Thursday, January 9, 2014

அக்கம் பக்கம் - www.tnfinds.com - Best site in the world....

அக்கம் பக்கம்

'கம்பி எண்ண வச்சிடுவாங்க!'

மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான, ஜெய்ராம் ரமேஷுக்கு, எதிர்க்கட்சியினரும், அவரின் சொந்த கட்சியினரும், 'முந்திரி கொட்டை' என, பட்டப் பெயர் வைத்துள்ளனர்.கிராமப்புற திட்டங்களை செயல்படுத்துவதில், தொலை நோக்கு கண்ணோட்டத்துடன் செயல்படுவதாக கூறி, மாநில அரசுகளின் அதிகாரங்களில் மூக்கை நுழைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார், ஜெய்ராம். இதனால், பல மாநில முதல்வர்களும், அவர் மீது, பயங்கர கடுப்பில் இருக்கின்றனர்.

குறிப்பாக, பா.ஜ., ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், இதுகுறித்து, தங்கள் கட்சி தலைவர் ராஜ்நாத் சிங்கிடம், புகார் கொடுத்ததோடு, 'இந்த ஜெய்ராம் தொல்லையை, ஏதாவது பூச்சி மருந்து அடித்தாவது தடுக்க கூடாதா?' என, புலம்பினர்.உடனே, ராஜ்நாத் சிங், 'ஜெய்ராம் ரமேஷ், சூப்பர் முதல்வராக செயல்படுகிறார். வேண்டுமானால், அனைத்து மாநிலங்களிலும், முதல்வர்களை பதவி விலகும்படி கூறி விட்டு, இவரே, முதல்வராகி விடலாம்' என, சூடாக பேட்டி அளித்தார்.இதைப் பற்றி, ஜெய்ராமின் நண்பர்கள், அவரிடம், 'நீங்களும், ராஜ்நாத்துக்கு பதிலடி கொடுங்கள்' என, தூண்டி விட்டனர்.அவரோ, 'அட நீங்க வேற. அடுத்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் ஜெயிக்குமான்னு, டவுட்டா இருக்கு. பதவியில் இருந்தே, பழக்கப்பட்டு விட்ட நமக்கு, இனி என்ன செய்வோம் என்ற கவலை வதைக்கிறது. இந்த லட்சணத்தில், ராஜ்நாத்துக்கு பதிலடி கொடுப்பதா? அவங்க ஆட்சிக்கு வந்தால், கம்பி எண்ண வச்சுடுவாங்க' என, கோபத்தில் கத்தியதுடன், அவர்களை வீட்டை விட்டு விரட்டி, கதவை அடைத்து விட்டார்.

More Hot News Click Here..



No comments: