Friday, January 10, 2014

பக்க வாத்தியம் - www.tnfinds.com - Best site in the world...

பக்க வாத்தியம்

விழுப்புரம் எம்.பி., பேச்சு; நக்கலடித்த தொண்டர்கள்!

விழுப்புரத்தில், அ.தி.மு.க., சார்பில், பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசிய எம்.பி., ஆனந்தன், 'எனக்கு பேச வாய்ப்பளித்தவர்களுக்கும், நான் பேசக் கூடாது எனக் கூறிய, நல்ல உள்ளங்களுக்கும் நன்றி' என்று, தன் பேச்சை முடித்தார். இதைக் கேட்டு, மேடையிலிருந்த ரத்தத்தின் ரத்தங்கள், 'இதுக்கு தான், இவரு பேசக் கூடாதுன்னு சொன்னோம். 'மைக்' புடிக்கிற இடத்துல எல்லாம், 'அரசு நிகழ்ச்சிக்கு, அதிகாரிங்க, என்னைக் கூப்பிடறதில்லை'னு, குறை கூறுவதோடு, சக கட்சிக்காரங்க, ரகசியமா பேசறதையும், உளறிடுறாரு' என, தலையில் அடித்தபடி அமர்ந்திருந்தனர். எம்.பி.,யின் பேச்சாலும், அதற்கு, தொண்டர்கள் செய்த, 'ரியாக்?ஷனா'லும், அதிகாரிகள், 'திருதிரு'வென முழித்து, நிகழ்ச்சியை வேகமாக முடிக்கத் தயாராகினர்!

'பத்து லட்சம் ரூபாயை ரெண்டு கம்பெனில வாங்கணும்...!'

சென்னை மாதவரத்தில், திருச்சி மாநாடு தொடர்பான, திருவள்ளூர் மாவட்ட, தி.மு.க., ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், முன்னாள் மாவட்ட செயலர், கீ.வேணு பேசிய போது, 'அலமாதியில் நடந்த கூட்டத்தில், தேர்தல் நிதி, 1 லட்சம் ரூபாய் கொடுத்தேன். அதற்கு பிறகு, 10 லட்சம் ரூபாய் கொடுத்தேன். நம் மாவட்ட பொறுப்பாளர் சுதர்சனம், இன்னும், 10 லட்சம் தேர்தல் நிதி கேட்டிருக்கிறார். நான் கும்மிடிப்பூண்டியில், ரெண்டு கம்பெனிகாரன்களிடம் கேட்டிருக்கிறேன். 10ம் தேதிக்குள் வாங்கி கொடுத்துடுவேன்' என்றார். இதைக்கேட்டு, கூட்டத்தில் இருந்த குறும்புக்கார இளைஞர் ஒருவர், தன் அருகில் இருந்தவரிடம், 'மாப்ளே... நம்ம, 'பழைய மாவட்டம்' இன்னும், அதே, 'கெத்துல' இருக்கார் பார்த்தியா?' என்றார். அதைக் கேட்ட அவரது நண்பரோ, 'ஆமாமா... இப்படி லட்சக்கணக்குல, தேர்தல் நிதி கொடுக்கும் போதே தெரியுதே' என்று, 'கமென்ட்' அடித்தார்.

More Hot News Click Here....

No comments: