அக்கம் பக்கம்
'டேக் இட் ஈசி!'
'அரசியல் வாழ்வின் கடைசி காலத்தில், இப்படிப்பட்ட, கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதே...' என, தனக்கு நெருக்கமானவர்களிடம், கண்களை கசக்கியுள்ளார், பிரதமர் மன்மோகன் சிங். சமீபத்தில் அளித்த பேட்டியில், குஜராத் முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான, நரேந்திர மோடியை, கடுமையாக தாக்கி, பேசினார், பிரதமர். மோடியை தாக்கி பேசினால், காங்., மேலிடம், தன்னை, உச்சி குளிர பாராட்டும் என்ற நம்பிக்கையில் தான், உணர்ச்சிவசப்பட்டு, மோடியை தாக்கி பேசினார். வாழ்க்கையில், இந்த அளவுக்கு, கடுமையாக, யாரையுமே, அவர் தாக்கியதில்லை. ஆனால், அவர் பேட்டி வெளியான, அடுத்த சில நிமிடங்களிலேயே, சமூக வலைதளங்களான, 'டுவிட்டர், பேஸ்புக்' ஆகியவற்றில், பிரதமரை, 'பின்னி, பெடலெடுத்து' விட்டனர், விமர்சகர்கள். 'இதுவரை, பிரதமர் என்ற முறையில், இந்த நாட்டுக்கும், சமூகத்துக்கும் பேரழிவை ஏற்படுத்தியது நீங்கள் தான்' என்பது உட்பட, கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி, பிரதமரை வாட்டி எடுத்து விட்டனர். இதுபோன்ற விமர்சனங்களை, பிரதமர், சற்றும் எதிர்பார்க்கவில்லை. 'பிரதமர் என்று கூட பார்க்காமல், காது கருகும் அளவுக்கு திட்டித் தீர்க்கின்றனரே...' என, புலம்பிய அவர், 'அரசியலுக்கு வந்ததற்கு, இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்' என, நொந்து போய் இருக்கிறார். காங்., மேலிட தலைவர்களோ, 'பா.ஜ.,காரர்கள் தான், சமூக வலைதளம் என்ற முகமூடிக்குள் மறைந்து கொண்டு, உங்களை, 'பெண்டெடு'க்கின்றனர். இதற்காக, கவலைப்பட வேண்டாம். எவ்வளவு அடித்தாலும் தாங்குவதற்காக தானே, உங்களை பிரதமராக்கியுள்ளோம். டேக் இட் ஈசி...' என, ஆறுதல் கூறி, அவரை, அமைதிப்படுத்தி உள்ளனர்.
No comments:
Post a Comment