Thursday, January 9, 2014

அரூர் அருகே பரபரப்பு ஆசிரியரை செருப்பால் அடித்த தலைமையாசிரியை - www.tnfinds.com - Best site in the world...

அரூர் அருகே பரபரப்பு

ஆசிரியரை செருப்பால் அடித்த தலைமையாசிரியை

அரூர்: அரூர் அடுத்த எஸ்.பட்டி நடுநிலைப்பள்ளியில் உதவி ஆசிரியரை,  தலைமையாசிரியை செருப்பால் அடித்த சம்பவத்திற்கு ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கண்டனம் தெரிவித்து, உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த எஸ்.பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1ம் வகுப்பு முதல் 8வது வரை உள்ள இந்த பள்ளியில், 204 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில், தலைமையாசிரியை செல்வராணி உட்பட 9 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 

கடந்த 2 தினங்களுக்கு முன்பு தலைமை ஆசிரியை செல்வராணிக்கும், உதவி ஆசிரியர் கலையரசனுக்கும் ரேங்க் பட்டியலில் வருகை பதிவு குறிப்பிடாதது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வாக்குவாதம் தடித்து, உதவி ஆசிரியர் கலையரசனை, தலைமையாசிரியை செல்வராணி செருப்பால் அடித்ததாக தெரிகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், உதவி ஆசிரியரை தரக்குறைவாக பேசியதுடன், செருப்பால் அடித்து அவமானப்படுத்திய தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி, அனைத்து ஆசிரியர் கூட்டணி சங்கங்களும் ஒன்று கூடி, அரூர் தொடக்க கல்வி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

More Hot News Click Here...

No comments: