உடல் உறுப்பு தானம் பதிவு- மத்திய, மாநில அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
சென்னை: உடல் உறுப்பு தானம் பதிவு தொடர்பாக மத்திய, மாநில அரசுக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ் விடுத்துள்ளது. ஆனந்தராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கில், தமிழக சுகாதாரத்துறை செயலர், மதுரை டீன் பதில் மனுதாக்கல் செய்ய நீதிபதிகள் சுதாகரன், வேலுமணி உத்தரவிட்டுள்ளனர். மேலும் உடல் உறுப்பு சிகிச்சை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மத்திய சுகாதார செயலருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு விசாரணையை ஜனவரி 31-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment