Friday, January 10, 2014

பெண் டாக்டரைத் தாக்கி துப்பாக்கியால் மிரட்டிய மாஜி அமைச்சரின் மகன்.. போலீஸில் புகார் - www.tnfinds.com - Best site in the world...


பெண் டாக்டரைத் தாக்கி துப்பாக்கியால் மிரட்டிய மாஜி அமைச்சரின் மகன்.. போலீஸில் புகார்

தூத்துக்குடி: பெண் டாக்டர் ஒருவரின் கணவர் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கச் சொல்லி அந்த பெண் டாக்டரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனின் மகன் மீது போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் முருகேஷ்குமார் (32). இவரது மனைவி கவுரி (30). இவர் ஹோமியோபதி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.


தனியார் மெடிக்கல் கம்பெனியில் பணிபுரிந்துவரும் முருகேஷ்குமார் தொழில் துவங்குவதற்காக தூத்துக்குடியை சேர்ந்த ஜெயசிங் என்பவரிடம் கடந்த ஆண்டு மே மாதம் ரூ.5 லட்சத்தை மீட்டர் வட்டிக்கு கடனாக வாங்கினார். ஆகஸ்ட் மாதம் வாங்கிய பணத்தை முருகேஷ்குமார் ஜெயசிங்கிடம் திருப்பிக் கொடுத்தார். 

இதில் வட்டி மற்றும் மீதமுள்ள தொகையான ரூ.1லட்சத்து 40ஆயிரத்தை பிறகு தருவதாக கூறியுள்ளார். பணத்தை குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்கமுடியாத முருகேஷ்குமார் ஜெயசிங்கிடம் பொங்கல் முடிந்த பிறகு பணம் தருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் பணத்தை கேட்டு ஜெயசிங், மற்றொரு நபருடன் முருகேஷ்குமாரின் வீட்டிற்கு இன்று சென்றார்.

 அப்போது வீட்டில் முருகேஷ்குமாரின் மனைவி கவுரியும், தாயாரும் இருந்துள்ளனர். பணத்தை கேட்டு ஜெயசிங் தரக்குறைவாக பேசியதை கவுரி தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ஜெயசிங் கவுரியை அடித்து உதைத்து கீழே தள்ளியதுடன் துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். 

தாக்குதலில் படுகாயம் அடைந்த கவுரி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஹோமியோபதி பெண் டாக்டரை தாக்கி, துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ஜெயசிங் முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சரான சி.த.செல்லபாண்டியன் மகன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

More Hot News Click Here...







No comments: