Thursday, January 9, 2014

தமிழக-இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை தாமதம் : தி.மு.க தலைவர் கருணாநிதி குற்றச்சாட்டு - www.tnfinds.com - Best site in the world....

தமிழக-இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை தாமதம் : தி.மு.க தலைவர் கருணாநிதி குற்றச்சாட்டு

சென்னை: இலங்கை மீனவர்களுடன் தமிழக மீனவர்கள் பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்யாமல், தமிழக அரசு தாமதம் செய்வதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் போதெல்லாம், பிரதமருக்கு கடிதம் எழுதுவதோடு கடமை முடிந்துவிட்டதாக முதல்வர் ஜெயலலிதா கருதுவதாக கூறியுள்ளார். இரு நாட்டு மீனவர்களிடையே பேச்சு வார்த்தை நடைபெறுவதற்கான தேதியை முடிவு செய்யும் விவகாரத்தில், மத்திய அரசுடன் தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் குற்றம்சாட்டியிருப்பதாக கருணாநிதி தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக மீனவர் பிரச்சனையை வாக்குகள் பெறுவதற்காக ஜெயலலிதா பயன்படுத்தி கொள்வதாக ஒரு ஆங்கில தொலைக்காட்சியில் வெளியான செய்தியையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக மீனவர் பிரச்சனையில் ஜெயலலிதா எந்த அளவிற்கு காலம் தாழ்த்துகிறார் என்பதை ஆங்கில தொலைக்காட்சி விளக்கியிருப்பதாகவும் கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார். மீனவர்களின் முக்கியமான பிரச்சனையில் மத்திய அரசு அக்கறை காட்டாமல் இருப்பது போல், பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதி வருவதாகவும் கூறியுள்ளார். 

More Hot News Click Here...

No comments: