Thursday, January 9, 2014

மோதலை தவிர்க்க விஐய் - அஜீத் ரசிகர்கள் புது டெக்னிக் - www.tnfinds.com - Best site in the World

மோதலை தவிர்க்க விஐய் - அஜீத் ரசிகர்கள் புது டெக்னிக் 

 


அஜீத்-விஜய் படங்கள் பொங்கலன்று ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால் மோதலை தவிர்க்க ரசிகர்கள் புதுடெக்னிக் கடை பிடிக்கின்றனர்.
அஜீத் நடித்திருக்கும் படம் வீரம். சிறுத்தை சிவா டைரக்டு செய்திருக்கிறார். விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கிறது. விஜய் நடித்துள்ள படம் ஜில்லா. நேசன் இயக்கி இருக்கிறார். ஆர்.பி.சவுத்ரி தயாரித்திருக்கிறார். கடந்த 7 வருடங்களுக்கு முன்பு விஜய் நடித்த போக்கிரி, அஜீத் நடித்த ஆழ்வார் படங்கள் பொங்கல் தினத்தில் ஒரேநாளில் வெளியானது. அதன்பிறகு வரும் பொங்கலன்று இவர்கள் நடித்த படங்கள் நேருக்கு நேர் ரிலீஸ் ஆகிறது. இதையடுத்து இரு ஹீரோக்களின் ரசிகர்களுக்கிடையேயும் போட்டி தொடங்கியுள்ளது. சில ஊர்களில் நேற்று தியேட்டர்களில் பேனர், தோரணம் அமைக்க போட்டி நடந்தது. வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டுவதிலும் போட்டி உள்ளது. படத்தை மட்டும் ரசியுங்கள் மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டாம் என்று அஜீத், விஜய் என இருவருமே தங்கள் ரசிகர்களுக்கு நேற்று வேண்டுகொள் விடுத்துள்ளனர். இதுபற்றி அஜீத் ரசிகர் மன்ற நிர்வாகிகளில் ஒருவரான சச்சின் மணி என்பவர் கூறும்போது, ரசிகர்களுக்கு இடையே மோதல் நிகழ்வதற்கான எந்த சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். 

எனவே வீரம் பேனர் பிரிண்ட் செய்யும்போதே விஜய்யின் ஜில்லா வெற்றி பெற வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வாசகங்கள் இடம்பெறச் செய்துள்ளோம். சில பேனர்களில் அஜீத், விஜய் இருவரின் புகைப்படங்களும் இடம்பெறுமாறு பிரின்ட் செய்துள்ளோம். எங்களின் தல இதை விரும்புவார் என்று உறுதியாக நம்புகிறோம் என்றார். அதேபோல் விஜய் மன்ற பேனர்களில் அஜீத்தின் வீரம் பட வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து வாசகங்கள் பதிக்கப்பட்டிருக்கிறது. விஜய் மன்ற நிர்வாகிகளில் ஒருவரான இளங்கோ கூறும்போது, இதையெல்லாம் தாண்டி வழக்கமான ரசிகர்களின் கொண்டாட்டம் இருக்கும் என்றார்



More News Click Here............ 

No comments: