதை என்ன வேண்டுமா்னாலும் செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது. யாரும் அருகில் வரக் கூடாது.

 வந்தால் சுட்டு விடுவோம் என்று மிரட்டினார் அவர். அந்த சகோதரிகளின் பெயர் நஹீத், 40 வயது. ரூபினா, 35 வயது. ஜீலம், பிலால் நகரைச் சேர்ந்தவர்கள். 3 நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் தேசிய வங்கிக்குப் போன இவர்கள் அங்கு பணத்தை எடுத்தனர். பின்னர் வங்கிக்கு முன்பு வைத்து தீவைத்து எரித்னர். 

இந்த விவகாரம் போலீஸ் காதுக்குப் போய் அவர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் பணம் முழுவதும் சாம்பலாகி விட்டது. அந்த சாம்பலைப் போலீஸார் மீட்டனர். இந்த சகோதரிகளின் தந்தை பெயர் ராஜா முகம்மது இக்பால். இவர் சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

 இவரது சொத்தை விற்றுத்தான் ஒரு வருடத்திற்கு முன்பு ரூ. 28 லட்சம் பணத்தைப் பெற்றனர் இரு சகோதரிகளும். அதைத்தான் வங்கியில் போட்டிருந்தனர். அதிலிருந்துதான் ரூ. 17 லட்சத்தை எடுத்து தீவைத்து எரித்துள்ளனர். இரு சகோதரிகளும் திருமணம் செய்து கொள்ளவில்லை. 

இவர்களுக்கு இரு தம்பிகளும் உள்ளனர். ஆனால் அவர்களுடன் இவர்கள் சேர்ந்து வசிக்கவில்லை. தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். 

இவர்கள் இருவரும் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று இவர்களது வீட்டுக்கு அருகே வசித்து வருபவர்கள் கூறுகிறார்கள்.



No comments: