Thursday, January 9, 2014

ஊட்டி அருகே பெண்ணை கொன்றுவிட்டு சுற்றித் திரியும் புலி: 45 பள்ளிகள் மூடல் - www.tnfinds.com - Best site in the world...


ஊட்டி அருகே பெண்ணை கொன்றுவிட்டு சுற்றித் திரியும் புலி: 45 பள்ளிகள் மூடல்

நீலகிரி: ஊட்டி அருகே புலி ஒன்று சுற்றித் திரிவதால் அங்கு உள்ள 45 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கடந்த 3 நாட்களில் மிருகங்கள் தாக்கி 3 பேர் பலியாகியுள்ளனர்.

 இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் பெண் ஒருவர் நேற்று புலி தாக்கி பலியானார். இந்நிலையில் அந்த புலி குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் உள்ள காட்டில் சுற்றித் திரிவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதையடுத்து புலியை பிடிக்கும் முயற்சியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இன்று அதிகாலை 2 மணி வரை மாவட்ட கலெக்டர் ஷங்கர் மற்றும் அதிகாரிகள் காட்டில் இருந்து புலியை தேடும் பணியை பார்வையிட்டனர். இந்நிலையில் ஊட்டியை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் 45 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

இதற்கிடையே குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் வன விலங்குளை விரட்டி அடிக்க கும்கி யானைகளை வனத்துறை அதிகாரிகள் வரவழைத்துள்ளனர்.

More Hot News Click Here...








No comments: