Thursday, January 9, 2014

தமிழகத்தில் பிரமதர் வேடம் போட்டுப் பார்க்கும் 6 பேருக்கு பட்டை நாமம் தான்: ஈ.வி.கே.எஸ். - www.tnfinds.com - Best site in the world...


தமிழகத்தில் பிரமதர் வேடம் போட்டுப் பார்க்கும் 6 பேருக்கு பட்டை நாமம் தான்: ஈ.வி.கே.எஸ்.

சென்னை: தமிழகத்தில் 6 பேர் பிரதமர் வேடம் போட்டு கண்ணாடி முன்பு நின்று பார்த்துக் கொண்டிருக்கின்றனர் அவர்களுக்கு மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் நடந்த காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், யாராலும் காங்கிரஸ் கட்சியை தனிமைப்படுத்திவிட முடியாது. அதனால் தான் முன்பை விட தற்போது காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளுக்கு அதிக அளவில் கூட்டம் வருகிறது. 

காங்கிரஸை ஒழிப்போம் என்று கூறி வரும் மோடியைப் பற்றிய பல விஷயங்கள் தற்போது தான் வெளியே வருகிறது. தமிழகத்தில் 6 பேர் பிரதமர் வேடம் போட்டுக் கொண்டு கண்ணாடி முன்பு நின்று பார்க்கிறார்கள். அவர்களுக்கு மக்கள் பட்டை நாமம் போடப் போகிறார்கள். தேர்தலை தனியாக சந்திக்க காங்கிரஸ் தயாராக உள்ளது. கூட்டணி குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு எடுக்கும் என்றார்.

More Hot News Click Here...



No comments: